Headlines

நற்பிட்டிமுனை முக்கியஸ்தர்கள் கிராம அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ரிஷாட்டுடன் பேச்சு

நற்பிட்டிமுனை கிராமத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கும், அந்த கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றிவைப்பதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கும் உதவிகளுக்கும், நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. நற்பிட்டிமுனை பள்ளி நிர்வாகசபை தலைமையில் உள்ளடங்கிய, ஊர் பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் அடங்கிய குழுவினர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை இன்று காலை (18) அமைச்சில் சந்தித்து தமது நன்றியறிதலை வெளிப்படுத்தியதுடன், மேற்கொண்டு இந்த கிராமத்தின் தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்….

Read More

மன்னார் பெரியமடு கிராமத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் 2.5 ரூபா கோடி ஒதுக்கீடு

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியால் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பெரியமடு கிராமத்திற்கான 2.5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நவ்பீலின் தலைமையில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இவ் வேலைத்திட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட்…

Read More

அஷ்ரப் என்ற ‘வயற்காரன்’

 – முகம்மது தம்பி மரைக்கார் – அஷ்ரப்பை நினைவுகூருதல் என்பது சிலருக்கு, ஒரு சடங்காக மாறி விட்டது போலவே தெரிகிறது. விருப்பமில்லா விட்டாலும், அவரை நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். அஷ்ரப் என்கிற ‘லேபிள்’ இல்லாமல், தங்கள் அரசியற் பண்டங்களை, முஸ்லிம்களிடத்தில் விற்க முடியாது என்பதை, பெரும்பாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள், மிக நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 18ஆவது நினைவு நாள் நேற்று முன்தினமாகும். 2000ஆம் ஆண்டு…

Read More

புத்தளத்தில் வாழும் வடக்கு மக்களின் பிரச்சினைகள் நேரில் கேட்டறிவு

மன்னார்  பிரதேச சபைத் தலைவர்  எஸ்.எச்.எம்.முஜாஹிர் வட மாகாண முஸ்லிம்களின் அகதி முகாம்களான கரம்பை, கல்ப்பிட்டி, கண்டக்குழி, பள்ளிவாசல்துறை, கண்டக்குடா, நுரைச்சோலை, ஆலங்குடா, மற்றும்  கொய்யாவாடி முகாம்களுக்கு நேற்று (16) விஜயம் செய்தார். தவிசாளர் குழு அங்குள்ள முகாம் அதிகாரிகள், பள்ளிவாசல் தலைவர்கள், கிராம முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மீள்குடியேற்றம், அடிப்படைத்தேவைகள் மற்றும் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர். தவிசாளர் இது தொடர்பாக கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களது மேலான…

Read More

கல்கமுவ வன்னிக்குடாவெவ ஜூம்ஆ பள்ளிக்கு பிளாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு!

கல்கமுவ வன்னிக்குடாவெவ ஜூம்ஆ பள்ளிக்கு பிலாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு அன்மையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவருமான எம்.என்.நஸீர் (MA) தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது கல்கமுவ வன்னிக்குடாவெவ பகுதி பள்ளி நிர்வாகிகளையும் அப்பிரதேச மக்களையும் நேரில் சந்தித்து அவர்களது தேவைகளையும் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டர். மேலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் மூலமாக செய்ய வேண்டிய எதிர்காலத் திட்டங்களினையும் அபிவிருத்தி சம்பந்தமான…

Read More

மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்த விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி (அக்கரைப்பற்று) பிரதேச உறுப்பினர்களின் ஏற்பாட்டில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்த விழா மதுரங்குளி ட்ரீம் சென்ட்டர் மண்டபத்தில் நேற்று மாலை (16) இடம்பெற்றது. இவ்விழாவில் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச இளைஞர் அமைப்பாளருமான ஆஷிக் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் புத்தள மாவட்ட அமைப்பாளருமான அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹியா மற்றும்…

Read More

“100 நாள் 200 வேலைத் திட்டம்”

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கில். திருகோணமலை நகர சபை உறுப்பினர் முக்தார் , நகரசபை வேட்பாளர்களான பைசல் , பண்டுசேன ஆகியோர்களின் வேண்டுகோளுக்கிணங்க 4 வது வேலைத்திட்டம் – நெல்சன்புற வடிகான் புனரமைப்பு 2 மில்லியன் ரூபாவிலும் 5 வது வேலைத்திட்டம் – ஜின்னா நகர் 1 வது ஒழுங்கை கொங்ரீட் வீதி 1 மில்லியன்…

Read More

குருநாகல் சாஹிரா கல்லூரி உட்பிரவேச பாதை அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  குருநாகல் மாநகர சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் 1.3 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில், சாஹிராக் கல்லூரி உட்பிரவேச பாதையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் பந்து ஜயசேகர, கல்லூரி பிரதி அதிபர் கமர்தீன், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் கபீர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். (ன) 

Read More

மக்கள் காங்கிரஸின் அக்குரனை, நீரல்லை கிளை அங்குரார்ப்பணம்!

கண்டி மாவட்டத்தின் அக்குரனை பிரதேச சபைக்குட்பட்ட நீரல்லை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  புதிய கிளை அங்குரார்ப்பண நிகழ்வும், எதிர்கால அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும் கடந்த வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான  ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், அக்குரனை கிளையின் தலைவர் இல்யாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் இஸ்வி ஜேபி உட்டப ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Read More

கண்டி, எகொட களுகமுவ பிரதேசத்தில் குப்பைகள் அகற்றும் பணிகள் ஆரம்பம்!

15 வருட காலத்துக்கும் மேலாக கண்டி மாவட்டத்தின் உடபலாத, எகொட களுகமுவ பிரதேசத்தில் பாரிய பிரச்சனையாக இருந்து வந்த குப்பை அகற்றல் பிரச்சனைக்கான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டமாக மகாவலி கங்கைக்கு அருகாமையில் போடப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் பணிகள் கடந்த சனிக்கிழமை  நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உடபலாத பிரதேச சபை உறுப்பினர் பஸால் ஏ காதர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட பிரதான காரியாலயத்தின் மக்கள்…

Read More

“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்!

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்குவகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையில் “பொதியிடல்” பிரதான அம்சமாக இருப்பதாகவும், அந்தத் துறைக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், முதன் முதலாக அரசாங்கம் இத்துறையினருக்கு உதவியளிக்க முன் வந்துள்ளமை அவர்களுக்கான அதிர்ஷ்டம் எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “லங்கா பெக் – 2018” என்ற தொனிப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (14) இடம்பெற்ற பொதியிடலுக்கான கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர்…

Read More

புதிய மாதிரி கிராமத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக்குழு பிரதித் தலைவருமாகிய அப்துல்லாஹ் மஹ்றூபின் முயற்சியில், சேருவில பிரதேச சபை உறுப்பினர் அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க, வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் பணிப்புரைக்கமைவாக 50 வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (13) செல்வநகரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அப்துல்லா மஹ்றூப் எம்.பி, மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ் மற்றும் ஹுசைன் ஜெஸீலா மற்றும் வீடமைப்பு அதிகார சபை மாவட்டப் பணிப்பாளர், கணிய மணல்…

Read More