Headlines

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (08) கலந்து கொண்டார். பாடசாலையின் அதிபர் ஆர் லிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன், பிரதேச செயலாளர் உதயராசா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மது, மொஹிதீன், வவுனியா நகரசபை உறுப்பினர்களான பாரி, லரீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு அமைச்சர்களான ரிஷாட் , கபீர் பங்கேற்பு!

முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தில் புதனன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சர் கபீர் ஹாஷிமின் ஏற்பாட்டில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கேற்புடன் பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இப்பேச்சு வார்த்தையில் , தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை , கொழும்பு தெற்கில் ஆண் பாடசாலை ஒன்றை அமைத்தல்,மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்தல் ,கொல்லன்னாவை பிரதேசத்தில் தமிழ் மொழி மூலப்பாடசாலை ஒன்றை அமைத்தல், யாழ்ப்பாணத்தில்…

Read More

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல்  பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. இதன் போது, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தலைமையில் விரிவான ஆராய்வுகள் முன்னெடுக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பைஷர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, செய்யித் அலிஸாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ்,…

Read More

தமது விடுதலைக்காக நன்றி தெரிவிக்கும் பெற்றோர்களும்,மாணவர்களும்

பாரதுாரமான குற்றத்தை செய்தார்கள் என்று தெரிவித்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் எண்மாரின் விடுதலை தொடர்பில் முயற்சிகளை செய்த அனைவருக்கும் நன்றிகளை கைதான மாணவர்களின் பெற்றோர்களும்,மாணவர்களும் தெரிவித்துள்ளனர். தங்களது விடுதலைக்காக உதவிகளை செய்தமைக்காக நேற்று பெற்றோர்கள் சிலரும்,மாணவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களை அவரது அமைச்சில் சந்தித்து தமது நன்றிகளை தெரிவித்தனர். மாணவர்கள் கைது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதனையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த விடயத்துக்கு பொறுப்பான…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதியுதவியில் விசேஷட தேவையுடையோருக்கு உபகரண உதவிகள்!!!

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சர் கெளரவ அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட விசேட தேவையுடையோர்களுக்கான சங்கங்களுக்கு போட்டோ கொப்பி இயந்திரங்கள் வழங்கள் மற்றும் பைசல் நகர் CTB தக்கியா மஸ்ஜித்கான ஒலி பெருக்கி உபகரணங்கள் வழங்கள் நிகழ்வானது 07.01.2019.இன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் DR.ஹில்மி முகைதீன் பாவா அவர்களினால் அவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன….

Read More

பால்மா விவகாரம் : உண்மைகளை கண்டறிய உத்தரவு!!!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் மற்றிம் வர்த்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் புத்திக பத்திரன ஆகியோர் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவு பிரப்பித்துள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சர் புத்திக பத்திரன இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால்…

Read More

அமைச்சர் அமீர் அலியின் நிதியொதிக்கீட்டின் மூலம் காவத்தமுனை தொடக்கம் ஜப்பர் திடல் வரை மின் இணைப்பு.

விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களிடம் ஜப்பார் திடல் (பள்ளிமடு மக்கிளானை) மக்கள் விடுத்த வேண்கோளுக்கமைவாக இராஜாங்க அமைச்சரின் முயற்சியின் காரணமாக 2 கோடி ரூபா பெருமதியான நிதியொதிக்கீட்டின் மூலம் காவத்தமுனை தொடக்கம் ஜப்பர் திடல் வரைக்கும் மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்த கௌரவ இராஜாங்க அமைச்சர் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எல்.எம்.கலீல், கௌரவ தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பிரதேச…

Read More

துறை முக அதிகார சபை தலைவர் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூபை சந்தித்து பேச்சு!!!

துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களுக்கும், துறை முகங்கள் அதிகார சபை தலைவர் காவன் டீ ரத்நாயக்க  ஆகியோருக்குமிடையில் நேற்று (06) புதன் கிழமை மாலை விசேட சந்திப்பொன்று இடம் பெற்றது.   குறித்த சந்திப்பானது பிரதியமைச்சரின் அலுவலகத்தில் இடம் பெற்றது.துறைமுக அதிகார சபை தலைவர் பிரதியமைச்சராக பதவியேற்றதன் பின் இதுவே  முதல் சந்திப்பாகும்.துறைமுக அபிவிருத்தி மற்றும் திருகோணமலை துறைமுகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு துறை முக விடயங்கள் தொடர்பில் ஆராயுமாறு பிரதியமைச்சர்…

Read More

அனுக்கன இளைஞர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவு.

பண்டுவஸ்நுவர தொகுதி அனுக்கன கிராமத்திற்க்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டாரக் கிளை அமைக்கும் நிகழ்வுமும் கடந்த (03) மாவட்டத்தலைவரும் சதொச பிரதித்லைவரும் , முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொதுஜன பெரமுனையில் இருந்து புதிதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இனைந்து கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பண்டுவஸ்நுவர தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்ற சகோதரர் ரியாதின் ஏற்ப்பாட்டில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அதிகமான…

Read More

அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் ஏற்பாட்டில் 71 சுதந்திர நிகழ்வு..

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் 71 சுதந்திர நிகழ்வு பொல்கஹவெல ஒரலியத்த அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் ஏற்ப்பட்டில் சிறப்பாக இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட செயலாளரும் முன்னால் பிரதேசசபை உறுப்பினரும் அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் நிறுவுனருமான அன்பாஸ் அமால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் சதொச பிரதித் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA)  அவர்கள் பிரதம அதிதியாக பங்கேற்று தேசிய கொடி…

Read More

முஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம்; நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்!

30 வருட யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி மீண்டும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் மற்றொரு சிறுபான்மையினரை சீண்டி அவர்களை தேவை இல்லாமல் வம்பிற்கு இழுக்கும் செயற்பாடுகளுக்கு நாம் பலியாகி விடக்கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாத்தாண்டியஇ தும்மோதர முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது. நாம் எந்த விதமான சச்சரவுக்கும் செல்லாமல் இருந்த போதும் எங்களை…

Read More

இப்பிரதேசத்தின் தலைசிறந்த பாடசாலையாக செந்நெல் சாஹிராவை மாற்ற அனைவரும் ஒன்றினைய வேண்டும்  பாராளுன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில்

சம்மாந்துறை கல்வி வலயத்தில் தற்காலிக கொட்டில்களில் இயங்கும் வகுப்பறைகளை நிரந்தர கட்டிடங்களாக அமைத்துதருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் உறுதிமொழி வழங்கியதாக செந்நெல் சாஹிரா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் குறிப்பிட்டார். அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாடவிதானச் செயற்பாடுகளுக்கு வழங்குகின்ற முக்கியத்துவத்திற்கு அப்பால் விளையாட்டு போன்ற இனைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதன் மூலம் மாணவர்கள் தங்களது ஆளுமைகளை வளர்த்துக்கொண்டு சமூகம்…

Read More