Main News
யுவதிகளின் தொழில் முயற்சிக்கு கரம் கொடுத்த ACMC தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்கள்
மன்னார் நகர சபை எல்லைக்கு உட்பட்ட. பணங்கட்டுக்கொட்டு கிராம யுவதிகளுக்கான தையல் பயிற்சி வகுப்பு இன்றைய தினம் ரெஜீவன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளர் றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர்களான நஹுசீன், உவைசுல் ஹர்ணி, வடிவுக்கரசி, டிலானி…
ACMC நாவிதன்வெளி இளைஞர்கள் சந்திப்பு.
நாவிதன்வெளி பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர்கள் சந்திப்பும், மக்கள் சந்திப்பு இன்று (03) கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி முஷ்ர்ரப் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும், இளைஞர்கள் நெறிப்படுத்தல் தொடர்பாகம் இங்கு ஆராய்யப்பட்டது. இந்நிகழ்வின் கட்சியின் ஆதரவாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர் .
தச்சுத் தொழிற்சாலை திறப்பு விழா
மாஞ்சோலை தச்சுத் தொழிலாளர்களின் தொழிற்சாலை திறப்பு விழா கடந்த 01.02.2019 தலைவர் ஹமீட் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் அஸ்மி , உறுப்பினர்களான நெளபர், அமீர், ஜெளபர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் றுவைத் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஹமீட், வட்டாரக் குழு தலைவர் அப்துல் சலாம் மற்றும் பிரமுகர்களும் கலந்து…
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒட்டமாவடி ஹைர் பள்ளிவாசலுக்கு ஐந்து லட்சம் நிதி ஒதுக்கீடு
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒட்டமாவடி ஹைர் பள்ளிவாசலுக்கு விவசாய , நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஐந்து லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புணரமைக்கப்பட்ட மையவாடி சுற்று மதில் திறந்து வைக்கும் நிகழ்வு செயலாளர் றம்லான் தலைமையில் 02.02.2019 இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் அமீர் , உதவித் திட்டமிடல் பணிப்பாளர் றுவைத், பள்ளிவாசல் தலைவர் இர்ஷாத், வட்டாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் மற்றும் ஜமாஅத்தார்களும் கலந்து…
“சுதந்திர தின கிண்ணம்” 2019 கிரிகட் சுற்றுத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக ஹஸீப் மரிக்கார்
தர்கா நகர் “ரெட் எபல்” (Red Apple) கிரிகட் கழக ஏற்பாட்டில் நடைபெற 12 கிரிகட் கழகங்கள் பங்குபற்றும், “சுதந்திர தின கிண்ணம்” (Independent Champions Trophy-2019) கிரிகட் சுற்றுத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த (02) காலை தர்கா நகர் பாகிர் மாகார் மைதானத்தில் நடைபெற்றது. இதன் அங்குரார்பண ஆட்டத்தில் தர்கா நகர் “ரெட் ஸ்டார்” (Red Star) மற்றும் “ஸஹிரியன்ஸ்” (Zahirians) கழகங்கள் மோதியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள்…
பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பெவிலியன் கையளிப்பு
ஹிதோகம அ/கலுவில சேன மகா வித்தியாலயத்தில் 2 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பெவிலியன் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது. 2019.02.01ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் இதனை திரை நீக்கம் செய்து வைத்தார். இதற்கான நிதியினை பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மேற்கொண்டிருந்தார். பாடசாலை அதிபர் தலைமையில் இந்த நிகழ்வில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை…
குளியாப்பிடிய நகர மண்டபத்தில் நடைபெற்ற கைவினைத் தொழிற்துறை கண்காட்சி விழா
சுதேச கைவினைத் துறையினை போஷித்து பேணிப்பாதுகாக்கும் நோக்குடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவை ஏற்பாடு செய்த ”சில்ப அபிமானி – 2018” கைவினைத் தொழிற்துறை கண்காட்சி விழா இன்று (31) குளியாப்பிடிய நகர மண்டப வளாகத்தில் நடைபெற்றது. கைத்தொழில் வர்த்தக அமைச்சரும் தேசிய தலைவருமான ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் கீழ் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் மாவட்ட…
அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலய இல்லைவிளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக இஷாக் ரஹ்மான் கலந்துகொண்டார்…
அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2019.01.31 அன்று நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டு விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய சில மாணவர்களுக்கு கிண்ணங்களையும், சான்றிதல்களையும் வழங்கி வைத்தார். இதன்போது குறித்த பாடசாலையில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுற்று மதிலும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம் பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல…
கிண்ணியா பாதிமா பாலிகா மகாவித்தியாலயத்தில் கௌரவிப்பும் அபிவிருத்தி நிகழ்வுகளும்
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளிப் பொத்தானை தி/கிண்ணியா பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தின் சுற்றுமதில் மற்றும் பாடசாலை கொங்ரீட் வீதி என்பன இன்று (31) துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹரூப் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இருபது இலட்சம் ரூபா செலவில் குறித்த வீதி,பாடசாலைக்கான சுற்றுமதில் என்பன திறந்து வைக்கப்பட்டதுடன் மேலதிகமாக போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றும் கையளிக்கப்பட்டது….
கிராமம் ,நகரம் என்ற பேதமின்றி பாடசாலை வளப்பகிர்வு இடம்பெற வேண்டும்; வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !
“பாடசாலைக்கு தேவையான கட்டிடங்களையும் ,வளங்களையும், அடிப்படை தேவைகளையுமே அரசியல் வாதிகளால் பெற்றுத்தரமுடியும். கல்வித்தரத்தை அதிகரிக்க செய்வதும் மாணவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றியமைப்பதும்,ஆசிரிய சமூதாயத்தின் பெரும் பொறுப்பாகும்.” இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபர் எம். எஸ் .ரம்சீன் தலைமையில் இடம்பெற்ற மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம விருந்தினராக இன்று (31)அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களான முத்து முஹம்மது,தாஹிர் மௌலவி, பாரி ,லரிப்…
வவுனியா குப்பை பிரச்சினையை தீர்க்க அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம் -அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!
வவுனியா பம்பைமடு குப்பை மேட்டு பிரச்சினைக்கு மாற்று தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் தானும் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து, பொருத்தமான இடத்தில் குப்பைகளை கொட்டும் மாற்று திட்டம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று காலை (31)அரச அதிபர் காரியாலயத்தில் அரசாங்க அதிபர் ஹனிபா , மேலதிக அரச அதிபர் மற்றும் நகர சபை,பிரதேச சபை தலைவர்கள் உட்பட அதிகாரிகள் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்…
கருணாவின் குற்றச்சாட்டு வேடிக்கையானது.கிழக்கு ஆளுநரை நியமித்தது பிரதமர் அல்ல; ஜனாதிபதியே ராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி !!!
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் நியமன விடயத்தில் கருணா அம்மான் சம்பந்தன் ஐயாவையும் சுமந்திரனையும் குற்றம் சாட்டிவருவது வேடிக்கையானது.ஆளுநரை நியமதித்தது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அல்ல.அவரது கட்சியின் தலைவரான ஜனாதிபதியே என கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வெல்லாவெளியில் இடம்பெற்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். இவ் வைபவத்தில் முன்னாள்…
