Headlines

கல்முனையில் குழாய்க்கிணற்றிலிருந்து நீல நிறத்தில் நீர்

– எம்.ஏ.அஹ்ஸன் அக்தர் – கல்­முனை மத­ரசா வீதி­யில்­ அ­மைந்­துள்ள வீடொன்றில் வழ­மை­யான பாவ­னை­யி­லி­ருக்கும் குழாய்க் கிணற்­றி­லி­ருந்து பல தினங்­க­ளான இளம் நீல நிறத்தில் நீர் வரு­வ­தை­ய­றிந்த குறித்த வீட்டின் உரி­மை­யாளர் கல்­முனை தெற்கு சுகா­தா­ரப்­ ப­ணி­ம­னையில் நீரின் மாதி­ரியை ஒப்­ப­டைத்து தெரி­யப்­ப­டுத்­தியுள்ளர். நீரின் மாதி­ரியை பரி­சோ­திப்­ப­தற்­காக பகுப்­பாய்வு திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பி­வைக்­கப்­ப­ட்­டுள்­ள­தா­கவும் அது­வ­ரைக்கும் நீரை அருந்த வேண்டாம் எனவும் உரிய வீட்­டார்­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கல்­முனை தெற்கு சுகா­தா­ரப்­ப­ணி­ம­னையின் பொறுப்­ப­தி­காரி டாக்டர் ஏ.எல்.எம்.றைஸ் தெரி­வித்தார். இதேவேளையில் குறித்த…

Read More

பொத்துவில் மக்கள் பெரும் துயரில் – அமைச்சர் றிஷாத் கவலை

– சுஐப் எம். காசிம் – “ வாழ்க்கையில் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றோம். குடிப்பதற்கு நீரில்லை. குளிப்பதற்கும் எந்த வசதிகளும் இல்லை. இரவு நேரங்களிலே மிருகங்களின் தொல்லைகளால் மிகவும் பீதியுடனேயே நாங்கள் காலத்தைக் கழிக்கிறோம். எங்களுக்கு உதவி செய்ய எவருமே முன்வருகிறார்கள் இல்லை. நீங்களாவது உதவி செய்வீர்களா? “ என்று சாங்காம மக்கள் அமைச்சர் றிஷாத்திடம் மிகவும் கவலையுடன் வேண்டினர். பொத்துவில் சாங்காமத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அக்கட்சியின்…

Read More

மாளிகைக்காடு நகரில் சதொச திறந்து வைப்பு!

– அஸ்லம் எஸ்.மௌலானா – அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு நகரில் லங்கா சதொச கிளை ஒன்று  கடந்த ஞாயிற்றுக்கிழமை கைத்தொழில், வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஷாட் பதியூதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார்…

Read More

ஒலுவில் மண்ணரிப்பு பிரச்சினைக்கு தனிநபர் பிரேரணை

“ஒலுவில் துறைமுக பாதிப்பு, ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். எதிர்வரும் மே மாதம் அளவில் இந்தப் பிரேரணை விவாதத்திற்கு வரும்போது, இங்கு வாழ்மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை நீக்க முடியும் என்று, நான் பெரிதும் நம்புகின்றேன்” இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒலுவில் மக்கள் சந்திப்பில் தெரிவித்தார். ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல், அன்சாரி ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அமைச்சர் குறைகளைக் கேட்டறிந்த…

Read More

பொத்துவில் வைத்தியசாலையின் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வேன் – அமைச்சர் றிஷாத்

– கபூர் நிப்றாஸ் – அம்பாறை மாவட்ட மக்களுடனான சந்திப்புக்களை  வர்த்தக வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிசாத் பதியுதீன் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் நேற்று (2016.04.04) அம்பாறை மாவட்டத்தில் கல்வியிலும் சுகாதாரத்திலும் தற்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஊரான பொத்துவிலுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது பொத்துவிலின் பல இடங்களையும் பார்வையிட்டுவிட்டு வந்த அமைச்சர் உரையாற்றும்போது : பொத்துவிலில் பல்வேறு குறைபாடுகளை இன்று நான்…

Read More

ஓய்வு பெற்ற நீதிபதி கபூர் அ.இ.ம.கா வில் இணைந்தார்

ஓய்வு பெற்ற நீதிபதியும், பிரபல சட்டத்தரணியுமான கபூர் நேற்று (04) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மாஷாஅல்லாஹ்!!!! பாலமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

அஷ்ரபின் குணாதிசயங்களை றிஷாத்தில் காண்கின்றேன்

– சுஐப் எம்.காசிம் –  மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் கண்ட குணாதிசயங்களை, அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கண்டதனாலேயே, தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டதாக, பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று (04/04/2016) தெரிவித்தார். மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி, நவவி எம்.பி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல்…

Read More

சமூக சேவைகள் தினம் இன்று அம்பாறையில்!

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம், போதை பொருள் பாவனை தவிர்த்தல் மற்றும்  உலக சமூக சேவைகள் தினம் கொண்டாடும் நிகழ்வு இன்று (04), அம்பாறை தீகவாபிய வைத்திய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் தலைமையில் அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரத்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் ரிட்லி ஜயசிங்க ஆகியோரின் பங்களிப்பில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Read More

சம்மாந்துறை பிரதேசத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவோம்: அமீர் அலி

சம்மாந்துறை மத்திய குழுவானது எதிர்காலத்தில் இந்தப்பிரதேத்தின் பிரச்சினைகள் இனங்கண்டு அதனை தீர்க்கின்ற வகையில் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அ.இ.ம.காங்கிஸின் பிரதித்தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெமீல் அவர்களின் தலைமையில் நேற்று (3) இரவு சாய்ந்தமருது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் உட்கட்டமைப்பு சம்மந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர்…

Read More

தூங்கிக் கிடந்தவர்களை தட்டியெழுப்பி ஓடித்திரியவைத்துள்ளோம் – அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவிற்குப் பின்னர் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களை கணக்கிலெடுக்காது அரசியல் செய்தவர்கள் இப்போது ஓடித்திரிகிறார்கள். மக்கள் காங்கிரஸின் வரவு அவர்களை கொழும்பில் இருக்கவிடாமல் அம்பாறை பிரதேசங்களுக்கு அடிக்கடி வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் நேற்று (04) மாலை இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

நீரோடையில் முதலை மடக்கிப்பிடிப்பு.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி 06 ஆம் குறிச்சி டீன் வீதியிலுள்ள நீரோடை ஒன்றில் இருந்து சுமார் 3அடி சிறிய முதலை பொதுமக்களால் நேற்று இரவு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த முதலையை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை காத்தான்குடியில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர். மேற்படி  முதலை தொடர்பில் மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி என்.சுரேஷ்குமாரிடம் வினவிய போது, காத்தான்குடியில் நேற்று இரவு பிடிக்கப்பட்ட 3அடி சிறிய முதலை மட்டக்களப்பு வாவியில் இருந்து…

Read More

துபாயில் நிந்தவூர் நலன்புரிச்சபையின் கிளை

பல்வேறுபட்ட  திட்டங்களை நடைமுறைப்படுத்தி சமூக மறுமலர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் நிந்தவூர் நலன்புரிச்சபையின்  கிளை அண்மையில்  துபாயில்  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தலைவராக பொறியியலாளர் AL.சிராஜ் முகம்மது ,உபதலைவராக அல் ஹாபிஸ் AC அஸ்ரப், செயலாளர் AM.அச்சிமுகம்மது உப செயலாளர்      B.M.Y  நளீர் பொருளாளர், M.Y அன்வர்(சப்ரி) உட்பட இன்னும் அமீரகத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கு  இணைப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இந்நிகழ்விலே  விசேட உரையாற்றிய NWC  இன் தலைவர் அல்ஹாஜ் யாகூப் ஹசன் அவர்கள் தனது உரையில்  “கல்வியினூடாக  முன்னேறி உலகளாவிய…

Read More