Headlines

சானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு

நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட  சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர்  கடந்த 14 ஆம் திகதி கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு விளக்கமறியல்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாங்க வாகனத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிலேயே இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More

முன்னாள் சுங்க அதிகாரிக்கு விளக்கமறியல்

2007ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதிவரையான சொத்து விவரத்தை சமர்பிக்கத் தவறிய, முன்னாள் சுங்க அதிகாரியான ரஞ்சன் கனகசபையை, செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று செவ்வாய்க்கிழமை(30) உத்தரவிட்டார்.

Read More

நீதிமன்றில் மோதிக் கொண்ட பெண்களுக்கு விளக்க மறியல்!

நீதிமன்றம் மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்திற்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறு தாக்கிக் கொண்ட இரண்டு பெண்களையும் கைது செய்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதிமன்றில் இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு நீதிமன்ற நீதவான் ஒகஸ்டா அதபத்து, குறித்த பெண்களுக்கான விளக்க மறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளார். குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான்…

Read More

மிருகங்களை வேட்டையாடியோர் சரணடைந்தனர்

நக்கிள்ஸ் வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர், இன்று (03) ஞாயிற்றுக்கிழமை, தமது சட்டத்தரணியுடன் பன்விலை பொலிஸில் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஏற்கெனவே இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக வன விலங்குகளை வேட்டையாடிய சிலர் அவற்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இந்தப் புகைப்படங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் பிரதான சந்தேகநபர்…

Read More

சிறைச்சாலையிலும் பகிடிவதைகள்

பாடசாலை, பல்கலைக்கழகங்கள் என்ற நிலை மாறி தற்போது சிறைச்சாலைகளிலும் பகிடிவதைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகிடிவதைகளுக்கு முகம் கொடுத்திருப்பது வெலிகட மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளுக்கு மாற்றலாகி சென்றுள்ள சிறைச்சாலை காவலர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காவலர்கள் தமது விடுதிகளில் தங்கியிருந்த போது கடந்த சில நாட்களுக்கு முதல் நள்ளிரவு 12 மணிக்கும், அதிகாலை 3 மணிக்கும் சிறைச்சாலையில் உள்ள சிலரால் இவர்கள் பகிடிவதைக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இவர்கள் தாக்குதல் சம்பவத்திற்கும் முகங்கொடுத்துள்ளதாகவும், இந்த பகிடிவதையினைத் தாங்கிக்…

Read More

கட்டாரில் இலங்கையருக்கு 1 வருட சிறை

உத்தியோகபூர்வ ஆவணமொன்றை போலியாக தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையருக்கு டோஹா கட்டாரில் ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. டோஹா கட்டாரிலுள்ள குற்றவியல் நீதிமன்றமே மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது. பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றதாக தெரிவித்து குறித்த இலங்கையரினால் குறித்த ஆவணம் கட்டாரிலுள்ள அரச திணைக்களமொன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததன் பின்னணியிலேயே குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஆராய்;ந்த நீதிமன்றம் குறித்த நபரை குற்றவாளியாக இனம் கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. குற்றவாளியை தண்டனைக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைக்கு…

Read More

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து…

Read More

சிறைக்கைதிகளுக்கு புத்தாண்டு பரிசு

புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் உள்ள சிறைக்கைதிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. புதுவருட தினத்தில் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவுகளை கைதிகள் உண்பதற்கு வாய்ப்பளித்த சிறைச்சாலை திணைக்களம் மேலும் ஒரு வாய்ப்பையும் வழங்கியுள்ளது. கைதிகளைப் பார்வையிட வரும் உறவினர்களின் எண்ணிக்கையில் இருந்த மட்டுப்பாடுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் தளர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. புதுவருடத்தை முன்னிட்டு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 13ஆம், 14ஆம் திகதிகளில் இந்த விடயம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர்…

Read More

கைதிகளுக்கு வீட்டுச் சாப்பாடு.!

பிறக்கவிருக்கும்  தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு அவர்களது வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை கொடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம் மாதம் 13ம்இ 14ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த இரு நாட்களும் காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை கைதிகளுக்கு உறவினர்கள் தரும் உணவை வழங்க முடியும்…

Read More

நகரப்புற சிறைச்சாலைகளை கிராமங்களுக்கு மாற்ற நடவடிக்கை

நகர பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளை, கிராமப்புறங்களுக்கு மாற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கிராமங்களுக்கு மாற்றப்படும் சிறைச்சாலைகள், திறந்தவெளி சிறைச்சாலைகளாக செயற்படும் என அமைச்சின் செயலாளர் வி. சிவஞானஜோதி குறிப்பிட்டார். திறந்தவெளி சிறைச்சாலையில், குற்றவாளிகளை மீண்டும் குற்றமிழைக்காதவர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவ்வாறான சிறைச்சாலைகளில் சுகாதார வசதிகள் மற்றும் பராமரிப்புகளை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் காரணமாக சிறைச்சாலை அறைகளுக்குள்ளேயே கைதிகள் இருக்கவேண்டிய தேவை ஏற்படாது எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின்…

Read More

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

– ஜவ்பர்கான் – கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவனேசத்துரை சந்திரகாந்தனை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் இந்த உத்தரவை பிறப்பித்தார். இன்று காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்ட பிள்ளையான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த…

Read More