Headlines

அரநாயக்கவில் ஐந்து சடலங்கள் மீட்பு

மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் நேற்றிரவு (17) ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் ஐந்து சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக அரநாயக்க பிரதேசத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை தோன்றியிருந்தது. இன்று அதிகாலை ஐந்து மணி தொடக்கம் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று கேகாலை புளத்கொஹுப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில்…

Read More

வெள்ளத்தில் வீட்டுக்கு வந்த விருந்தாளி : களனியில் சம்பவம்

நாட்டில் நிலவுகின்ற தொடர்ச்சியான  மழை வீழ்ச்சியின் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதேவேளை, களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து ஆற்றை அண்டிய வீடுகளில்  முதலைகளின் நடமாட்டத்தை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதனால்  களனி ஆற்றை அண்டிய மக்கள் பீதியுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கொழும்பு செல்லும் பிரதான வீதியில் நடைபெற்ற மீன் வர்த்தகம்!

பேலியகொடை மீன் சந்தை வர்த்தகர்கள் நேற்றைய தினம் (17) பிரதான வீதியின் ஒரு மருங்கில் மீன் விற்பனை செய்து வித்தியாசமான முயற்சியொன்றை மேற்கொண்டிருந்தனர். நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பேலியகொடை மீன் சந்தை முற்றாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்த தகவல்கள் அறியாத நிலையில் நேற்றுக் காலையும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மீன் லொறிகள் பேலியகொடை மீன் சந்தைக்கு வருகை தந்திருந்தன. இதனையடுத்து பேலியகொடைகொயிலிருந்து கொழும்பு வரும் பிரதான வீதியின்…

Read More

வடமேல், சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பாடசாலைகளுக்கு இன்று (17) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமேல் மாகாண பாடசாலைகள் நாளை வியாழக்கிழமை தொடக்கம் வழமை போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மண்சரிவின் பாதிப்பு அதிகமாகவுள்ள நிலையில் சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையே கொழும்பு மாவட்டத்திலும்…

Read More

வெள்ளப்பெருக்கில் மூழ்கிப்போன இராணுவ முகாம்!

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக களனி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் இராணுவ முகாம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது. களனியாற்றுப்படுகையில் அமைந்துள்ள களுஅக்கல பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ முகாமுக்குள் ஆறு அடி உயரம் வரை வெள்ள நீர் புகுந்துள்ளதாக முகாமின் கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். வெள்ளம் காரணமாக இராணுவ முகாமுக்கு வழங்கப்பட்ட மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ட்ரான்ஸ்போமரை மின்சார சபை அதிகாரிகள் அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாக…

Read More

கடுகண்ணாவ மண் சரிவு: தாயும் மகனும் ஜனாஸாவாக மீட்பு

கண்டி, கடுகண்ணாவ, இழுக்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போன இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 15 வயதுடைய சிறுவனின் சடலமும் தாயொருவரின் சடலமும் இவ்வாறு மீட்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஏனைய நால்வரையும் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கண்டி, கடுகண்ணாவ, இழுக்வத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 06 பேர் மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போயிருந்தனர்.

Read More

26 பாடசாலைகள் மூடப்பட்டன

மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியமையை அடுத்து, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 26 பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தளை மாவட்டத்தில் தொடங்தெனிய வித்தியாலயலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளப்பெருக்கு அபாயம் காரணமாக வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் 25 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புத்தளம், நிக்கரவெட்டிய, சிலாபம், கிரிஉல்ல ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

Read More

சீரற்ற காலநிலை: 31, 851 பேர் இடம்பெயர்வு : 8445 குடும்பங்கள் நிர்க்கதி

நிலவும் சீரற்ற காலநிலை கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஏற்­பட்ட அனர்த்­தங்­களில் சிக்கி 6 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அத்­துடன் மேலும் 9 பேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் நான்கு பேர் காணாமல் போயுள்­ளனர். இத­னை­விட சீரற்ற கால­நிலை கார­ண­மாக 25, 820 குடும்­பங்­களைச் சேர்ந்த 88 933பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 65 வீடுகள் முற்­றா­கவும் 1240 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. மேலும் பாதிக்­கப்­பட்­டோரில் 8445 குடும்­பங்­களைச் சேர்ந்த…

Read More

தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம்

மழை வெள்ளம் காரணமாக தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் நிபுணத்துவ மருத்துவர் பபா பலிஹவடன மக்களிடம் கோரியுள்ளார். கொழும்பு ஊடகங்களின் ஊடாக அவர் பொதுமக்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Read More

கடுகண்ணாவையில் மண் சரிவு: ஆறு முஸ்லிம்களை காணவில்லை

– ijas Ahmed – கடுகண்ணாவை இலுக்குவத்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அப்பிரதேசத்தில் 3 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் வீடுகள் மண்னில் புதைந்து 6 பேர் காணாமல் போயுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ரம்மக்கல தக்கியா பள்ளிவாயலுக்கு முன்னால் அமைந்துள்ள இவ்வீடுகள் தொடர் மழையால் நேற்று (16) இரவு மண் சரிவில் சிக்கியுள்ளது. இராணுவம் உற்பட மீட்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் சேவைகள் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தும்  இதுவரை…

Read More

கொழும்பு பிரிட்ஜெட் கான்வென்ட்டுக்கு பூட்டு

கொழும்பு – 7 இல் அமைந்துள்ள எஸ்.ரி பிரிட்ஜெட் கான்வென்ட்டுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் என அந்தப் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

Read More

மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததில் குழந்தை பலி

வீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் 8 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் வத்தளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Read More