Headlines

சம்மாந்துறை சென்னெல் கிராம வீதிகள் புனரமைப்பு!

-ஊடகப்பிரிவு- சம்மாந்துறை, சென்னெல் கிராமத்தில் அஷ் ஸாலிஹாத் பெண்கள் மத்ரஸா மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை, அல் ஹம்றா பாடசாலை போன்ற இடங்களை அண்மித்த பல வீதிகள் சீரற்று பற்றை, புதர்களுடன் காடுகளாக காணப்படுகின்றன. இதனால், அருகில் வசிக்கின்ற பொதுமக்கள்  அன்றாடம் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த வீதிகளின் புனரமைப்பு தொடர்பில், மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌஷாட் அவர்களுக்கு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சஹீலின் எழுத்து மூலமான கோரிக்கைக்கிணங்க, மக்கள் பயன்பாட்டுக்கு…

Read More

சீமெந்து கல் தயாரிக்கும் இயந்திரம் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு!

-முர்ஷித் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் 8.3 வீதமான வறுமையை குறைத்தது கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, ஸம்ஸம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சீமெந்து கல் தயாரிக்கும் இயந்திரத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார். இங்கு…

Read More

மக்கள் காங்கிரஸின் மாவத்தகம மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல், மாவத்தகம பிரதேசத்துக்கான மக்கள் சந்திப்பு நேற்று மாலை (30) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதோச நிறுவனத்தின் பிரதித்தலைவருமான எம்.என்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில், குளியாப்பிட்டிய பிரதேச சபை உப தவிசாளர் எம்.சி.இர்பான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், புத்திஜீவிகள் என…

Read More

ஹபாயா விடையத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்ட வேண்டும்! பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- முஸ்லிம்களின் ஹபாயா விடையத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்டவில்லையாயின் , வேறு இடங்களில் ஏதாவதொரு சக்திகள் குழப்பி விடுவார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் மிச்நகர் ஹிஸ்புல்லாஹ் கிராமத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நிகழ்வு (27) இடம் பெற்ற…

Read More

பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மக்கள் சந்திப்பு! மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- பொலன்னறுவை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதலாவது மக்கள் சந்திப்பு நேற்று முன்தினம் (29) பொலன்னறுவை, தம்பாளை கிராமத்தில்  இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூபின் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் பெண்கள் விவகாரங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை மற்றும் மக்கள் காங்கிரஸின் தம்பாளை பிரமுகர் ஏ.எல்.ரஸ்மி உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பொலன்னறுவை பிரதேச வாழ் முஸ்லிம்கள்…

Read More

இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது!

இலங்கையில் ஒரேயொரு சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமாக சியாம் சிமெந்து நிறுவனம் தன்னை முழுமையாக ஒருங்கிணைத்துள்ளது! -ஊடகப்பிரிவு- ‘இன்சீ’ (INSEE) சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகக் குழுவோடு இணைந்து இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த நாங்கள் ஒன்றினைந்துள்ளோம்’ என இன்சீ சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் நிறைவேற்றுத் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான ஜான் குனிக் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார…

Read More

குருநாகல் மாடிவீட்டுத் தொகுதியை விஸ்தரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- குருநாகல் நகரில் மாடிவீட்டுத் தொகுதியை விஸ்தரித்தல் தொடர்பில், வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க தலைமையில், கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 15 மாடிகளைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புடன் கூடிய வணிக வளாகக் கட்டடத் தொகுதியை  அமைப்பதற்க்கான இந்தக் கலந்துரையாடலில், குருநாகல் மாநகர பிதா துஷார சன்ஜீவ, மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன், மாகாண முதலமைச்சின் செயலாளர், மாநகர சபை ஆணையாளர் மற்றும் அரச நிருவனங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர்…

Read More

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு கைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு! நவவி எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மூலம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவியின் ஊடாக ரூபா 02 மில்லியன் பெறுமதியான சுயதொழில் உதவி மானியம் புத்தளம் மாவட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு நேற்று (26) வழங்கி வைக்கப்பட்டது. “திவியட உதான” சுய தொழில் உதவி திட்டத்தினால் தலா ஒருவருக்கு 50,000 ரூபாவுக்கு உட்பட்ட கைத்தொழில் இயந்திர உபகரணங்கள் புத்தளம், கல்பிட்டி, முந்தல், வனாத்தவில்லு, சிலாபம் மற்றும் மாதம்பை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 86…

Read More

 வரிப்பத்தன்சேனை மஜீட் புரம் வித்தியாலய சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்த நடவடிக்கை!

-ஊடகப்பிரிவு- இறக்காமம் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வரிப்பத்தன்சேனை மஜீட் புரம் பாடசாலை அருகில் உள்ள, “மடுவத்தை” என்ற இடத்தை வேறு இடத்துக்கு மாற்றி, சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் கலீலுர்ரஹ்மான், மக்கள் காங்கிரஸின் உபதவிசாளர் நௌபர் மௌலவி உட்பட மக்கள் காங்கிரஸின் பிரதேசசபை உறுப்பினர்களான அன்வர் மற்றும் பாஹிமா ஆகியோரும் கலந்துகொண்டனர். “மடுவத்தை” பாடசாலைக்கு அருகாமையில் இருப்பதால், துர்நாற்றம் மற்றும் சூழல் மாசுறுகின்றது. இதனால்…

Read More

“மக்களின் தேவைகளை அவர்களின் காலடிக்குச்சென்று கேட்டறிந்து பூர்த்தி செய்யவேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்” தவிசாளர் தாஹிர்!

-முர்ஷிட்- வீடு வீடாகச் சென்று வாக்குக்கேட்கத் தெரிந்த தலைமைகள், வெற்றி பெற்றபின் வாக்களித்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றனர். அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் சரியான தேவைகளை அறியாமல்,  முறையற்ற விதத்தில் அபிவிருத்தி தொடர்பான சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவை மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயனற்று  அசெளகரியமாக மாறுகின்றன. இது போன்ற வள விரயங்கள் ஏற்படாமல் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி, முறையான திட்டமிடலுடன் கூடிய அபிவிருத்திகளையே நாம் செய்ய விழைகிறோம் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்…

Read More

தலைமன்னார் பாதிரியாரை சந்தித்த  தவிசாளர் முஜாஹிர்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், தலைமன்னார் கிராம பங்குதந்தை கிறிஸ்தவ பாதிரியார் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் முஜாஹிர், இம்முறை இப்பிரதேச மக்கள் மட்டுமின்றி அதிகமான பிரதேசங்களில் இன,மத வேறுபாடின்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைக்கு, தமது பொன்னான வாக்குகளின் மூலம் மக்கள்  ஆணையைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். அதற்கு காரணம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இனமத வேறுபாடின்றி, மனித நேயத்திற்கு முக்கியத்துவமளித்து…

Read More

 இறக்காமம் அல்/அஷ்ரப் மத்திய கல்லூரிக்கு உப தவிசாளர் நௌபர் விஜயம்!

-ஊடகப்பிரிவு- இறக்காமம் பிரதேச சபையின் உபதவிசாளர் ஏ.எல். நெளபர் மெளலவி, அண்மையில் இறக்காமம் அல் /அஷ்ரப் மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்களை  சந்தித்துக் கலந்துரையாடினார். இதேவேளை, பாடசாலையின் கல்வி, அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பற்றியும் அதிபரோடு கலந்துரையாடிய உப தவிசாளர் நௌபர்,  பாடசாலை மைதானத்துக்கு  அருகாமையில் பார்வையாளர் அரங்கு ஒன்றை அமைத்தல்,மைதானத்தை அழகு படுத்தல் மற்றும்  பொது நூலகம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் அதிபர் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்தார்.  

Read More