Headlines

“கூட்டுறவுத் துறை சார்ந்த பிரச்சினைகள் எதிர்வரும் 03 மாதத்துக்குள் தீர்க்கப்படும்”அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- கூட்டுறவுத் துறை சார்ந்த அமைப்புக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் அவ்வமைப்புக்கள் சமர்ப்பித்துள்ள கருத்துக்கள், முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி, எதிர்வரும் 03 மாதத்துக்குள் அந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு துறை சார்ந்த 14 பிரதான அமைப்புகளுக்கும், அமைச்சருக்கும் இடையே கைத்தொழில், வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, கூட்டுறவு துறை சார்ந்த…

Read More

‘அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும்’ அமைச்சர் ரிஷாட் பொலிஸுக்கு வலியுறுத்து!

-ஊடகப்பிரிவு- இன்று அதிகாலை (27) அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கடையொன்றுக்கு வருகை தந்த ஒரு சில பெரும்பான்மையினத்தவர்களால், கடை உரிமையாளர் மீதும் கடை மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் அருகில் உள்ள பள்ளி மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.     இந்த அசம்பாவிதம் தொடர்பில் அறிந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்த சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு…

Read More

கனேவல்பொல தேர்தல் வட்டாரத்தில் இடம்பெற்ற நன்றி நவிலல் நிகழ்வு! இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கெக்கிராவ பிரதேச சபைக்கு கனேவல்போல வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்ட ஹபீல் ஆசிரியர் பல சவால்களுக்கு மத்தியில் தேர்தலில் வெற்றியீட்டினார். அந்த வகையில், கனேவல்பொல தேர்தல் தொகுதிக்குட்பட்ட கனேவல்பொல, நிக்கவெவ, ரம்பேவ, ஹீனுக்கிரியாவ, எட்டிவீரவெவ, கந்துபோட ஆகிய பிரதேசங்களில் அணிதிரண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிழும் கூட்டங்கள் நேற்று (25) நடந்தேறின. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

“நாட்டின் ஆட்சி மாறினாலும் அமைச்சு மாறினாலும் மக்கள் பலத்துடன் உள்ள மக்கள் காங்கிரஸை என்றும் அசைக்க முடியாது” டாக்டர்.ஹஸ்மியா!

-ஊடகப்பிரிவு- நாட்டின் ஆட்சி மாறினாலும் அமைச்சு மாறினாலும் மக்கள் பலத்துடன் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸை என்றும் அசைக்க முடியாது. அக்கட்சியின் தலைமை சமூகம் சார்ந்த போராட்டங்களையும், பணிகளையும் எந்தவித தடைகளுமின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேசத்திற்கான மகளிர் அணி காரியாலயத் திறப்பு விழாவும், கட்சியின் வெற்றிக்கு பாங்காற்றிய ஆதரவாளர்களுக்கு…

Read More

அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, விஜித் விஜிதமுனி சொய்சா ஆகியோருக்கு அமைச்சர் ரிஷாட் கடிதம்!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இவர்களது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரினை குழாய் கிணறுகள் மூலம் பெற்றுக் கொள்ள தேவைாயன வசதிகளை துரித கதியில் மேற்கொள்ள நடவடிக்கையெடுப்பதன் அவசியம் தொடர்பில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் விவசாய அமைச்சர் துமின்த திசநாயக்க மற்றும் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சா ஆகியோரிடத்தில் வேண்டுகோளை முன் வைத்து…

Read More

 வெற்றிப்பாதையை நோக்கி மக்கள் காங்கிரஸ்!

உள்ளுராட்சி தேர்தல் 2018 வெற்றிப்பாதையை நோக்கி மக்கள் காங்கிரஸ்! –கலாபூஷணம் எஸ்.எம்.சஹாப்தீன்- நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட – எண்ணிப்பார்க்கப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கடந்த 10ஆம் திகதி நடந்து முடிந்துவிட்டது. அதன் முடிவுகள் வெளியாகி, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி, பலரின் சிந்தனையை முடுக்கிவிட்டிருப்பது இன்று ஊரறிந்த உண்மையாகிவிட்டது. உள்ளுராட்சித் தேர்தலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் கொதிநிலை மக்களை வெறுப்படையச் செய்துள்ளது. அதற்குக் காரணம் இத்தேர்தல் நாட்டில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி இருப்பதுதான். தேர்தல்…

Read More

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் ரிஷாட் அவசரக் கடிதம்!  

-ஊடகப்பிரிவு- வடக்கு, கிழக்கில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் குடும்ப வறுமையை போக்குவதோடு, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் எழுதியுள்ள கடிதங்களில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டிலே படித்த இளைஞர் யுவதிகளும், பட்டதாரிகளும் தொழிலின்றி பெரிதும் அவதியுறுகின்றனர். வறுமைகோட்டின் கீழ் வாழும்…

Read More

வாகரை காரமுனை கிராமத்துக்கு பஸ் சேவை ஆரம்பம்!

-முர்ஷித் கல்குடா- இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை பேரூந்து சாலையினால் மட்டக்களப்பு தொடக்கம் மீள்குடியேற்ற கிரமமான வாகரை காரமுனை வரையான பஸ் சேவை கடந்த  வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியிடம் மீள்குடியேற்ற கிரமமான காரமுனை மக்கள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம், வாழைச்சேனை சாலை முகாமையாளருக்கு விடுத்த கோரிக்கைக்கமைய குறித்த பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.   வாழைச்சேனை பேரூந்து சாலையின் முகாமையாளர் எம்.ஐ.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற…

Read More

“வெற்றிகளுக்கு தோல்வி தூணாகட்டும்” முன்னாள் அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன்!

கடந்த பொதுத்தேர்தல்களுக்கு முன்பிருந்தே இலங்கை முஸ்லிம்களிடையே அமைச்சர் றிஷாட் பதியுதீனைப் பற்றி ஒரு நல்லபிப்பிராயம் வளரத் தொடங்கிற்று. 90ல் இனச்சுத்திகரிப்பின் பேரில் அகதிகளாக்கப்பட்ட வடமாகாணத்தின் முஸ்லிம்களின் நிலை பற்றி நெஞ்சு பதறாத முஸ்லிம்களே இல்லை. குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களிடம், வடமாகாண முஸ்லிம்கள் மீதான அநுதாபமும் அக்கறையும் மனதை சதா உறுத்திக்கொண்டே இருந்தது. அதேபோன்ற அநியாயங்கள், அக்கிரமங்கள் தொடர்பாக அரைகுறையான அவஸ்தைகளை அவர்களும் அநுபவித்திருந்தார்கள். வடமாகாண முஸ்லிம் அகதிகளுக்கு விரைவில் விடிவு ஏற்படவேண்டுமென்ற பிரார்த்தனை, அவர்களின் நெஞ்சில்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் சிறுகைத்தொழில் ஆலை திறப்பு நிகழ்வு! செயலாளர் சுபைர்தீன் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் மல்வானை அமைப்பாளர் முஹம்மத் ரிபானின் முயற்சியில் யுவதிகளுக்கான சுயதொழில் வாய்ப்புத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், மல்வானை விதானகொடை பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிறுகைத்தொழில் ஆலையை (Mini Garment) மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் நேற்று முன்தினம் (20) திறந்து வைத்தார்.   சுமார் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட இந்த சிறுகைத்தொழில் ஆலை திறப்பு நிகழ்வில், அகில இலங்கை…

Read More

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விஷேட சலுகையை தடையின்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள்” பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

-ஊடகப்பிரிவு- அரச நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபனவிதிக் கோவையின் XIIஆம் அத்தியாயத்தின் 12 பிரிவின் 12:1 உபபிரிவின் மீளமைக்கப்பட்ட சுற்றுநிருபத்தின் பிரகாரம், அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்கள் வெள்ளிக் கிழமைகளில் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றவென வழங்கப்பட்ட விஷேட சலுகைக்கு வழிவிட வேண்டுமென அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவை வழங்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்த அமைச்சின் செயலாளரை வேண்டியுள்ளார். முஸ்லிம் அரச ஊழியர்கள் வெள்ளிகிழமைகளில், தமது மதக் கடமைகளை அனுஷ்டிக்கும் வகையில் 12.00…

Read More

“மூவின மக்களின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை வசப்படுத்துவோம்” அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தில்  குறுகிய காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அபரிமிதமான வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு மூவின மக்களின் ஒத்துழைப்புடனும், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளின் அரவணைப்புடனும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை இம்முறை கைப்பற்றுவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார். கைத்தொழில், வர்த்தக அமைச்சில் நேற்று மாலை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்தக்…

Read More