‘வாழைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம்கள் ஏழு ஆசனம் பெற்றால் யாரும் தனியான ஆட்சி அமைக்க முடியாது’ பிரதி அமைச்சர் அமீர் அலி!
-முர்ஷிட் கல்குடா- வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட நான்கு முஸ்லிம் வட்டாரத்தின் மூலம் ஏழு உறுப்பினர்களை நாங்கள் பெறுவோமாக இருந்தால் யாரும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர். பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் செம்மண்ணோடை வேட்பாளர் எம்.எச்.எம்.ஹக்கீமை ஆதரித்து செம்மண்ணோடையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு…
