Headlines

நிந்தவூர் ஜூம்ஆப் பள்ளிவாசலின் புதிய நிர்வாகக் குழுவினருக்கு தவிசாளர் தாஹிர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்!

-முர்ஷிட்- நிந்தவூர் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகத் தெரிவுக்கான கூட்டம் நேற்று (26) இஷாத் தொழுகையைத் தொடர்ந்து, ஜூம்மாப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது புதிய நிர்வாக சபையின் தலைவராக அல்-ஹாஜ் பாறுக் இப்றாஹிம் தெரிவுசெய்யப்பட்டார். நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், ஊரின் பிரமுகர்கள் சகிதமாக நேரில் சென்று, ஜும்ஆப் பள்ளிவாசலின் நிர்வாக சபையின் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரைச் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். குறித்த நிர்வாகத் தெரிவுக்கூட்டத்தில், உப…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு! பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-முர்ஷித் கல்குடா- அதிகாரம் கொண்ட அரசியல் ஓட்டமாவடி பிரதேசத்தில் இருக்கக் கூடாது என்று சில கல்வியலாளர்கள் இப்பிரதேசத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள், அவர்களை நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையின் சம்பிரதாய பூர்வமான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று  வியாழக்கிழமை மாலை (26  சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர்…

Read More

திருமலை ஷண்முகா பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வைக்க உதவுமாறு சம்பந்தன் ஐயாவிடம், அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திருகோணமலை ஷண்முகா அபாயா பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்….

Read More

திருமலை அபாயா சம்பவத்துக்கு காத்திரமான முடிவுகள் எட்டப்பட வேண்டும். தமிழ்த் தலைவர்களின் மௌனம் கவலையளிக்கின்றது என்கிறார் அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி!!!

 -ஊடகப்பிரிவு- திருமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி பிரச்சினைகள் தொடர்பில் சுமூகமான தீர்வைக் காணும் வகையில் பல்வேறு முயற்சிகளை நாம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற போதும், தமிழ்த் தலைவர்கள், இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதற்கான காத்திரமான பங்களிப்பை இதுவரை நல்காமல் மௌனம் காத்து வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ருப் தெரிவித்தார். குறித்த பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா ஆடையுடன் தமது ஆசிரியப் பணிகளை மேற்கொள்வதற்கு…

Read More

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் தன் பலத்தை நிரூபிக்கும் நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்!

–நஜிமுதீன் எம்.ஹஷான்- இலங்கை நாடும், நாட்டு மக்களும் அரசியலுக்குள் ஆட்பட்டவர்களாய்  இருந்துகொண்டு, தன் வாழ்வியலை பிரதான விடயங்களோடு இணைந்து முன்னெடுத்து வரும் நிலையில், இம்மக்களை மீண்டும் ஒரு எதிர்பார்ப்புமிக்க தேர்தல் அரங்கிற்குள்  அழைத்துச் செல்லும் கட்டாயம் அரசுக்குள் நிலைகொண்டிருப்பதை காலக்கண்ணாடியில் தெளிவாக நோக்க முடிகின்றது. ஆம்! அதுதான் சிறுபான்மையின மக்கள் ஆவலுடன் காத்திருக்கும், எதிர்பார்த்திருக்கும் தன் இனங்களினது அரசியல் ரீதியான ஜனநாயகமிக்க, மனிதநேயமிக்க உதவிகளை, தீர்வுகளை, நன்மைகளை குறிப்பாக, தம் மக்கள் பிரதிநிதிகள் மூலமாக   மத்திய அரசு,…

Read More

நிந்தவூர் பிரதேச சுற்றுச்சூழல், சுகாதார மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்!

-முர்ஷிட்- நிந்தவூரின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ.எம் தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (25) தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது நிந்தவூரில் காணப்படும் உணவகங்கள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட விற்பனை நிலையங்கள், வடிகான்கள், தெருக்கள், மர ஆலைகள், கடற்கரை, விளையாட்டு மைதானம், பொதுச்சந்தை மற்றும் மடுவம் போன்றவற்றின் பொதுச் சுகாதார நிலைகள் மற்றும் அவற்றின் மேம்பாடு தொடர்பிலும், தின்மக்கழிவகற்றல் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Read More

200 பட்டதாரி மாணவர்களுக்கு அடுத்த வருடம் சுயதொழில் வாய்ப்பு ஊக்குவிப்புக் கொடுப்பனவு!

நெடா (NEDA) வின் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப் போவதாக அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு! -ஊடகப்பிரிவு- அடுத்த வருடம் 200 பட்டதாரி மாணவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவை தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் (NEDA) முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தை, மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பல்கலைக்கழக மாணவர்களுக்கான…

Read More

தலைமன்னார் பியர் பாடசாலையின் தமிழ்-சிங்கள புத்தாண்டு நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- மன்னார்/ தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தமிழ்,சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வில், மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் பிரதேசபை உறுப்பினர் நயீம், மதத் தலைவர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.      

Read More

தேசிய அருங்கலைகள் பேரவையின் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!

-ஊடகப்பிரிவு- வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட களிமண்ணினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சி (23) குருணாகல் வேரகர களிமண் உற்பத்திக் கிராமத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், விஷேட அதிதியாக சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவி ஹேஷானி போகொல்லாகம உட்பட அரச அதிகாரிகள்…

Read More

சபை முதல் அமர்வில் சூடுபிடித்த தர்கா நகர் வரிப்பணம்!

-ஊடகப்பிரிவு- பேருவளை பிரதேச சபையின் முதல் அமர்வு நேற்று முன்தினம் (24) சபையில் ஒன்று கூடியது. இதன் போது, சபை தவிசாளர் இம்மாதத்துக்கான முன்மொழிவுகள் அனைத்தையும் அடுத்த மாதம் எடுத்துக் கொள்வதாகவும், தலைவரின் யோசனைகள் மாத்திரம் விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று அறிவித்தார். இதன்போது, பேருவளை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் உரையாற்றுகையில், “நீங்கள் தர்கா நகர் வரிப்பண சங்கத்தை சந்தித்த வேளை ஒரு வாக்கு கொடுத்துவிட்டு வந்தீர்கள், 24ம் திகதி…

Read More

ரஷ்ய உலக பொருளாதார பேரவையில் (டாவோஸ்) பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் அழைப்பு!   

-ஊடகப்பிரிவு- 2018 ஆம் ஆண்டுக்கான புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவைக்கு (St.Petersburg International Economic Forum (SPIEF)) இலங்கையை உத்தியோகபூர்வமாக அழைக்கின்றோம். எமது இந்த அழைப்பு ரஷ்ய குடியரசின் பிரதி பிரதமர் வால்டிமிரோவிச் ட்வோர்கோவிச் (Vladimirovich Dvorkovich) இனால் நேரடியாக விடுக்கப்பட்டுள்ளது என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம், இலங்கைக்கான ரஷ்ய குடியரசின் தூதுவர் யூரிமேட்டரைய் (Yuri Materiy) தெரிவித்தார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட அழைப்பின் பேரில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்…

Read More

கல்பிட்டி ஜன்னதுல் அஷாபிர் பாலர் பாடசாலைக்கு நிதியொதுக்கீடு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மிலின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசில், கல்பிட்டி, பெரியகுடியிருப்பு ஜன்னதுல் அஷாபிர் பாலர் பாடசாலைக்கு ரூபாய் 100,000 நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நவீன கற்றல் நடவடிக்கைக்காக தொலைக்காட்சி (Television) மற்றும் பிளாஸ்டிக் கதிரைகளும் வழங்கப்பட்டுள்ளன….

Read More