Headlines

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் வடக்கு மாகாணத்துக்கான ஊடக களப்பயணம்!!!

யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்கள்; மீள் குடியேற்றப்பட்டுள்ளார்களா? மக்களுக்கான அடிப்படை வசதிகள் செயது கொடுக்கப்பட்டுள்ளதா? மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களா? அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கின்றார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு விடைதேடும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களின் காலடிக்குச் சென்று ஆராய்வதே இந்த களப்பயணத்தின் நோக்கமாகும். வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வவுனியா,மன்னார் ஆகிய மாவட்டங்களில் 1990ஆம் ஆண்டு தமிழ்ஈழ விடுதலைப் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம்?,அதே போன்று இறுதி யுத்தத்தில் புலிகளால் கைவிடப்பட்ட தமிழ்…

Read More

“நிந்தவூரில் மீண்டும் இறைச்சிக்கடைகள் திறக்கப்படும்: 1Kg தனி இறைச்சி 850 ரூபாவுக்கு விற்கப்படும்” – தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்!

கடந்த சில வாரங்களாக விலை நிர்ணயத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நிந்தவூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் இறைச்சி கொள்வனவில் பல அசெளகரியங்களுக்குள்ளாகியதோடு அதனை பிரதேச சபை உள்ளிட்ட பல மட்டங்களுக்கும் எழுத்துமூலமாக தெரிவித்திருந்தனர். நேற்று (13) நிந்தவூர் பிரதேச தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில், நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்ற சபை உறுப்பினர்கள் மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் ஆகியோருடன், இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே, நாளைமுதல் நிந்தவூரில் மீண்டும்…

Read More

தவிசாளர் முஜாஹிரினால் தெருவிளக்கு பொருத்தும் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரின் மூலம் தலைமன்னார் ஸ்டேஷன் பகுதிக்கு தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டன. பிரதேச சபை உறுப்பினர் புனிதா அவர்களின் வேண்டுகோளுக்கமைய, தவிசாளர் முஜாஹிரின் முயற்சியில், LED தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள்  இடம்பெற்றன. இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் புனிதா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர் முஸம்மில் உட்பட கிராம மக்களும் கலந்துகொண்டனர். (ஐ)

Read More

மன்னார், கருங்கண்டல் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட, கருங்கண்டல் ரோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலயத்தில் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13) இடம்பெற்றது. வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாந்தை பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு ஐயா, மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் பிரதேச சபை…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தலைமையில் கிண்ணியா தள வைத்தியசாலை விஸ்தரிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

கிண்ணியா தள வைத்தியசாலையின் விஸ்தரிப்பு மற்றும் ஜெய்கா (JICA) திட்டத்தினூடாக வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கிண்ணியா தள வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்றது.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள்  மற்றும் வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். அதனையடுத்து, கிண்ணியா தள வைத்தியசாலையின் விஸ்தரிப்புக்காக, வைத்தியசாலையினைச் சூழவுள்ள காணிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது….

Read More

புதிய உறுப்பினர் சிராஜ் பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்!

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பாலமுனை மின்ஹாஜ் வட்டாரம் சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பாலமுனை 02 ம் பிரிவைச் சேர்ந்த எச்.எம்.சிராஜ் நேற்று (12) மாலை பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். சின்னப்பாலமுனை றியாழுல் ஜென்னா ஜூம்ஆப் பள்ளிவாயலில், நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ. உதுமாலெவ்வை தலைமையில் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை மற்றும் ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையிலேயே அவர் பிரதேச சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்….

Read More

 “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கைப்பணித் தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் தொடர்ந்தும் நடைமுறை” கொழும்பில் அமைச்சர் ரிஷாட்!

வடக்கு – கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக, ஜப்பானைத் தளமாகக் கொண்ட சர்வதேச ஆராய்ச்சி நிலையம், அந்தப் பிரதேசத்தின் பாரம்பரிய நெசவு உற்பத்தி மற்றும் பெண்களுக்கான கைப்பணித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், தற்போது நடைமுறைப்படுத்தி வரும் செயற்திட்டத்தை 2019ஆம் ஆண்டு வரை நீடித்திருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் தேசிய அருங்கலைகள் பேரவையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கும், நீடித்தமைக்கும் சர்வதேச…

Read More

மன்னார் கிராமங்களின் அபிவிருத்திக்கு 13 கோடி ரூபா அமைச்சர் ரிஷாட்டினால் ஒதுக்கீடு!

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களின் துரித அபிவிருத்திக்காக 12 கோடியே 96 இலட்சம் ரூபா நிதியினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒதுக்கியுள்ளார். மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரின் வேண்டுகோளுக்கிணங்கவே, அமைச்சரின் விஷேட நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபை இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிருவாகத்தின் கீழ் வந்துள்ளதை அடுத்து, அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளர் முஜாஹிர், மன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமங்களின் குறைபாடுகளையும், மக்களின்…

Read More

“திருகோணமலை, கப்பல்துறையில் மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படும் நிலை காணப்படுகிறது” – அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

கப்பல்துறை கிராம மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். திருகோணமலை – கப்பல்துறை கிராமத்தில் நேற்று முன்தினம் (11) அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கப்பல்துறை கிராமத்தின் 3/2 பங்குகளை துறைமுகங்கள் அதிகாரசபை கபளீகரம் செய்துள்ளது. எனவே, மக்களுடைய தனியார் காணிகளை…

Read More

அனுராதபுர மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இஷாக் எம்.பியினால் பல்வேறு திட்டங்கள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் சொந்த நிதியிலிருந்து, பதவிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிசோகொட்டுவ மரனாதார அமைப்பிற்கு நேற்று முன்தினம் (10) குடிநீர் வசதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. அத்துடன், நொச்சியாகம பிரதேச செயலகத்துக்குட்பட்ட வல்பொலகம கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில், குடிநீர் செயற்திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் (10)  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ஹெரிசன், இஷாக் ரஹுமான் எம்.பி, தாரிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

Read More

திருகோணமலையில் 8000 மீற்றர் கொங்ரீட் வீதிகள்- அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி

திருகோணமலை மாவட்டத்தில் 8000 மீற்றர் கொங்ரீட் வீதிகள் அமைக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் முயற்சியில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கேற்புடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட நிதியோதிக்கீட்டில் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் இவ் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. பிரதேச மக்களினால்,  அப்துல்லாஹ் மஹ்ரூபின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பெரும்பாலான மணல், கிரவல் வீதிகள் இத்திட்டத்தில் கொங்ரீட் வீதிகளாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

“யாழில் மாட்டிறைச்சி கடைகளை மூடுவது வீண் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” கே.எம் நிலாம்!

மாட்டிறைச்சி கடைகளை மூட மேற்கொள்ளும் நடவடிக்கையில் பெரும் சந்தேகம் நிலவுகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் குறிப்பிட்டார். நல்லூர் பிரதேச சபையில் நேற்று (11) மாட்டிறைச்சி கடைகளை தடை செய்வது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார். மாட்டிறைச்சியை முஸ்லீம் மக்கள் அதிகமாக நுகர்வதை யாவரும் அறிவர். யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் அநேகமான இறைச்சிக்கடைகளை குத்தகை அடிப்படையில் பெற்று நடாத்துவது முஸ்லீம் மக்களாகும். இவ்வாறான சந்தர்ப்பத்தில்…

Read More