ஜனாஸா எரிப்பிற்கு எதிராக கிண்ணியா நகர சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்!
முஸ்லிம் தலைமைகளின் கைதுகள், சிறுபான்மை சமூகத்தை ஒடுக்கும் அடக்குமுறையே ஆகும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் தெரிவித்தார். ஜனாஸா எரிப்பிற்கு எதிராக, கிண்ணியா நகர சபையின் இன்றைய (28) சபை அமர்வில் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமின் தலைமையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம் இடம்பெற்றதுடன் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் கைதுக்கு எதிரான பிரேரணை தொடர்பிலும் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கொரோனா மூலம் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யாது, தகனம் செய்வது…
