Headlines

சி.ஐ.டியில் திலின கமகே ஆஜர்

அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே, குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் இன்று ஆஜராகியுள்ளார். திலின கமகே, இன்றைய தினம் (07) குற்றப்புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம்  விடுத்த உத்தரவின் பேரில் அவர் இன்று சி.ஐ.டியில் ஆஜரானார்.

Read More

பாடசாலைகளுக்கு ரமழான் விடுமுறை

நோன்பை முன்னிட்டு, சகல அரச முஸ்லிம் பாடசாலைகளும் இன்று (03) வெள்ளிக்கிழமையுடன் மூடப்பட்டுள்ளது. அதற்கமைய, ரமழான் நோன்புக்காக எதிர்வரும் ஜூன் 06 முதல், ஜூலை 06 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவு அறிவித்துள்ளது.

Read More

சீமெந்து வாங்க முன்னர் பொதியுறையைப் பாருங்கள்

சீமெந்துக்காக அதிகரிக்கப்பட்ட புதிய விலையானது, புதிய கையிருப்புகளுக்கு மாத்திரமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி முதலான கையிருப்புகளுக்கு மாத்திரம் 930 ரூபாய் விலையினைச் செலுத்துமாறு, நுகர்வோர் அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுள்ளது. 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலை, 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை காலமும் 870 ரூபாய்க்கு காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, 930 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சீமெந்து நிறுவனங்கள் பலவற்றின் வேண்டுகோளுக்கு இனங்கவே, சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதென அதிகாரசபை மேலும் கூறியது.

Read More

கல்கிசை காதி நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு பிடியாணை

-அஸ்ரப் ஏ சமத் – கல்கிசை மஜிஸ்ரேட் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் காதி நீதிமன்றத்தில் காதீநீதிமன்றத்தை அவமதித்தவருக்கு கல்கிசை நீதிமன்றத்தி்ல் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு காதீநிதாவான் தேசமான்ய எம்.வை பாவா (ஜே.பி) தெரிவித்தாா். இவ் வழக்கு சம்பந்தமாக காதீநீதாவான் தகவல் தருகையில் – திருமணம் முடித்து 2 மாதம் மனைவியையும் இருந்து விட்டு அவள் கர்ப்பவதியாகி தற்பொழுது 5 மாத குழந்தை ஒரு வருடமாக நடு வீதியில் விட்டு விட்டு, அக்குழந்தைக்கம் தாய்க்கும்…

Read More

மண்சரிவு அபாய எச்சரிக்கை! 30 குடும்பங்களை இடம்பெயருமாறு கோரிக்கை

பொகவந்தலாவ லொய்னோன் தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையால் 30 குடும்பங்களை சேர்ந்த 142 பேரை இடம்பெயருமாறு வலியுறுத்தியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இன்று தோட்ட நிர்வாகத்தால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி ஏற்பட்ட மண்சரிவின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் மகளும் பலியானதையடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினர் மேற்கொண்ட பரிசோதனையின் போது குறித்த தோட்ட மக்களை வெளியேறுமாறு முன்கூட்டியே அறிவித்துள்ள…

Read More

அங்கொட மலையில் மண்சரிவு

வரக்காப்பொல நகரின் அருகில் உள்ள அங்கொட மலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மலையிலுள்ள அதிகளவான கற்கள் இன்று (1) காலை முதல் சரிந்து வருவதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக மலையடிவாரத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கற்களின் சரிவினால் இதுவரை யாருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள்

முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31)இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நாட்டில் முச்சக்கர வண்டியினால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகின்றோம். இந்நிலையில் பெற்றோலினால் இயங்கும் முச்சக்கர வண்டி 35,000 ரூபாவாலும், டீசலினால் இயங்கும்…

Read More

சம்பள அதிகரிப்பை கோரும் புகையிரத தொழிற்சங்கம்

சம்பளத்துடன் இணைத்து மேலும் பல கொடுப்பனவுகளை புகையிரத தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. இதேவேளை 10,000 ரூபாய் சம்பளம் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு புகையிரத திணைக்களம் இதுவரை வழங்க முன்வராமை குறித்து புகையிரத தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தமது கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படாத பட்சத்தில் தமது சங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என புகையிரத தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளரான ஜானக பெர்னான்டோ தெரிவித்துள்ளார். அத்துடன் தமது கொடுப்பனவுகள் அதிகரிப்பை அமைச்சரவை அங்கீகரித்துள்ள போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளதாகவும்…

Read More

தகவல் வழங்கினால் ஒரு இலட்சம்

பொலன்னறுவை – மட்டக்களப்பு பகுதியில் புகையிரத வீதி மஹேவேவ பகுதியில் யானை ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த யானையில் காது மற்றும் வாளை சந்தேக நபர் ஒருவர் வெட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை துரிதமாக தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதனடிப்படையில் கடந்த 27ஆம் திகதி குறித்த யானை விபத்துக்குள்ளான நிலையிலேயே இவ்வாறு யானையில் உடற்பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ள வனவிலங்கு திணைக்களம்…

Read More

கண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு தையல் பயிற்சி நிலையங்கள் அமைப்பதற்கு அமைச்சர் றிஷாத் முடிவு

கண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு  தையல் பயிற்சி நிலையங்களை அமைத்துத் தருவதற்கு அமைச்சர் றிசாத் முன் வந்துள்ளதாக மடவளை வை.எம்.எம்.ஏ. தலைவர் ஏ.எம்.சலாஹுதீன் தெரிவித்தார். அக்குரணை, கெலியோயா, கண்டி, கம்பளை ஆகிய இடங்களில் இந்த தையல் பயிற்சி நிலையங்களை அமைத்துத் தருவதாக அமைச்சர் தெரிவித்ததாக வை.எம்.எம்.ஏ. தலைவர் மேலும் குறிப்பிட்டார். மடவளை மதீனா கல்லூரி அஷ்ரப் கேட்போர் கூடத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்ட அமைச்சர், மடவளைக்கு தையல் பயிர்ச்சி நிலையம் ஒன்றை…

Read More

மீண்டும் பொது மன்னிப்பு காலம்

சட்டவிரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான அரசின் பொது மன்னிப்பு காலம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கமைய மீண்டும் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. அதன்படி எதிர்வரும் மே 30ம் திகதி முதல் ஜூன் 17ம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அமுலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் தம்மிடம் இருக்கும் சட்டவிரோத துப்பாக்கிகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலகங்கள் அல்லது மாவட்ட செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சு…

Read More

சா/த பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

வ்வாண்டுக்கான க.பொ.த சா/த பரீட்சைப் பரீட்சை விண்ணப்பத் திகதி, எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More