Headlines

ஒஸ்லோவின் உதவி மேயராக இலங்கைத் தமிழ்ப்பெண்

இலங்கைத் தமிழ்ப்பின்னணியினைக் கொண்ட 27 வயதுடைய  கம்ஷாயினி குணரட்ணம் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோ மாநகரத்தின் உதவி மேயராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பதினெட்டு வருடங்களுக்குப் பின் ஒஸ்லோவில் ஆட்சியை மீண்டும் தொழிற்கட்சி வேறிரு கட்சிகளுடன் இணைந்து கைப்பற்றியுள்ளது. அரசியலைத் தனது முழுநேரப் பணியாகக் கொண்ட கம்ஷாயினி குணரத்னம் ஒஸ்லோ தொழிற்கட்சியின் உதவி மேயராக  இளம் வயதிலேயே தெரிவாகியுள்ளார். தொழிற் கட்சியின் இளைஞர் அணியில் தலைவராக இருந்து, ஒஸ்லோவின் உதவி மேயராக பெரும் ஆதரவோடு தெரிவானார். ஒஸ்லோவில் விருப்பு வாக்குகள் அடிப்படையில்…

Read More

4-வது முறையாக அணுகுண்டு சோதனைக்கு தயார் ஆகிறது, வடகொரியா

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா அடுத்தடுத்து 3 முறை அணுகுண்டு சோதனை நடத்தியது. இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அந்த நாடு, 4-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த தயார் ஆகி வருவதாக தெரிய வந்துள்ளது. வடகொரியாவில் உள்ள நயாங்பயான் அணு வளாகத்தை உளவாளிகள், தொழில்நுட்ப நுண்ணறிவு முறைகளை பயன்படுத்தி கண்காணித்து வந்ததில், இது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம், தனது அணு உலைகளை…

Read More

இலங்கை -யூத நட்புறவுச் சங்கம் உதயம்

இலங்கைக்கும் சர்வதேச யூத அமைப்புகளுக்குமிடையிலான நட்புறவுச் சங்கம் ஒன்று நேற்று உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்க யூத அமைப்புகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்சா டி சில்வா மேற்கொண்டிருந்தார். அமெரிக்க யூத அமைப்பின் பிரதிநிதிகள் இதுகுறித்து கருத்து வெளியிடும்போது இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில் இரு தரப்பு ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமது அமைப்பு முயற்சிகளை முன்னெடுக்கும் என்று தெரிவித்துள்ளனர். இலங்கை வந்துள்ள அமெரிக்க…

Read More

சமயத் தலைவர்களின் உதவி அவசியமானது – மைத்திரி

சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின் பிரதிநிதிகள் குழு இன்று (21) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர். சகல இனங்களுக்கிடையேயும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு சகல சமயத் தலைவர்களினதும் உதவி அவசியமானது என ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

Read More

கொண்டையாவுக்கு பிணை

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டையா மீது தொடரப்பட்டிருந்த இரண்டு வழக்குகளில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொண்டையாவை இன்று கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பேதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இவர் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

விஜயதாச ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சிலர் சட்டத்துக்கு அப்பால் சென்று சந்தேகநபர்களுக்கு தண்டனை வழங்குவதாக  கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்யும் போதே உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க விஜயதாச ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டி.பி வீரசூரிய நியமனம்!

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டி.பி வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆணைக்குழுவின் மற்றும் சில பதவிகளுக்கு நீதியரசர் ரஞ்சித் சில்வா மற்றும் நெவில் குருகே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஆணையாளராக டி.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.டபிள்யூ.ஏ.சலாம் , எம்.எஸ். செனவிரத்ன. தாரா விஜேதிலக்க , பிரதாப் இராமானுஜன், விஜயலக்ஷ்மி ஜெகராஜசிங்கம் , எம்.எல்.எம். மெண்டிஸ், ஆர்.ரனுக்கே மற்றும் சரத் ஜயதிலக்க ஆகிரோர் ஆணைக்குழுவின் மற்றைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கை வருகிறார் ஐ.நா உதவிச்செயலர்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்காக அண்மையில் நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரியுடன், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நடத்திய பேச்சுக்களை அடுத்தே, அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். இலங்கை அதிகாரிகள் மற்றும் பங்காளர்களுடனான தொடர்ச்சியான கலந்துரையாடலுக்கு, ஐ.நா உதவிச் செயலரின் இந்தப் பயணம் வாய்ப்பை வழங்கும் என்றும், இலங்கைக்கு உதவும் வகையிலான, நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான…

Read More

உள்ளூராட்சி தேர்தலிலும் தனது ஆதரவு ஐ.தே.மு.வுக்கு – அமைச்சர் ராஜித

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலிலும் தனது ஆதரவினை ஐக்கிய தேசிய முன்னணிக்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்கள் பலரும் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு கட்சிகளும் போட்டியிட்டு இறுதியில் ஒரு தரப்பினராக செயற்படுவார்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்கள் தேசிய அரசாங்க கருத்திற்கு செல்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை, எனினும் போட்டியிட்டதன் பின்னர் தேசிய அரசாங்க முறைக்கமைய தான் செயற்பட நேரிடும் என சுகாதார அமைச்சர்…

Read More

சவூதியிடமிருந்து 30,000 அல்குர்ஆன் மற்றும்  கிதாபுகள்(படங்கள்)

சவூதி அரேபிய அரசாங்கத்திடமிருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட சுமார் 30,000 அல்குர்ஆன் மற்றும் பெறுமதி வாய்ந்த கிதாபுகள் இலங்கையில் உள்ள மத்ரஸாக்கள், அநாதை நிலையங்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களுக்கு வினியோகிக்கும் நிகழ்வு 20/10/2015 ஜம்ய்யதுஸ் ஸபாப் நிறுவன கேட்போர் கூடத்தில் மொளலவி எம்.எஸ்.எம் தாஸிம் தலைமையில் இடம் பெற்றது. இதில் சவூதி அரேபிய பிரதி நிதி, சவூதிஅரசாங்கத்திடமிருந்து அல்குர்ஆன் பிரதிகளை பெற உதவிய புனித ஹரம் ஸரீபில் கடமையாற்றும் ஸாதிக் ஹாஜியார், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைவர்,…

Read More

நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம்: ஜனாதிபதி தலைமை

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதே இந்த சந்திப்பில் நோக்கமாகும். தங்கள் கட்சிக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவர்…

Read More

இந்திய பஸ்கள் கொள்வனவில் பாரிய மோசடி

இந்­தி­யா­வி­லி­ருந்து பஸ்கள் கொள்­வ­னவு செய்­ததில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. இதில் முன்னாள் ஆட்­சியில் அமைச்ச­ரொ­ரு­வரின் பங்­க­ளிப்பு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தோடு லஞ்சம் பெற்றுக் கொண்­டது தொடர்­பிலும் தற்­போது சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க நேற்று சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற உள்­நாட்டு திறை­சேரி உண்­டியல் கட்­டளைச்சட்­டத்தின் கீழான தீர்­மானம் தொடர்­பான விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றும்­போதே நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இவ்­வாறு தெரி­வித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்; வரி தொடர்­பான தேசிய…

Read More