அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் பேருவளையில் இடம்பெற்ற சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) மற்றும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) ஆகியன இணைந்து நடாத்திய, தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு, களுத்துறை மாவட்டத்தில் 02 ஆம் கட்டமாக பேருவளை, தர்கா நகர் நாதா கார்டனில் இன்று (29) நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர்…
