Headlines

இஸ்லாத்தில் இணைந்த விமான பணிபெண் மது பானங்களை பரிமாற முடியாது என உறுதி

அமெரிக்காவின் எக்ஸ்பிரஸ் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணி பெண்ணாக பணியாற்றி வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் விமான பயணத்தின்போது பயணிகளுக்கு மதுவகைகளை பரிமாற மறுத்துவிட்டார். இதற்கு எனது மார்க்கம் இடம் தரவில்லை எனவே இந்த பணியை நான் செய்ய முடியாது என்று அவர் காரணம் கூறிவிட்டார். இந்த காரணத்திற்காக குறிப்பிட்ட அந்த நிறுவனம் அந்த பணி பெண்ணின் பதவியை பறித்ததுள்ளது. இதை எதிர்த்து நீதி மன்றம் சென்ற அவர் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். பணிநீக்கம்…

Read More

நண்பன் ஓட்டிவந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவன் – பரபர வீடியோ

அதிவேகமாக விரைந்து செல்லும் வாகனங்களால் சாலை விபத்துகள் பெருகிவரும் சவுதி அரேபியாவில் நண்பன் ஓட்டிவந்த கார் மோதி பல அடி தூரத்துக்கு பள்ளி மாணவன் தூக்கி வீசப்படும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. சவுதியின் தெற்கேயுள்ள ஜஸான் மாகாணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், அங்குள்ள மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து செல்லும் அந்த மாணவன் சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வேகமாக காரை ஓட்டிவரும் அவனது நண்பன் காரை அவன்மீது மோதிவிடுகிறது. அடிபட்ட வேகத்தில் மாணவன் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு,…

Read More

பாதிரியார் உட்பட 480 பேர் இஸ்லாத்தை தழுவினர்

ருவாண்டா நாட்டில் கிறிஸ்த்துவ பாதிரியாரோடு சேர்த்து மொத்தம் 480 பேர் நேற்று முன்தினம் ( 31-08-2015) இஸ்லாத்தை ஏற்றனர். மேலும், தங்களது கிருஸ்துவ வழிபாட்டு தளத்தை பள்ளிவாசலாக மாற்றினர். அல்லாஹ் இவர்களின் இம்மை மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைக்கட்டும் ஆமீன். அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக –…

Read More

சார்ஜாவில் தந்தையுடன் இரு சிறுமிகள் பலி

அரபு நாடுகளில் முழுஆண்டு தேர்வு விடுமுறை நிறைவடைந்து, 2015-16 கல்வியாண்டில் முதல் நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. சார்ஜாவில் வாழும் ஒருவர் முதல் நாளாக பள்ளிக்குச் சென்ற தனது இரு மகள்களை காரில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நெடுஞ்சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி மோதியதில் அவர்கள் மூன்று பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து சேர்வதற்குள் அந்த…

Read More

சவூதியில் 9 மாதங்களில் 5.5 இலட்சம் பேர் நாடு கடத்தல்

சவுதியில் கடந்த மாதத்தில் மட்டும் 32500 பேர் மீது பல்வேறுபட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இவர்கள் சட்டத்திற்கு புறம்பான சவுதியில் நுழைய உதவியவர்கள், sponsor ஐ விட்டு வெளியே வந்து வேலை பார்த்தவர்கள் ,visa காலாவதி அகியும் நாட்டுக்கு செல்லாமல் மற்றும் visa புதிப்பித்தல் செய்யாதது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அவர்கள். இதை தவிர 280 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து இது வரை 30 லச்சம் திறஹம் பிழை வசூலிக்கப்பட்டுள்ளது. இவர்கள்…

Read More

இஸ்லாமிய பெண்கள் பாக்கியம் நிறைந்தவர்கள் – அமெரிக்க எழுத்தாளர்

இஸ்லாமிய பெண்கள் அடக்கி ஒடுக்க படுவதாக மேற்குலகம் மற்றும் சில அறிவு ஜீவிகளும் கூவி வரும் நிலையில் அமெரிக்காவின் அறிவு ஜீவியும் பிரபல எழுத்தாளருமான சூயி அவர்கள் இஸ்லாமிய பெண்கள் பாக்கியம் நிறைந்தவர்கள் என்றும் இஸ்லாமிய மார்கத்தில் ஆண்கள் தான் அப்பாவிகள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். உலகம் எண்ணுவது போல் இஸ்லாமிய பெண்கள் அடக்கி ஒடுக்க படுவதாக முதலில் தாம் எண்ணியதாக கூறும் சூயி சில மாதங்கள் சவுதி அரேபியாவில் வாழும் வாய்ப்பு கிடைத்த போது தான் தனது…

Read More

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க முயன்ற டாக்டர் மில்லர்!

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது ? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள்…

Read More

கடுமையான இடி மழைக்கு இடையேயும் கஃபாவை மக்கள் வலம் வரும் அழகிய காட்சி !

மழை இறைவனின் மிக பெரிய அருள்களில் ஒன்றாகும். இந்த மழையின் மூலமே பூமி உயிரோட்டம் நிறைந்ததாக நீடிக்கிறது. இந்த மழையின் மூலமே பூமி பசுமை நிறைந்ததாக மாறுகிறது . இந்த மழையின் மூலமே பூமியின் நிலத்தடி நீர் வளம் வழர்கிறது. இறைவன் எங்கு எப்போது மழையை இறக்க வேண்டும் என்று விரும்புகின்றானோ அங்கே அவன் விரும்பும் நேரத்தில் மழையை இறக்குகிறான் . கடந்து சென்ற மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை மக்கா மாநகரை அலங்கரித்தது. இடியுடன் கூடிய மழைக்கிடையேயும் இறைஇல்லத்தை வலம்…

Read More

1000 பேரை இஸ்லாத்தில் இணைத்த மாணவி

பெல்ஜிய பெண்ணான வெரோனிக் கூல் எல்லோரையும் போல கல்லூரிக்கு சென்று வந்தார். கல்லூரியில் பயிலும் ஒரு சில இஸ்லாமிய மாணவிகளோடு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் செய்து வரும் பழக்கங்கள் இவருக்கு வித்தியாசமாக படவே இஸ்லாத்தை அறிவதில் ஆர்வம் கொண்டார். இஸ்லாமிய தோழிகள் மூலமாக அவருக்கு குர்ஆன் மொழி பெயர்ப்பு கிடைத்தது. குர்ஆனை ஆழ்ந்து படித்தார். பிரஸ்ஸல்ஸில் உள்ள இஸ்லாமிக் சென்டருக்கு அடிக்கடி போய் வந்தார். இஸ்லாம் இந்த இள நங்கையை ஆட் கொண்டது. கலிமா மொழிந்து ஏக…

Read More

கூட்டம் கூட்டமாய் இஸ்லாத்தில் இணையும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள்!!

பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை இஸ்லாம் அதிவேகமாக கவர்ந்து வருகிறது சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் ஜித்த நகரில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் அழைப்பு மையத்த்தின் சார்பில் மாற்று மத நண்பர்களை சந்தித்து இஸ்லாத்தை விளக்கும் ஒரு நிகழ்ச்சி நடத்த பட்டது இந்த நிகழ்ச்சியில் பல பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த முஸ்லிம் அல்லாதோருக்கு இஸ்லாத்தை பற்றி சிறு விளக்கம் கொடுக்க பட்டது அநத விளக்கத்தின் பலனாய் 23 இளைஞர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர் அந்த அழகான காட்சிக்கு சாட்சியாய் நிர்க்கும் புகைபடம்…

Read More

சவூதியில் வாஷிங் மெஷினுக்குள் விழுந்து சிக்கிய 3 வயது குழந்தை

சவுதி அரேபியாவில் விளையாடும்போது வீட்டில் இருந்த வாஷிங் மெஷினுக்குள் தவறிவிழுந்து சிக்கிக்கொண்ட 3 வயது பெண் குழந்தையை உயிருடன் காப்பாற்ற அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் நடத்திய போராட்டம், ‘வைரல்’ புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களை கலக்கி வருகின்றது. பலமணி நேர போராட்டத்துக்கு பின்னர், வாஷிங் மெஷினை வெட்டி அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு மழையும், அந்த குழந்தைக்கு இந்தகதி ஏற்பட காரணமாக இருந்த தாயின் அஜாக்கிரதைக்கு வசை மழையும் பெருகி வருகின்றது. அந்த தாய்க்கு…

Read More

கஃபாவின் விரிவாக்கப் பணிகள் முடியும் தருவாயில்!

கஃபாவின் விரிவாக்கப் பணிகள் கிட்டத் தட்ட முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. ஹாஜிகள் கஃபாவை வலம் வர நான்கு தளங்கள் தற்போது கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் கிட்டத் தட்ட 114000 ஹாஜிகள் கஃபாவை வலம் வர முடியும். 76000 ஸ்கொயர் ஃபீட்டில் இந்த விரிவாக்கப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. செப்டம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து விரிவாக்கப்பணிகளும் ஹாஜிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஹஜ் கிரியைகள் முடிந்தவுடன் அக்டோபர் 14 முதல் வழக்கம் போல் விரிவாக்கப்…

Read More