Headlines

சிறைக்கைதிகளுக்கு புத்தாண்டு பரிசு




புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் உள்ள சிறைக்கைதிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

புதுவருட தினத்தில் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவுகளை கைதிகள் உண்பதற்கு வாய்ப்பளித்த சிறைச்சாலை திணைக்களம் மேலும் ஒரு வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

கைதிகளைப் பார்வையிட வரும் உறவினர்களின் எண்ணிக்கையில் இருந்த மட்டுப்பாடுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் தளர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

புதுவருடத்தை முன்னிட்டு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 13ஆம், 14ஆம் திகதிகளில் இந்த விடயம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் புதுவருட விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்பிரகாரம், வெளிக்கடை சிறைச்சாலையில் விளையாட்டுப் போட்டியானது எதிர்வரும் 24ஆம், 30ஆம் திகதிகளில், சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இடம்பெறும் எனவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *