Headlines

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். பௌத்தர்களின் பிரதான சமய விழாக்களில் ஒன்றான வெசாக் பௌர்ணமி தினத்தை ஒட்டி, பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். சுமார் 500 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்த முடியாது தண்டனை அனுபவிப்போர் வயது முதிர்ந்த கைதிகள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

Read More

சிறுவனை பணையக் கைதியாக வைத்து கொள்ளை!

17 வயது சிறுவனை பணையக் கைதிதாக வைத்து வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இனந்தெரியாத ஆயுத குழுவொன்று கொள்ளையடித்த சம்பவம் நேற்றிரவு வீரஹென மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆயுத குழுவினர்,  தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளதோடு வீட்டில் இருந்த 17 வயது சிறுவனையும் கடத்திச் சென்று கொச்சிக்கடை பகுதியில் விடுவித்துள்ளர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத அதேவேளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சிறைக்கைதிகளுக்கு புத்தாண்டு பரிசு

புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் உள்ள சிறைக்கைதிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. புதுவருட தினத்தில் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவுகளை கைதிகள் உண்பதற்கு வாய்ப்பளித்த சிறைச்சாலை திணைக்களம் மேலும் ஒரு வாய்ப்பையும் வழங்கியுள்ளது. கைதிகளைப் பார்வையிட வரும் உறவினர்களின் எண்ணிக்கையில் இருந்த மட்டுப்பாடுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் தளர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. புதுவருடத்தை முன்னிட்டு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 13ஆம், 14ஆம் திகதிகளில் இந்த விடயம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர்…

Read More

கைதிகளுக்கு வீட்டுச் சாப்பாடு.!

பிறக்கவிருக்கும்  தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு அவர்களது வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை கொடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம் மாதம் 13ம்இ 14ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த இரு நாட்களும் காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை கைதிகளுக்கு உறவினர்கள் தரும் உணவை வழங்க முடியும்…

Read More

நகரப்புற சிறைச்சாலைகளை கிராமங்களுக்கு மாற்ற நடவடிக்கை

நகர பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளை, கிராமப்புறங்களுக்கு மாற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கிராமங்களுக்கு மாற்றப்படும் சிறைச்சாலைகள், திறந்தவெளி சிறைச்சாலைகளாக செயற்படும் என அமைச்சின் செயலாளர் வி. சிவஞானஜோதி குறிப்பிட்டார். திறந்தவெளி சிறைச்சாலையில், குற்றவாளிகளை மீண்டும் குற்றமிழைக்காதவர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவ்வாறான சிறைச்சாலைகளில் சுகாதார வசதிகள் மற்றும் பராமரிப்புகளை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் காரணமாக சிறைச்சாலை அறைகளுக்குள்ளேயே கைதிகள் இருக்கவேண்டிய தேவை ஏற்படாது எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின்…

Read More

கைவிலங்குடன் தப்பி சென்றவர் மடக்கிப்பிடிப்பு

பொலிஸாரின் பாதுகாப்பிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவரை கலஹா நகரில் வைத்து கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கம்பளை பொலிஸார் கட்டுகஸ்தோட்டை வத்துவல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவரை கைது செய்து கைவிலங்கிட்டிருந்தனர். இந்நிலையில் சந்தேக நபர் திடீரென தலைமறைவாகியுள்ளார். இது குறித்து சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது. சந்தேக நபர் கைவிலங்குடன் வாகனம் ஒன்றினை கலஹா நகரின் ஊடாக செலுத்திச் சென்ற…

Read More