Headlines

“ஐ.தே.க வுக்கு பாடம் படிப்பிப்போம் என மு.கா தலைவர் அண்மைக்காலமாக வீறாப்பு பேசுவது அவரது வழமையான நடிப்பு” முபாரக் அப்துல் மஜீத்!

-முபாரக் அப்துல்  மஜீத்- ஐக்கிய தேசிய கட்சிக்கு பாடம் படிப்பிப்போம் என் ரஊப் ஹக்கீம் அண்மைக்காலமாக வீறாப்பு பேசுவது அவரது வழமையான நடிப்பு என்பதுடன் முஸ்லிம்களை தொடர்ந்தும் உசுப்பேற்றி சொந்த பிழைப்பு நடத்தும் நடவடிக்கையாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது, ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றை பார்க்கும் போது அவர் எப்போதும் ஐ.தே.கவின் செல்லப்பிள்ளையாகவே இருந்து வருகிறார் என்பது சகலரும் அறிந்த விடயம்….

Read More

பாராளுமன்றத்தில் சமர்பித்த கூட்டிணைக்கும் சட்டமூலத்தை மீளப்பெறுவதாக இஷாக் எம்.பி அறிவிப்பு!

2018 மார்ச் வெள்ளிக்கிழமை 30 ஆம் திகதி தினகரன் பத்திரிகையின் 21ஆம் பக்கத்தில் பிரசுரமான விளம்பரம் ஒன்று சம்பந்தமாக… அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மான் ஆகிய என்னை சிலர் அணுகி இலங்கையில் இயங்கும் கலாநிலையம் ஒன்றை பாராளுமன்றத்தில் கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் ஒன்றை பிரேரிக்கும் படியும் அதற்கான ஆவணத்தில் கைச்சாத்திடும் படியும் வேண்டிக்கொண்டனர். சமூகத்தில் உள்ள கலா நிலையங்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற எனது நல்லெண்ணத்தில் தான் அவ்வாறு செய்தேன் .அதற்கு இணங்க பாராளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கைகளை…

Read More

களுத்துறைவாழ் அன்பு பொதுமக்களே!

-களுத்துறை நகரசபை உறுப்பினர் ஹிஷாம் சுஹைல்- களுத்துறைவாழ் அன்பு பொதுமக்களே! இந்த ஊரில் மக்களின் பாரிய எதிர்பார்ப்பு ஒன்று எம்மால் நிறைவேற்றப்பட வாய்ப்பளித்த வல்ல இறைவனுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்! தேர்தல் மேடைதோறும் நாகரீகத்தின் எல்லா எல்லைகளையும் கடந்து விமர்சிக்கப்பட்ட எமது தலைமையும் கட்சியும் நாமும் இன்று இவ்வூர் முஸ்லிம் சமூகத்தின் மீதான அக்கறையை நிரூபித்துள்ளோம்.எமது வருகை முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவத்தை இல்லாமலாக்கும் என தொண்டைகிளிய கத்தியவர்களின் பொய்யை எமது வருகையின்மூலம் பொய்ப்பித்துள்ளோம். சமூகத்தின் பெயரால் ஆயிரக்கணக்கான வாக்குகளை…

Read More

லிஹினியாகல ரஜமஹா விகாரைக்கு நிதியுதவி வழங்கி வைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கடுகம்பொல, லிஹினியாகல ரஜமஹா விகாரையின் அபிவிருத்திக்கு  ஆறு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன் ஆகியோர் விகாராதிபதியிடம் இந்த உதவித் தொகையை  கையளித்தனர்.        

Read More

அநுராதபுரம் பதவிய குளத்தில் மீன் குஞ்சிகள் விடும் நிகழ்வு! இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அநுராதபுரம் பதவிய குளத்திற்கு மூன்று இலட்சம் மீன் குஞ்சிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பெற்றுக்கொடுத்தார். பதவிய பிரதேச மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்ட பிரச்சினைகள் யாவும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் பதவிய பிரதேச செயலாளர், பதவிய பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் முன்னிலையில் கலந்துரையாடப்பட்டது. மூன்று இலட்சம் மீன் குஞ்சிகளை வழங்கி தீர்வை பொற்றுக்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், அங்கு கலந்துரையாடப்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும்…

Read More

குளியாப்பிட்டிய பிரதேச சபையை மொட்டும், மயிலும் இணைந்து கைப்பற்றியது! பிரதித் தவிசாளராக மக்கள் காங்கிரஸ் இர்பான்!

-ரிம்சி- குருநாகல் மாவட்ட குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் (மொட்டு), அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றிக்கொண்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த (மொட்டு) விஜயசிறி ஏக்கநாயக்க 21 வக்குகளைப் பெற்று தவிசாளராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எம்.சி.இர்பான் எதுவித போட்டியுமின்றி, ஏகமனதாகப் பிரதித் தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   தவிசாளரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த புஷ்ப குமார 16 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்….

Read More

“க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன்”  பிரதி அமைச்சர் அமீர் அலி!

-கல்குடா முர்ஷித்- 2017ம் ஆண்டு முடிவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் சித்தி பெற்ற அனைத்து உள்ளங்களையும் வாழ்த்துவதில் பெருமையடைவதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். தற்போது வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்! இலங்கையில் தற்போது வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண…

Read More

“உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராக ஸ்லோவாகியா திகழ்கின்றது” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அந்நாட்டு அமைச்சர் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராக திகழ்கின்ற ஸ்லோவாகியா தனது றப்பர் வர்த்தக செயற்பாட்டினை இலங்கையுடன் விரிவுப்படுத்தவுள்ளது என ஸ்லோவாகியா நிதி அமைச்சர் பீட்டர் கசிமீர் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விஷேட அழைப்பின் பேரில், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் தலைமைக் காரியாலயத்தில் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஸ்லோவாகியா நிதி அமைச்சர் பீட்டர் கசிமீர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இக்கலந்துரையாடலில் தொடந்து கருத்து தெரிவிக்கையில், எங்கள் றப்பர் உட்கொள்ளலை…

Read More

கசப்புணர்வுகளை மறந்து நிந்தவூர் மண்ணுக்கு பணி செய்வோம்” புதிய தவிசாளர் தாஹிர் அறைகூவல்!

-ஊடகப்பிரிவு- தேர்தலகால கசப்புணர்வுகளை மறந்து நமது பிரதேசமான நிந்தவூர் மண்ணுக்கும், மக்களுக்கும் ஒன்றுபட்டு பணிசெய்வதற்கு சகல உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்று நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினரான எம்.ஏ.எம்.தாஹிர் அறைகூவல் விடுத்தார். நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நிந்தவூர் பிரதேச சபைக்குத் தெரிவான உறுப்பினர்களிடையே சபையின் தலைவர், உபதலைவர் தெரிவுக்கான அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் நடைபெற்றது. கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில்,…

Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து இறக்காமம் பிரதேச சபையை கைப்பற்றியது!

-ஊடகப்பிரிவு- இறக்காமம் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் (தாஹிர்) 08 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 03 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 04 வாக்குகளும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 01 வாக்குகளுமாக 08 வாக்குகளைப் பெற்று அவர் தவிசாளர் ஆனார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 05 உறுப்பினர்கள்…

Read More

வாழ்வாதார உதவி வழங்கல்! அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில், மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் முயற்சியில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் சுயதொழில், மீன்பிடி , தையல் தொழில் , சிறுகடை  போன்ற 243 தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில், பல்துறை சார்ந்த கைத்தொழில் உபகரணங்கள் நேற்று (26) தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.   இந்நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. தனீஸ்வரன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் பங்கேற்புடன்…

Read More

நிந்தவூர் பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸின் தாஹிர் தவிசாளராகவும், சுதந்திரக் கட்சி சுலைமான் லெப்பை பிரதி தவிசாளராகவும் ஏகமனதாகத் தெரிவு!

 -ஊடகப்பிரிவு- நிந்தவூர் பிரதேச சபையை முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இன்று மாலை (27) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த அஸ்ரப் தாஹிர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். பிரதித் தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சுலைமான் லெப்பை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை…

Read More