Main News
பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் கிண்ணியா தளவைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் தற்போதைய குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது….
கிண்ணியா தளவைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் தற்போதைய குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இடம் பெற்றது.திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் அவர்களின் விசேட தலைமையின் கீழ் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது. கிண்ணியா தளவைத்தியசாலையில் தற்போது நிலவி வரும் ஆளனிப் பற்றாக்குறை தொடர்பாகவும் கடந்த காலங்களில் டெங்கு நோயினால் 23 உயிர்கள் பழியாக்கப்பட்டன இவ்வாறான விடயங்கள் இனிமேலும் இடம்பெறா வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும் ஆளணி பற்றாக்…
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கெளரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி கலந்துகொண்டார்..
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பிரதேசத்தின் மூத்த கல்வி மான் மற்றும் பிரதேசத்தின் முதலாவது பொது வைத்திய நிபுணர் ஆகியோர்களை கௌரவிக்கும் நிகழ்வு அமீர் அலி பவுண்டேசனின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. அமீர் அலி பவுண்டேசனின் தலைவரும் இராஜங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம் பெற்ற…
பிரதியமைச்சர் அமீர் அலி மூலமாக ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள கஸ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!!!
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள கஸ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு நேற்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் ஒலி பெருக்கி சாதனங்களும் தளபாடங்களும் கையளிக்கப்பட்டன. ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள கேணிநகர் மதீனா வித்தியாலயம் மற்றும் மாஞ்சோலை அல் ஹிறா வித்தியாலயம் என்பவற்றுக்கு ஒலி பெருக்கி சாதனங்களும் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்திற்கு அலுவலக தளபாடங்களும் தனது பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது….
விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர தின விழா
ஏ.டீ.எப். கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (04) விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர (தேசிய) தின விழாவின் போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை வட்டார அமைப்பாளரும் பிரதேச உறுப்பினருமான ஆஷிக் அவர்கள் கலந்து தேசியக்கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் ஊர் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார்.
இலங்கை நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாவெவ ஜும்மா பள்ளி நிருவாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம், சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் இப்பொலோகம பிரதேசசபை உறுப்பினர் நளீம், கலாவெவ ஜும்மா பள்ளிக்கு பொறுப்பான மௌலவி, விஜித்தபுர பெளத்த விகாரையின் பிக்கு, இப்பொலோகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, ஊர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது கலாவெவ மைய வாடிக்கு…
இஷாக் ரகுமான் எம் பி தென்கிழக்கு பல்கலை மாணவர்களை சிறையில் பார்வையிட்டார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் . அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை இன்று (04) பார்வையிட்டார். மாணவர்களின் விடுதலைக்காக பல்வேறு மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர்களிடம் தெரிவித்தார். இதே வேளை இந்த மாணவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுபதற்காக நாளையும் (05) ACMC சட்டத்தரணிகள் குழு அனுராதபுரம் செல்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு…
புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
உள்நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எந்தவித அடிப்படை வசதியின்றி தமது வாழ்க்கையை மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வந்த நிலாவெளி இக்பால் நகர் alminar ( ஆக்குவத்த)புதிய மீனவ கிராம மக்களுக்கான 25 வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு வைபவரீதியாக நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை திருகோணமலை நகர சபையின் உறுப்பினர் எம்.எம்.முக்தார் தலைமையில் நடைபெற்றது. இத் திட்டமானது வீடமைப்பு மற்றும் நிர்மானத் துறை கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவருமான இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் கலன்பிந்துனுவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோமராங்கல்ல கிராம மக்களுக்கு பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
முஸ்லீம் கலாசார திணைக்களத்தின் சுதந்திரதின நிகழ்வுகளில் மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி பங்கேற்பு
முஸ்லீம் கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஜாவத்தை பள்ளியில் இடம் பெற்ற 71வது சுதந்திரதின நிகழ்வுகள் அமைச்சர் ஹலீம் தலைமையில் இடம் பெற்றது இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி பாராளுமன்ற உருப்பினர் பௌசி, மேல் மாகாண ஆளுனர் அஸாத் சாலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்
அமைச்சர் றிசாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் பல்வேறு வேலைத்திட்டங்கள்
அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னால் தவிசாளரும் நுகர்வோர் அதிகார சபை நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்களின் முயற்சியின் பயனாக கௌரவ அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களது நிதியொதுக்கீட்டில்… பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் புதிய கட்டட வேலைகளுக்காக ரூபா இருபது இலட்சம் பெறுமதியான வேலைத்திட்டம் அல்ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு புதிய நுழைவாயில் அமைக்கும் பணிக்காக ரூபா இருபது இலட்சம் பெறுமதியான வேலைத்திட்டம் சின்னப்பாலமுனை றியாழுல் ஜன்னா ஜும்ஆ பள்ளிவாசல் சுற்றுமதில் அமைக்க ரூபா பத்து இலட்சம்…
பாலமுனை றக்பி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்த வரவேற்கும் நிகழ்வு
இன்று (2019.02.03) பாலமுனை றக்பி (RUGBY )விளையாட்டு கழகத்தினால்(PRSC) அண்மையில் Pre School Education Bureau இன் தவிசாளராக நியமிக்கப்பட்ட முன்னால் கிழக்கு மாகாண அமைச்சர் கௌரவ MS.உதுமாலெப்பை JP அவர்களையும், அம்பாறை மாவட்ட கிரிடா சக்தி றக்பி அணியையும் வரவேற்கும் நிகழ்வு அதன் தலைவர் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் ILM.பாயிஸ் ஆசிரியர் தலைமையில் “கசாமரா” உணவகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக MS.உதுமாலெப்பை – Chairman (Pre School Education Bureau) அவர்களும், கௌரவ அதிதியாக நுகர்வோர் அதிகார…
கால் நடை வளர்ப்பாளர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை.
திருகோணமலை மாவட்டம் பூராகவும் அண்மையில் கால் நடை வளர்ப்பாளர்கள் பாரிய நஷ்டங்களை எதிர் கொண்டுள்ளதுடன் தங்களது கால் நடைகள் பல நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை சந்திக்க நேரிட்டது பண்னை உரிமையாளர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட மாகாண மத்திய அரசாங்க அமைச்சுக்களிடம் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் இன்று (03) பணிப்புரை வழங்கியுள்ளார். உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அண்மையில் கால்…
