Headlines

கடும் வெப்பம்: பாடசாலைகளுக்கு பூட்டு

வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் அனைத்தும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் நண்பகல் 12 மணியுடன் நிறைவடையுமென வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை,மறு அறிவித்தல் வரை நண்பகல் 12 மணியுடன் பாடசாலைகள் மூடப்படுமென வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர்  மேலும் தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாணத்தில் நிலவி வரும்  கடும் வெப்பமான காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளும் நண்பகல் 12 மணியுடன் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கா.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப் திகதி முடிவு மே 31

இவ் வருடத்திற்கான கா.பொ.த. சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த. சாதாரண தர  பரீட்சை டிசம்பர் மாதம்   6 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து பாடசாலை மற்றும் தனியார் பரீட்சாத்திகளினதும் விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி இம் மாதம் 28…

Read More

கண்டி உடதலவின்னவில் முஸ்லிம் கடைக்கு தீ வைப்பு

கண்டி உடதலவின்னவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைக்கும் வீதியில் நிறுத்தப்பட்டிருநத வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று வியாழன்(28) இடம்பெற்றுள்ளது கண்டி உடதலவின்னை புகையிரத நிலைய பாதையை அண்மித்த வீதியிலேயே இச்சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடை அறையை பெரும்பான்மையின சகோதரர் அண்மையில் வாடகைக்கு எடுத்திருந்தார். அந்தக் கடைக்கே தீ மூட்டப்பட்டுள்ளது. இக்கடை அறை முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வாகனங்களும் எரிந்துள்ளன. அத்துடன் அந்த வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் லொறிக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் உடதலவின்னை பொலிசார்…

Read More

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிக வெப்பம் நோயாளிகள் திண்டாட்டம்!

நீர்கொழும்பு வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 கட்டிடங்களில் அதிக வெப்பம் நிலவுவதால் அங்கு நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உருக்கு அல்லது இரும்பிலான பொருட்களைக் கொண்டு குறித்த கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அதிக வெப்பம் காரணமாக குறித்த கட்டிடத்தினுள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பெருந்தொகையான மருந்து வகைகளும் அழிவடைந்துள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் மில்லியன் கணக்கான பணத்தினைக் கொண்டு அவசரஅவசரமாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடிமானது நோயாளர்களை தங்க வைப்பதற்கு…

Read More

பேக்கரிகளின் உரிமையாளர்களுக்கு தண்டம்.!

பாண் இறாத்தல் ஒன்று கொண்டிருக்கவேண்டிய நிறையை விட குறைந்த நிறையில் பாண்களை தயாரித்து விற்பனைச்செய்த 3 பேக்கரிகளின் உரிமையாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. நுகேகொடை மேலதிக நீதிவானும் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவானுமாகிய அனுஷ்க செனவிரத்ன உத்தரவிட்டார்.

Read More

விருசர அட்டை பயனாளிகளுக்கு மேலும் நன்மைகள்

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருந்துகள் அமைச்சின் தலைமையில் விருசர அட்டை பயனாளிகளுக்கு சகல அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் துறைகளில் முன்னுரிமைகள் மற்றும் சிகிச்சைகள் (மருத்துவ, அறுவை சிகிச்சை, பல் மருத்துவம், கண், கர்ப்பகால மருத்துவ சோதனை உள்ளிட்ட பல சேவைகள்) வழங்கப்படவுள்ளன. இதன்பிரகாரம், அனைத்து மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களிடம் மேற்படி விடயம் சம்பந்தமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். விருசர அட்டை பயனாளிகள் பல்வேறு வகையான சலுகைகள் மற்றும்…

Read More

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு.!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கெண்டைனர் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் குறித்த பகுதிக்கான போக்குவரத்து ஒரு வழி பாதையில் இடம்பெறுவதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். தலவாகலையிலிருந்து கொழும்பிற்கு 12 டொன் நிறையுடைய  தேயிலை தூல் ஏற்றி சென்ற லொறியே இன்று அதிகாலை 4.30 மணியளவில் கினிகத்தேன 20 மைல் பகுதியில்  விபத்துக்குளாகியுள்ளது. லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாரினால் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாத போதிலும் வாகன போக்குவரத்துக்கு தடையேட்பட்டு ஒரு வழி பாதையில் வாகனங்கள் பயணிப்பதாகவும் விபத்து தொடர்பில் விசாரணை…

Read More

13 சட்டவிரோத ஆயுதங்கள் ஒப்படைப்பு

சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலப் பகுதியினுள் இதுவரை 13 ஆயுதங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார். சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக கடந்த 25ம் திகதி முதல் மே 6ம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் இதுவரை மாத்தளை மாவட்டத்தில் 2 ஆயுதங்களும், கம்பஹா மாவட்டத்தில் 7 ஆயுதங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 2 ஆயுதங்களும், மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா ஒரு ஆயுதமும் கையளிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். ரீ…

Read More

பேஸ்புக்கில் ஜனாதிபதியை அச்சுறுத்தியவர் கைது

பேஸ்புக் சமூக வலைத்தளத்தினூடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அச்சுறுத்திய சந்தேக நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வீசா இல்லாமல்  மலேசியாவிற்குச் சென்று அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் நேற்று இலங்கை வந்த போது  கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர் யக்கலை பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். சந்தேக நபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சஷி வீரவன்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச சற்றுமுன்னர் (27) இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுளார். காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலமொன்றினை வழங்கவே சஷி வீரவன்ச ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

களனி பல்கலைக்கழகத்துக்கு பூட்டு!

களனி பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைத் தவிர்ந்த அனைத்து பீடங்களும், எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது. ஈக்களினால் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாகவே, இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read More