‘முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனவாத அச்சுறுத்தலை போக்க, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – திகாமடுல்ல வேட்பாளர் ஜவாத்!
ஜனாதிபதி, இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் பொதுத் தலைவராக இருந்தால், ஏன் இந்த நாட்டில் தலைதூக்கியிருக்கின்ற இனவாதத்தை ஒழிக்க முன்வரக்கூடாது? என்ற கேள்வியை முன்வைப்பதுடன், இவ்விடயம் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் தரவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்)வேண்டுகோள் விடுத்துள்ளார். மருதமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே. அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது, “இந்த…
