பின்லேடன் தம்பி கட்டுமான நிறுவனத்துக்கு தடை – சவூதி அரேபிய மன்னர் உத்தரவு
சவூதி அரேபியாவின் புனித மக்காவில் கடந்த 12-ந்தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. அதில், கட்டிடம் இடிந்து அங்கு மழைக்கு ஒதுங்கிய யாத்திரீகர்கள் உள்பட 107 பேர் பலியானார்கள். 400 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தோருக்கு சவூதி அரேபிய மன்னர் சல்மான் நஷ்டஈடு அறிவித்து உள்ளார். மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெறும் விரிவாக்க கட்டுமான பணியில் `தி சவூதி பின்லாடின் குரூப்’ ஈடுபட்டுள்ளது. இது அல்கொய்தா தலைவர்…
