Headlines

“இலங்கை – சவூதி உறவுகள் மேலும் வலுவடைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வோம்” சவூதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலும் மக்களின் நலனோம்பு நடவடிக்கைகளிலும் ஆக்கபூர்வமான உதவிகளை மேற்கொண்டு வரும் சவூதி அரேபியாவுடனான உறவுகள், மேலும் வலுவடைய வேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரித்தார். சவூதி அரேபியா நாட்டின் 88 வது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல்-ஹர்தி தலைமையில், கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று மாலை (25)…

Read More

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை குழு அங்கத்தவராக கே.எம்.நிலாம் நியமனம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக் குழு அங்கத்தவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வை.எம்.எம்.ஏயின் வேண்டுகோளுக்கிணங்க, சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை யாழ்ப்பாணம் அகில இலங்கை  வை.எம்.எம்.ஏயின் அலுவலகத்தில் வைத்து  நேற்றிரவு(25) அதன்  தலைவர் எம்.எஸ் றஹீமினால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன், குறித்த பேரவையின் உதவி செயலாளரான என்.பவாஸ் என்பவரும் இக்குழு அங்கத்தவராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – புல்மோட்டையில் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

25 வது, 26 வது, 27 வது, 28 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆதம்பாவா தௌபீக், முன்னாள் உறுப்பினர்களான பதுர்தீன், சல்மான் பாரிஸ், வட்டாரக் குழுத்தலைவர் நௌபல் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல்…

Read More

மன்னார் ஸ்ரீ சிவ சுப்பிரமணியபுரம் முருகன் ஆலயத்தின் பொதுமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு! 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் ஸ்ரீ சிவ சுப்பிரமணியபுரம் முருகன் ஆலயத்தில் பொதுமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு  இன்று (25) இடம்பெற்றது. ஆலய மதகுருவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். அத்துடன் சிறப்பு விருந்தினராக மன்னார் பிரதேச சபை தவிசாளர்…

Read More

களனி பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

கம்பஹா மாவட்டத்தின் களனி பிரதேச சபைக்குட்பட்ட ஹுனுபிடிய ஸ்ரீ ராஹுல வித்தியாலத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்தரையாடலொன்று அண்மையில் (21) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜெ.எம்.பாயிஸ் அவர்களின் தலைமையில், இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகளும் எட்டப்பட்டன. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர். இதேவேளை மாகாண…

Read More

“மக்கள் காங்கிரஸின் துரித வளர்ச்சிக்கு காரணம் அமைச்சர் ரிஷாட்டின் தனிமனித ஆளுமையும் சேவைகளுமேயாகும்”-தவிசாளர் தாஹிர்!

மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களுக்குப் பிறகு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தனிமனித ஆளுமையாக, தான் சார்ந்த மக்களின் உரிமை அரசியலை மட்டுமின்றி அபிவிருத்தி அரசியலையும் எவ்வாறு வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார் என்பதை வடபகுதிக்குச் சென்று பார்க்கும் போதுதான் தெரிகிறது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்தாஹிர் தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் நகர்வு மற்றும் மாற்று அரசியல் தொடர்பான கலந்துரையாடலொன்று, இளைஞர்கள் மற்றும் மீனவ சமூகத்தின் பங்குபற்றுதலோடு இரண்டு கட்டங்களாக நேற்று (24) நிந்தவூர்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் யாழ்.ஜின்னா மைதான மண்டபம் புனரமைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், மீள்குடியேற்றத்துக்கான விஷேட வடக்கு செயலணியினால் யாழ். ஜின்னா மைதான பார்வையாளர் மண்டபம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த புனரமைப்பு வேலைகளை யாழ் மாநகர சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான கே.எம் நிலாம் கடந்த சனிக்கிழமை (22) பார்வையிட்டார். குறித்த பார்வையாளர் மண்டபம் செயலணியில் அங்கத்துவம் வகிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால், 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மாந்தை மேற்கு பிரதேச மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்தும், தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு மூன்றாவது நாளாக மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் நேற்று (24)  இடம்பெற்றது. மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு ஐயாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான்…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதிக்கீட்டில் மாவடிச்சேனையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மாவடிச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் அதே நேரத்தில், வாழ்வாதார உதவிகளினூடாக வறிய மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும் அயராது உழைத்து வருகிறார். அந்தவகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் மாவடிச்சேனை கிராமத்தில் வேலையற்று, பொருளாதாரக் கஷ்டத்திலிருக்கும் யுவதிகளின் வாழ்க்கைத்தரத்தை…

Read More

மீனவ அமைப்புக்கள் மற்றும் அதன் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் – 05 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு!

ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தில் துறைமுக நுழைவாயில் மண்ணால் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக, மண் அகழ்வது தொடர்பான மீனவ சங்கங்கள் மற்றும் மீனவ அமைப்புக்கள் அவற்றின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (24.09.2018) துறைமுகத்தில் இடம்பெற்றது. மீனவ சங்கங்கள் மற்றும் மீனவ அமைப்புக்களின் விஷேட அழைப்பில், அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்களும் கலந்துகொண்டார். இங்கு சட்டத்தரணி அன்சில் உரையாற்றும் போது, மண்ணை அகழ்வதற்கு…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – தோப்பூரில் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

22 வது , 23 வது, 24 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ஜெசீலா, வட்டாரக் குழுத் தலைவர்களான நிஷ்மி, முஜாஹித் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல் ரஷாக்கின் நெறிப்படுத்தலில், தோப்பூர் பிரதேசத்துக்கான…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்தும், தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு இரண்டாவது நாளாக மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் இன்று (23)  இடம்பெற்றது. மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான்…

Read More