Main News
ரணிலின் பதிலில் அமைதியான தினேஷ்
அமெரிக்காவினதும் இலங்கை அரசாங்கத்தினதும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்தினையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினரும் மஹிந்த அணி யின் பிரதானியுமான தினேஷ் குணவர்த்தன நேற்று பாராளுமன்றத்தினுள் அமைதியாக சிரித்தவாறே அமர்ந்து கொண்டார். மேற்படி தீர்மானத்தை வாசித்துப் பார்க்கவில்லை என்று கூறும் எனது நெருங்கிய உறுப்பினர் (தினேஷ் குணவர்த்தன) அதனை வாசித்து அறியாது எவ்வாறு தாய்நாட்டைப் பாதுகாப்போம் எனும் பெயரில் நேற்று (நேற்று முன்தினம்) மாநாட்டை நடத்த முடிந்தது என்று கேட்டபோதே உறுப்பினர்…
ஜனாதிபதி + பிரதமரிடம் செயற்திட்ட அறிக்கையை, சமர்ப்பிக்க ஜம்இய்யத்துல் உலமா தீர்மானம்
நேற்று (19.10.2015) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் தஃவா மற்றும் தொண்டர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு ஜம்இய்யாவின் தலைவர் தலைமை தாங்கினார். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் நிறைவு பெறும் இத்தருணத்திலும் வாழ்க்கையையே வாழ்கின்றனர். இவர்களின் மீள் குடியேற்றத்தை பூரணப்படுத்தி நல்லதொரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்றை ஜம்இய்யா குறித்த அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. மன்னார், யாழ்ப்பாணம்,…
மஹிந்தவை புகழ்ந்து பேசுவதற்கு, நான் எப்போதும் தயார் – ரணில்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தான் புகழ்ந்து பேசுவதை ஐ.ம.சு.மு. வினால் பொறுத்துக்கொள்ள முடியாமலிருப்பது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிந்தவை புகழ்ந்து பேசுவதற்கு தான் எப்போதும் தயாராகவிருப்பதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று (20) செவ்வாய்க்கிழமை தனது ஜப்பான் விஜயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்தார். இதன்போது அவர், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜப்பான் நீதிபதியான மொடோ றகூசியை அழைத்திருந்ததை ஜப்பானின் பிரதமர்…
ஜனவரி.08 அலரிமாளிகை சதி முயற்சி ;சீ.சீ.ரீ.வி. பதிவுகள் அனைத்தும் அழிப்பு
கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அலரி மாளிகையில் தீட்டப்பட்டதாக கூறப்படும் சதி தொடர்பில், முக்கிய ஆதாரமாக கருதப்படும் அலரி மாளிகையின் சீ.சீ.ரீ.வி.கண்காணிப்பு கமரா பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் கீழ், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அதன் அறிக்கை மேலதிக ஆலோசனைகளுக்காக சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எவ்வாறாயினும்…
மஹிந்தவின் ஊடகப் பேச்சாளரிடம் வாக்குமூலம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட வாக்குமூலம் வழங்குவதற்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவிலிருந்த பல காணொளிகள் காணாமல் போனமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சஜின் வாஸ் சிங்கப்பூர் செல்ல அனுமதி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன 5 நாட்களுக்கு மட்டும் சிங்கப்பூர் செல்ல கொழும்பு சிரேஷ்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதியளித்துள்ளார். சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை செய்யட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கவேண்டுமென கோரி, நேற்று கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் சஜின் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆராய்ந்த பின்னர், 5 நாட்களுக்கு மட்டும் சிங்கப்பூர் சென்று திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“சமூக வலைத் தளங்களுக்கு எதிராக வருகிறது புதிய சட்டம்”
சமூக வலைத்தளங்களில் தனி நபரை இழிவுபடுத்தும் வகையிலான பதிவேற்ற ங்களுக்கு எதிராக புதிய சட்டமொன்றை அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் வழக்குகளின் காலதாமதத்தை குறைப்பதற்கு விசேட நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.நீதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற சட்டம் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுக்க ளின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தொட ரின் பின்னரே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில்…
அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கிறது
சர்வதேச அழுத்தங்கள் மற்றும் உள்ளக அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் எமது அரசாங்கம் இன்று மிகச்சரியான பாதையில் பயணித்து வருகின்றது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். மஹிந்தவிடம் இருந்து நாட்டை மீட்டபோதே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் சர்வதேச கொள்கைகள் மற்றும் உடன்படிக்கைகள் தொடர்பில் மஹிந்த அணியினர் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில் அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்….
சோபித தேரரின் நலம் விசாரிக்கச் சென்ற மஹிந்த
சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதுளுவாவே சோபித தேரரின் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். கடந்த பதினெட்டாம் திகதி இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. கடுமையான சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதுளுவாவே சோபித தேரரின் நலனை விசாரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ச குறித்த மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வருகை தந்துள்ளார். இதன் போது இருவரும் சுமார் அரை மணிநேரம் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்….
ரோயல் கல்லூரி மாணவர்களின் நடைப்பயணத்தில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு
எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள ரோயல் கல்லூரி மாணவர்களின் நடைப்பயணம் ஒன்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளனர். செயற்கை நிறமூர்த்தங்கள் மற்றும் சுவையூட்டிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்களுக்குப் பதிலாக தண்ணீர் அருந்துதல், புகைப்பழக்கத்தை ஒழித்தல், போசாக்கான உணவுகளை மட்டும் தெரிவு செய்தல் ஆகிய மூன்று விடயங்களை வலியுறுத்தி இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. ரோயல் கல்லூரியின் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். 24ம் திகதி காலை ஏழுமணிக்கு நெளும்பொக்குண அருகில் ஆரம்பமாகும்…
டிஜிட்டல் என்றால் என்னவென்றே எனக்குத் தெரிந்திருக்கவில்லை! அமைச்சர் ஹரின்
டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவி கிடைக்கும் வரை டிஜிட்டல் என்றால் என்னவென்றே தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மொனராகலை, வெல்லவாய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நமது பிரதேசத்தில் எப்போது மழை பெய்யும், காலநிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை நம் கைகளில் வைத்திருக்கும் மொபைல் போன்கள் ஊடாக…
இராவணன் தொடர்பில் கிரமமான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!- புத்திக்க பத்திரண
இராவண மன்னன் தொடர்பில் கிரமமான ஆய்வு நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இது தொடர்பில் புத்திக்க பத்திரண யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். இராவண மன்னன் தொடர்பில் திடமான வரலாற்றுத் தகவல்கள் இல்லாத போதிலும், கிரமமான ஆய்வின் மூலம் இராவண மன்னன் தொடர்பிலான மக்களின் எண்ணக்கருக்களை மேம்படுத்த முடியும். இராவண மன்னனிடம் காணப்பட்ட அறிவினை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். இலங்கை வரலாற்றில்…
