Headlines

வடபுல அகதி முஸ்லிம்களின் விடிவுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் என்ன செய்திருகின்றார்?

முசலிப் பிரதேசத்தின் பாலைக்குளி, கரடிக்குளி, சிலாவத்துறை, கொண்டச்சி, மறிச்சுக்கட்டி உள்ளிட்ட ஏனைய கிராம முக்கியஸ்தர்கள், சமூக நல இயக்கங்களின் பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரான ரிஷாட் பதியுதீனை ஆதரித்து, நேற்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு… ! “20 வருட அகதி வாழ்க்கையின் பின்னர், வடக்கில் அமைதிச் சூழல் ஏற்பட்டதனால் மீளக்குடியேறும் ஆர்வத்திலும், எண்ணத்திலும் முசலிப் பிரதேசத்துக்கு நாங்கள் வந்த போது, இந்தப் பிரதேசம் இருந்த…

Read More

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியாவில் இடம்பெற்ற பொதுக்கூட்டம்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில், திருமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியாவில் இன்று மாலை (03) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்துகொண்டார். திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில், கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், வேட்பாளர்களான எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்ரூப், சரத், நளின் பண்டார, டாக்டர் அருண சிறிசேன, நவாஸ் மற்றும் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப்…

Read More

உலமாக்களே, உங்களில் இருவர் உங்களுக்காக மயிலில்; அவமானப்படுத்திவிடாதீர்கள்..!

இம் முறை அம்பாறை மாவட்ட அ.இ.ம.காவின் வேட்பாளர் பட்டியல் மிக அழகானது. பல் துறை சார் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இக் கட்சியில் மார்க்கத்தை கற்ற இரண்டு உலமாக்கள் போட்டியிடுகின்றமை அதன் விசேடங்களில் ஒன்று. ஒருவர் அக்கறைப்பற்று ஹனீபா மதனி, இரண்டாமவர் இறக்காமம் பிரதேச சபை பிரதி தவிசாளர் நௌபர் மௌலவி. அம்பாறையில் போட்டியிடுகின்ற பலமான கட்சிகளில் அ.இ.ம.காவில் மாத்திரமே மார்க்கத்தை கற்ற உலமாக்கள் போட்டியிடுகின்றனர். இது அ.இ.ம.காவானது உலமாக்களுக்கு வழங்குகின்ற ஒரு மிகப் பெரிய கௌரவமும், அங்கீகாரமுமாகும்.அ.இ.ம.காவின்…

Read More

‘தேர்தல் களமென்பது அரசியல்வாதிகளால் ”ஜனநாயக தேர்தல்” என்ற நிலைமாறி, பணம் புரளுகின்ற ”பண நாயக தேர்தல்” நிலையை உருவாக்கியுள்ளது’ – முதன்மை வேட்பாளர் வை.எஸ்.எஸ். ஹமீட்!

தற்போதைய தேர்தல் களமென்பது அரசியல்வாதிகளால் ”ஜனநாயக தேர்தல்” என்ற நிலை மாறி, பணம் புரளுகின்ற ”பண நாயக தேர்தல்” நிலையை உருவாக்கியுள்ளமையால், நேர்மையான அரசியல் கலாச்சாரம் இன்று கேள்விக்குறியாகியுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட மக்கள் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். கல்முனையில் தனது அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, ஜனநாயக தேர்தலை விரும்புகின்ற மக்களின் மனங்களில் இன்று ‘பணம் இல்லையென்றால் தேர்தல் களம் இல்லை’ என்கின்ற…

Read More

“சமாதானத்தை நேசிக்கின்ற சக்திகளே சஜித்துடன் கைகோர்த்துள்ளனர்”- முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

இன ஐக்கியத்தையும் சமூகங்களுக்கிடையிலான சமத்துவம் மற்றும் சமாதானத்தையும் நேசிக்கின்ற சக்திகளே சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்திருப்பதாகவும், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் ஒழிந்து, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற அதீத சிந்தனை கொண்டவராக அவரைக் காண்கின்றோம் எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சஜித் பிரேமதாஸ தலைமையில், இன்று (03) முல்லைத்தீவில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றுகையில்,…

Read More

‘கடந்தகால நல்ல பணிகளை மீட்டிப்பார்த்து புள்ளடியிடுங்கள்’- முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

தேசிய ரீதியில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப ஆர்வமுடன் உழைத்துவரும் சஜித் பிரேமதாஸவின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில், முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தமது வாக்குகளை தொலைபேசி சின்னத்துக்கு வழங்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில், இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “யுத்தத்தால் முற்றுமுழுதாக அழிந்த முல்லைத்தீவு மாவட்டத்தை மீளக்கட்டியெழுப்புவதில், நாம் களத்தில் நின்று பணியாற்றியிருக்கின்றோம். துரிதகதியில் மீள்கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்து, முகாம்களிலிருந்த…

Read More

‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி; சோரம் போகாது துணிந்து நில்லுங்கள்’ – மன்னாரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

சிறுபான்மைச்  சமூகங்களை அச்சுறுத்தி, பிரித்தாண்டு பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளைப் பெறத் துடிப்போரைத் தோற்கடிப்பதற்கு, தொலைபேசிச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் (01) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார். ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்ததாவது; சிறுபான்மையினர் பயமுறுத்தப்படும் ஒரு சூழலில் நாம் இத்தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். பேரினவாதிகளின்…

Read More

‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ – மன்னாரில் சஜித் பிரேமதாஸ!

கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செய்வதே அதன் நோக்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமேதாஸ குற்றஞ்சாட்டினார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (01) மன்னார், தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “முஸ்லிம் தலைவர்கள் எவராவது குற்றமிழைத்திருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்த…

Read More

சமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி; சிந்தித்து செயற்படுமாறு வவுனியால் மக்கள் காங்கிரஸ் தலைவர் அறிவுரை!

வன்னி மாவட்டத்தில் மக்களின் வாக்குகளைக் கூறுபோட்டு, காலாகாலமாக பணியாற்றி வரும் சமூகத் தலைமைகளை இல்லாதொழிக்கும் சக்திகள் குறித்து, தேர்தலில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று காலை (01) வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு…

Read More