ACMC News
பாலர் பாடசாலை நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இஸ்ஹாக் ரஹுமான் MP
அனுராதபுரம், கட்டியாவ பிரதேசத்தில், அண்மையில் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பங்கேற்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான அமீர் அலி அவர்கள்; துருக்கியில் நடைபெறும் அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கலந்துகொள்ள நேற்று (28) துருக்கிக்கு பயணமானார்.
சிராஸ் மீராசாஹிப் (லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்தின் தலைவராக) இன்று பதவியேற்பு
லங்கா அசோக் லேலன்ட் (Lanka Ashok Layland) நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் டாக்டர் சிராஸ் மீராசாஹிப், தமது கடமைகளை இன்று (20) வியாழக்கிழமை பொறுப்பேற்கவுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, கொழும்பு – 02, கொம்பனித் தொரு, சதோச கட்டிடத்தில் அமைந்துள்ள மேற்படி அலுவலகத்தில் இவ்வைபவம் இடம்பெறவுள்ளது.
முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை விஷேட அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள் – ரீட்டாவிடம் அமைச்சர் றிஷாத்
அரசாங்கத்தின் எந்த ஓர் அரசியல் தீர்வு முயற்சியிலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதோடு அவர்கள் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உரிய தீர்வு கிடைக்கச்செய்ய வழி வகுக்குமாறு விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடேயிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். இலங்கை வந்துள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சிறுபான்மைச்சமூகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கான விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக்…
புத்தளத்திலுள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக ஆய்வு
புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் Navavi Foundation For Puttalam Development (NFPD), புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக ஆய்வு செய்து மாணவர்கள் நிலை அறிந்து புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. 1000 மாணவர்களுக்கு 100 நாள் திட்டம் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் மாணவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியதாகும். கணிதத்துறை அதிமுக்கிய பாடப்பகுதியாகும். இத்துறையில் மாணவர்கள் பெரும்பாலானோர் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அது தொடர்பாக, நவவி பௌண்டேசன் புதிய திட்டம் வரைபு ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கின்றது….
வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம்
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.H.M நவவி அவர்களின் தலைமையில் வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம் ஒன்றை நிர்மானிப்பதற்காக அடிகல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. புத்தளம், வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு 1950ம் ஆண்டிலிருந்து வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்த மக்கள் தனியார் நிறுவனங்களின் மூலமாக மட்டும்மே தபால் சேவைகளை பெற்றுவருங்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதியோர் சங்கங்களுக்கு உதவி…..
அனுராதபுரம், ஹொரவபத்தானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கபுகொல்லேவ மற்றும் கலஹிடியாகம ஆகிய பிரதேசங்களில் இயங்கி வரும் முதியோர் சங்கங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ஏ ரஹ்மான் அவர்களின் நிதி ஒதுக்கீடில் இரும்பு அலுமாரிகள் வழங்கிவைக்கப்பட்டபோது……..
அமைச்சர் றிஷாத் ‘ஆசிரியர் தின’ வாழ்த்துச்செய்தி
ஆசிரியர் தொழில் புனிதமானது சமுதாயத்தில் நற்பிரஜைகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே! இவ்வாறான உயரிய சேவைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இன்றைய தினத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் விண்ணப்பம் கோரல்!
05.10.2016 எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடு தழுவிய ரீதியில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அரசியலில் ஆர்வமும் சமூக சேவைகளில் ஈடுபாடும் உள்ளவர்களுக்கும் முன்னரிமை வழங்கப்படும்.. விருப்பமுள்ள விண்ணப்பதாரிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் உள்ளூராட்சிசபை, தேர்தல் தொகுதி, தேர்தல் மாவட்டம் என்பவற்றைக் குறிப்பிட்டு, தங்கள் சுயவிபரக் கோவையுடன் இரண்டு பரிந்துரையாளர்களுடன் விண்ணப்பங்களை எதிர்வரும் 15.10.2016 ஆம் திகதிக்கு முன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். எஸ்.சுபைர்தீன் செயலாளர் நாயகம், அகில இலங்கை…
தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில்…………….
தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில் உலக சிறுவர் தினத்திற்காக – சிறார்களுக்கு ஒரு அங்கமாக கழிவு பொருட்களின் மூலம் திறமான ஆக்கங்களை உருவாக்குவதற்கு ஜயவர்தனபுர விஷேட விரிவுரையாளர்கள் மூலம் பயிற்றுவித்து வருகை தந்த சுமார் 2000 சிறுவர்களுக்கு Led magic watch. கைக்கடிகாரம் இலவசமாக அன்று வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் ஆரம்பித்து வைத்தபோது..
இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடக்கு மீனவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்- அமைச்சர் றிஷாத்
-சுஐப் எம்.காசிம் – இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் அச்சுறுத்தியுள்ளதாகவும், குறிப்பாக யுத்தகாலத்தில் மீனவத்தொழில் செய்ய முடியாது அவதியுற்ற மீனவர்கள், இன்னும் கஷ்டங்களையே சந்தித்து வருவதாகவும், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பள்ளிமுனை புனித லூசியாஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார். அதிபர் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக வடமாகாண அமைச்சர்…
தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்குள் சிக்க வேண்டாம்” – அமைச்சர் றிஷாத்
இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க வேண்டாமென அமைச்சர் றிசாத் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்புப் பணிப்பாளரும், அமைச்சர் றிசாத் பதியுதீனின் குருநாகல் மாவட்ட பிரதம இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் தலைமையில் இடம்பெற்ற தேசிய நல்லிணக்கத்துக்கான ஹஜ் விளையாட்டுப் போட்டி மற்றும் சிறுவர்வர்தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அமைச்சர் றிசாத் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது; கடந்த 30 ஆண்டு காலமாக இந்நாட்டை…
