Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் பேருவளையில் இடம்பெற்ற சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) மற்றும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) ஆகியன இணைந்து நடாத்திய, தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு, களுத்துறை மாவட்டத்தில் 02 ஆம் கட்டமாக பேருவளை, தர்கா நகர் நாதா கார்டனில் இன்று (29) நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் களுத்துறையில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) மற்றும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) ஆகியன இணைந்து நடாத்திய, தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு, களுத்துறை மத்திய கல்லூரியில் இன்று (29) இடம்பெற்றது. களுத்துறை நகரசபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் களுத்துறை அமைப்பாளருமான ஹிஸாம் சுஹைலின் தலைமையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொதுசன தொடர்பு அதிகாரி…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் நிதி ஒதுக்கீட்டில் P.P பொற்கேணி அ.மு.க.பாடசாலைக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா! 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் மன்/பி.பி.பொற்கேணி அ.மு.க பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வு, அதிபர் எம்.எச்.ஹஸ்பி தலைமையில் இன்று (28) இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந் நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் ஷரீப், வலயக்கல்வி பணிப்பாளர், முசலி பிரதேச சபை…

Read More

சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்த விழா தொடர்பான கலந்துரையாடல்!

“மன்னார் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் சவால்கள்” என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று காலை (28) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாகப் பங்கேற்கும் இந்த விழாவை முன்னிட்டு, மன்னார் அரசாங்க அதிபர் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். சுற்றாடல் அதிகார சபை உயரதிகாரிகள்,…

Read More

“இன, மத, கட்சி பேதமற்ற அபிவிருத்திகள் தொடரும்” அப்துல்லா மஹரூப் எம்.பி

இன, மத, கட்சி பேதமற்ற அரசியல் அபிவிருத்தியை திருகோணமலை மாவட்டத்தில் எனது ஆரம்ப காலம் தொட்டு நடை முறைப் படுத்தி வருகிறேன் இன்றும் அதைத்தான் செய்து வருகிறேன். இனக் குரோதமற்ற சமாதான சூழலினை உருவாக்க திருகோணமலை மாவட்ட மூவின மக்களும் உறுதி பூண்டுள்ளார்கள் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். பதவிசிறிபுர பகுதியில் ஐந்து வீதிகளுக்கான கொங்ரீட் இடும் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,…

Read More

தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முசலிப் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்!

மன்னார், முசலியில் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய மீலாத் நபி விழாவை முன்னிட்டு, முசலிப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்தவகையில், மன்னார் அரசாங்க அதிபர் மோகன் ராஜ் தலைமையில், மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டு, அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், விழா ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன்…

Read More

சிலாவத்துறை தபால் நிலையத்திற்கு விரைவில் புதிய கட்டடம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் முசலிக்கு விஜயம் செய்த, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தற்காலிகக் கட்டிடமொன்றில் இயங்கிவரும் சிலாவத்துறை தபால் நிலையத்தைப் பார்வையிட்டதுடன், விரைவில் நிரந்தரக் கட்டிடமொன்றைக் கட்டித்தருவதாக உறுதியளித்தார். -ஊடகப்பிரிவு-

Read More

முசலி தேசிய பாடசாலைக்கு அமைச்சர்களான ரிஷாட், ஹலீம் விஜயம்!

மன்னார் முசலி தேசிய பாடசாலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி தேசிய மீலாத் விழா நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளடங்கிய உயர்மட்ட அதிகாரிகள் குறித்த பாடசாலைக்கு இன்று (27) விஜயம் செய்து இடத்தைப் பார்வையிட்டதுடன், விழா ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர். -ஊடகப்பிரிவு-  

Read More

தேசிய மீலாத் நபி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!

மன்னார் முசலியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய மீலாத் நபி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டமும், மீலாத் விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பகிர்ந்தளித்தல் மற்றும் மீலாத் விழாவுக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் இன்று காலை (27) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் அரசாங்க அதிபர் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், கைத்தொழில் மற்றும் வர்த்தக…

Read More

செங்கலடி பற்று பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம்!

செங்கலடி பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று 27.09.2018 இணைத்தலைவர்களான கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழந்திரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Read More

நெல்லுத்தீவு வாழ் மக்களுடனான கலந்துரையாடல்!

நிந்தவூரின் நெல்லுத்தீவு பிரதேச சமூக, பெளதீக மற்றும் உள்கட்டுமான அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக, நெல்லுத்தீவு வாழ் மக்களுக்கும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிருக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று(26) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. குறித்த பிரதேசத்தில் காணப்படும் பாதை விஸ்தரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிரினால் ஆலோசனை வழங்கப்பட்டது. இதன்போது நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

உடுநுவர அம்பரபொல வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

கண்டி மாவட்டத்தின் உடுநுவர தேர்தல் தொகுதியில், தவுலகல வட்டாரத்தில் அமைந்துள்ள அம்பரபொல டீன் சைட் தோட்டத்து வீதியை கொங்கிரீட் பாதையாக செப்பனிடும் பணிகள் நேற்று (25) ஆரம்பமானது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக, உடுநுவர பிரதேச சபை உறுப்பினர் நஸார் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 150,000 மூலமாக இந்த அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், உடுநுவர தேர்தல் தொகுதியில் அமைந்திருக்கும் ரகுபெத்த பாதை செப்பனிடுதல் மற்றும் பாலம் அமைத்தல் தொடர்பான கலந்துரையாடலொன்றும் நேற்று உடுநுவர பிரதேச…

Read More