மணல் அகழ்வை உடன் நிறுத்துமாறு அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி கோரிக்கை!
-ஊடகப்பிரிவு- மகாவலியை மையப்படுத்திய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், பொலிஸாரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். உரிய அதிகாரிகளால் திருட்டுத்தனமாக வழங்கப்படுகின்ற மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடன் நிறுத்துமாறும் பொலிஸார், பிரதேச செயலாளர்கள் கூடிய கவனம் எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார தலைமையில நேற்று…
