Headlines

மணல் அகழ்வை உடன் நிறுத்துமாறு அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி கோரிக்கை!

-ஊடகப்பிரிவு- மகாவலியை மையப்படுத்திய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், பொலிஸாரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். உரிய அதிகாரிகளால் திருட்டுத்தனமாக வழங்கப்படுகின்ற மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடன் நிறுத்துமாறும் பொலிஸார், பிரதேச செயலாளர்கள் கூடிய கவனம் எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார தலைமையில நேற்று…

Read More

வாழைச்சேனை பிரதேச தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவி!

-முர்ஷிட் கல்குடா- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலியின் வழிகாட்டலில், கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எச்.எம்.ஜனாப் கலீல், பிரதேச செயலக உதவித் திட்டமிடல்…

Read More

‘நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதாயின் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்’ இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதாயின் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பாராளுமன்றில் தெரிவித்தார். 1970களில் இலங்கையைப் பார்த்து சிங்கப்பூர் முன்னேற ஆசைப்பட்டது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி சிங்கப்பூரை போன்று முன்னேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பங்களாதேஷ் போன்ற நாடுகள் முன்னேறுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன. சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானத்தை ஈட்டும் நாடாக இலங்கை இருக்கின்ற போதும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சில குழுவினரால்…

Read More

‘யாப்புக்களை தமது வசதிக்கேற்ப திருத்தும் அரசியல் கலாசாரத்துக்கு மாற்றமாக  மக்கள் காங்கிரஸ் புதிய பாதையில் பயணிக்க திடசங்கற்பம்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!  

-சுஐப் எம்.காசிம்- கடந்த காலத் தலைவர்கள் எந்த நோக்கத்துக்காக தமது கட்சிகளை உருவாக்கினார்களோ, அவர்களின் மறைவுக்குப் பின்னர், அந்தக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் அவற்றினது யாப்புக்களையும், கொள்கைகளையும் தமக்கு வசதியாகவும், ஏற்றார் போலவும் மாற்றியமைத்து அரசியல் செய்து வருகின்றனர். அவ்வாறான நடைமுறைகளைப் போலன்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் நலனை மையமாகக் கொண்ட புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை அறிமுகப்படுத்தி, பயணித்து வருவதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   உள்ளூராட்சித்…

Read More

‘இலங்கையின் புலமைச்சொத்து வரலாற்றில் முக்கிய மைல் கல்’ பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- புவிசார் குறியீடுகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினை வலுப்படுத்தி சட்டவிரோத பொருளாதார ஏற்றுமதி மற்றும் அசல் இலங்கை உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு புலமைச் சொத்து சட்டத்துக்கான புதிய திருத்தம் வழிவகுக்கும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கையின் புவிசார் குறியீடுகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்கான 2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச்சொத்து சட்டத்துக்கான திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற, இரண்டாம் நிலை வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே…

Read More

சிலிம் நீல்சன் விருதினை வென்றது லங்கா சதொச!-

-ஊடகப்பிரிவு- கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இலங்கை சதொச நிறுவனமானது இலங்கைத்தீவில் மிகவும் அதிகம் பேரால் நம்பி விரும்பப்படும் ஒரே ஒரு நிறுவனமாகும். தொடர்ச்சியாக 69 வருடங்களாக வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதானது சதொச நிறுவனத்தின் குறிப்பிட்டுச் சொல்லதக்க மிகப் பெரிய சாதனையாகும். இச்சாதனையின் வலிமை காரணமாக, குஆஊபு பிரிவின் 2018 ஆம் ஆண்டிற்கான ளுடுஐஆ NஐநுடுளுநுN (சிலம் நீல்சன்) விருது இலங்கை சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பல சுப்பர் மார்கெட் நிறுவன சங்கிலித்தொடர்கள்…

Read More

விளையாட்டுக் கழகங்களுக்கான காரியாலயத் திறப்பு விழா!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதேச வாாியாக கால்பந்தாட்டக் கழகம், கிாிக்கட் கழகம் மற்றும் இளைஞர் கழகம் போன்றவற்றை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, அண்மையில் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் அங்குராா்ப்பண நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கொலேஐ் ஒப் ஹெல்த் சயன்ஸ் கல்லூாியின் பணிப்பாளரும், மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான டாக்டர். முனாஸிக் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தாா். பொத்துவில் பிரதேசத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் பங்குபற்றி வெற்றிபெற்ற பிரதேச…

Read More

முசலி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் கட்சிக் கிளைகள் திறப்பு!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தின், முசலி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சிக் கிளைகள் ஆரம்பித்தல் மற்றும் கிளை உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு, மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நேரடி வழிகாட்டலில், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீனின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.   அந்தவகையில், பிச்சைவாணிபங்குளம், 04ஆம் கட்டை, வேப்பங்குளம், பி.பி.பொற்கேணி, எஸ்.பி.பொற்கேணி, அளக்கட்டு, அகத்திமுறிப்பு, புதுவெளி, கூழாங்குளம், தம்பட்டமுசலிக்கட்டு, சிலாவத்துறை, பூநொச்சிக்குளம், பண்டாரவெளி, மணற்குளம், இலந்தைக்குளம், வெள்ளிமலை,…

Read More

‘கருத்தடை மருந்து இருப்பதாக உறுதிப்படுத்தினால் பதவி துறப்பேன்’ பாராளுமன்றில் இஷாக் எம்.பி. தெரிவிப்பு! 

-ஊடகப்பிரிவு- கருத்தடை மருந்துகள் இருப்பதாக உறுதிப்படுத்தினால் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷாக் ரஹ்மான் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (20) செவ்வாய்க்கிழமை நம்பிக்கை பொறுப்பு சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த மாதத்தில் நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் பௌத்தமதத் தலைவர்கள் மற்றும்…

Read More

ஜனாதிபதியுடன், மஹ்ரூப் எம்.பி, இஷாக் எம்.பி உள்ளிட்ட குழு பாகிஸ்தான் பயணம்!

-ஊடகப்பிரிவு- பாகிஸ்தான் நாட்டின் 78வது குடியரசு தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (22) பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான் ஆகியோர் உட்பட  அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதியுடன் நாளை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் அரசின் விஷேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்  இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.  

Read More

நீராவிப்பிட்டி மக்களுக்கான மின்னிணைப்பு வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- முல்லைத்தீவு, நீராவிப்பிட்டியில் வசிக்கும் 15 குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற செயலணியூடாக மின்சார இணைப்புப் பத்திரத்தை, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர், முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்ற செயலணி திட்டப் பணிப்பாளர் ரிபாய், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிறிய கைத்தொழில் திட்டமிடல் ஆலோசகர் மொஹிடீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.      

Read More

‘மட்டக்களப்பில் எதிர்வரும் 05 வருடங்களுக்குள் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களில், வீடுகள் இல்லாமல் இருக்கும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். “செமட்ட செவன” வீடமைப்பு திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில், 272 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பிரதான நிகழ்வு விளாந்தோட்டத்தில், நேற்று முன்தினம் (19) மாலை இடம்பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு…

Read More