“எவரையும் தோற்கடிப்பது எமது நோக்கல்ல; மக்கள் சேவையே எம் இலக்கு” – வேட்பாளர் அஷ்ரப் தாஹிர்!
“எவரையும் தோற்கடிக்கும் நோக்கத்துடன் நான் தேர்தலில் களமிறங்கவில்லை. மக்கள் சேவை ஒன்றையே எனது நோக்காகக் கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” என்று திகாமடுல்ல மாவட்ட, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுத்தேர்தல் வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் கூறினார். நிந்தவூர் வன்னியார் வட்டாரத்திற்கான தமது தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில் “நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக மூன்று முறை இருந்து,…
