Headlines

ஒரு நாள் சிசுவை புதைத்த தாய் கைது

முஹம்மது முஸப்பிர் பிறந்து ஒரு நாளோயான ஆண் சிசுவை புதைத்தார் என்று சந்தேகிக்கப்படும் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை (03) தெரிவித்த முந்தல் பொலிஸார், இது தொடர்புடைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்குனவில் பிரதேசத்தில், தான் பிரசவித்த சிசுவை கடந்த வெள்ளிக்கிழமை (02) தன்னுடைய வீட்டு வளாகத்தில் தாயொருவர் புதைத்துள்ளார். இதன் பின்னர், சனிக்கிழமை (03) முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற தாய், தனது குழந்தை இறந்து பிறந்ததால்…

Read More

3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 6 பேர் கைது

மன்னார் பள்ளிமுல்லை பிரதேசத்தில் 3 கோடி ரூபா பெறுமதியானஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஹெரோயின் 2.24 கிலோ கிராம்  நிறையுடையது என கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஹெரோயினை கடற்படையினர்கைப்பற்றியுள்ளனர். புலனாய்வு பிரிவினாரின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனைநடவடிக்கையின் போது  குறித்த 6 பேரும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 இலங்கையர்களும் ஒரு இந்தியரும்அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த  ஹெரோயின் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் வவுனியா விசேடபோதைபொருள் ஒழிப்பு பிரிவு…

Read More

டெங்கு நோயளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,419 ஆக உயர்ந்துள்ளது. குறித்த எண்ணிக்கையானது மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 51.31 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேல் மாகாணத்தில் அதிகரித்துக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

சுயவிருப்பின் கீழ் ஓய்வு பெற ஆர்வம் காட்டும் அரச பணியாளர்கள்!

இலங்கை போக்குவரத்து சபையில் பணி புரியும் 3400 ஊழியர்கள் சுயவிருப்பின் கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஓய்வு வழங்கும் நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஸ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 1,077 பேருக்கு ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் பணியில் இருந்து விலகும் போது மொத்தமாக ரூபா 1.2 மில்லியனில் இருந்து ரூபா 3 மில்லியன் வரையில் அவர்களின் ஓய்வூதியத் தொகையும் நல்லெண்ணத்தொகையும்…

Read More

770 கிலோகிராம் கடலட்டை மீட்பு

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 770 கிலோகிராம் கடலட்டைகளை, கல்பிட்டிய கடற்பரப்பில் வைத்து, கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். சுமார் 500,000 ரூபாய் பெறுமதியான இந்தக் கடலட்டைகள் புத்தளத்திலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கடலட்டைகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தத் தொகை கடலட்டையை கடத்தி லந்த கல்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

மனைவியை சுட்ட விவகாரம்: சுழல் துப்பாக்கியும் ஆற்றிலிருந்தே மீட்பு

அத்துருகிரிய, இசுருபுரவில் தன் வீட்டில் வைத்து மனைவியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள லெப்டினன்ட் கேணல் பிரதீப் குமார தென்னசிங்கவை இராணுவ சேவையிலிருந்து இடைநீக்கம் செய்ய, இராணுவம் தீர்மானித்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இராணுவத் தளபதியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட விசாரணைகளை நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு இராணுவத்தளபதி கட்டளையிட்டுள்ளார். அதேபோல, இவ்வாறான சம்பவங்களில் குற்றவாளியாக்கப்படும் இராணுவ அங்கத்தவர்களுக்கு ஆகக்கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவ ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில்…

Read More

குருணாகலில் கோர விபத்து!

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கலேவெல என்ற பகுதில் இன்று காலை இடம்பெற்ற விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச  நிதி மோசடி விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக சரத் வீரவன்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு இன்று (01) அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மீண்டும் சுனாமியா!

நாட்டில் மீண்டும் சுனாமி வந்தால் என்ன செய்வது என்று மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சுனாமி ஒத்திகையொன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி குறித்த ஒத்திகை இடம்பெற உள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இந்த ஒத்திகை நாட்டின் 14 மாவட்டங்களில் நடாத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில், சுனாமியின் போது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக…

Read More

யாழிற்கு நள்ளிரவிலும் பேருந்து சேவைகள்

ருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பேருந்து சேவையினைஇலங்கை போக்குவரத்து சபை இன்று முதல் ஆரம்பிக்க உள்ளது. திருகோணமலை பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 4.00 மணிக்கு புல்மோட்டை முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு புதிய பேருந்து சேவை ஆரம்பித்துவைக்கப்படுகின்றது. மேலும் பயணிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் தினமும் நள்ளிரவு 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு வவுனியா ஊடாக மற்றொரு சேவையும் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 7.00 மணிக்கு இறுதியான பேருந்து சேவை…

Read More

இந்தியாவின் தொழில்நுட்ப கற்கைகளை பெற்றுக்கொள்ள இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இந்தியாவில் தொழில்நுட்ப கற்கைகளுக்கு புகழ் பெற்ற நிறுவனமாகிய Indian Institutes of Technology (IITs)யில் திறமை மிக்க இலங்கையைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை 2017-2018 கல்வி ஆண்டிலிருந்து ஏற்படுத்திக் கொடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக Indian Institutes of Technology (IITs) யின் விரிவுரையாளர்கள் அடங்கிய குழு ஒன்று செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடலை நடாத்தவுள்ளது. இக்கலந்துரையாடல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி புதன்கிழமை…

Read More

கல்வி அமைச்சின் செயலாளர் நியமனம்

கல்வி அமைச்சின் புதிய  செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி தனது கடமைகளை இன்று (01) கல்வி அமைச்சின் தலைமைக்காரியாலயத்தில்  பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை நிர்வாக சேவையின் உறுப்பினராகவும், ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிக செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

Read More