Headlines

ஆயுதக் கொள்வனவு – முஸ்லிம் அமைச்சர்களுக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்? விளக்கம் கேட்கின்றது அமைச்சர் ரிஷாட்டின் ஊடகப்பிரிவு!

புலிகளிடமிருந்த அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம்கள் வசமே இருப்பதாகவும், இதனை வைத்துக்கொண்டே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் அரசாங்கத்தை அச்சுறுத்தவும், அடிபணியவைக்கவும் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் கருத்துக்கள் தொடர்பில், அரசாங்கம் ஆழமான பார்வையுடன் அக்கறை செலுத்தி, உரிய விசாரணை நடாத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென  அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  ஊடகப்பிரிவு  அரசாங்கத்தைக் கோரியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச கருத்துச் சுதந்திரம், ஊடகச்சுதந்திரங்களைப் பயன்படுத்தி எவரும் கருத்துக்களை வெளியிட முடியும்….

Read More

அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பான விளக்கம்

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் இன்றைய (16) டெய்லி மிரர், லங்கா தீப பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் T D S P பெரேரா திருத்தமொன்றை வெளியிட்டுள்ளார். தரிந்து ஜெயவர்தன என்பவரால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பில் வழங்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையின் கணிப்பு தவறானதெனவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாவனையில் 3 வாகனங்கள் மாத்திரமே …

Read More

சமையல் எரிவாயுவிற்கான விலைசூத்திரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது…

உலக சந்தையில் எரிபொருள்விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்க விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று உலக சந்தையில் எரிவாயுவிற்கான கேள்வி மற்றும் விலை ஏற்ற இறக்கத்திற்கேற்ப உள்ளுரில் விலையை நிர்ணயம் செய்வதற்காக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கேற்ப நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். சமையல் எரிவாயு வழங்கும் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின்  விலையை அதிகரிப்பது தொடர்பாக விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த…

Read More

சமையல் எரிவாயுவிற்கான விலைசூத்திரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது…

உலக சந்தையில் எரிபொருள்விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்க விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று உலக சந்தையில் எரிவாயுவிற்கான கேள்வி மற்றும் விலை ஏற்ற இறக்கத்திற்கேற்ப உள்ளுரில் விலையை நிர்ணயம் செய்வதற்காக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கேற்ப நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். சமையல் எரிவாயு வழங்கும் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின்  விலையை அதிகரிப்பது தொடர்பாக விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த…

Read More

புல்மோட்டை முள்ளிப்பொத்தானை பிரதேசங்களில் லங்கா சதொச கிளை திறப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை மற்றும் முள்ளிப்பொத்தானை  ஆகிய இடங்களில் லங்கா சதொச நிறுவனத்தின் புதிய கிளைகள்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் மக்கள் பாவனைக்காக நேற்று (14) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். (ன)  

Read More

“வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கை அறிமுகம்”அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கையை தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. எனது அமைச்சின் கீழ் செயற்படும் இத்தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபை, இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கும் மற்றும் தொழில் முயற்சிகளை உறுதிப்படுத்தும் பொருட்டு இவற்றை அபிவிருத்தி செய்தல், ஊக்குவித்தல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் முன்னணி அரச நிறுவனமாக காணப்படுகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக…

Read More

“வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர பொறிமுறை வேண்டும்” ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

வட பகுதி மீனவர்களுக்கு தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களால், தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநியாயங்களை கட்டுப்படுத்த, நிரந்தரப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். கடந்த மூன்று தசாப்தகாலமாக யுத்தத்தின் பிடிக்குள் வாழ்ந்து, கடலில் சுயாதீனமாக தமது தொழிலை மேற்கொள்ள முடியாதிருந்த மீனவர்கள், யுத்த காலத்தில் கடற்படையினரினதும், ஆயுததாரிகளினதும் கெடுபிடிக்குள் பல்வேறு அபாயங்களின் மத்தியில் தமது தொழிலை மேற்கொண்டு வந்தனர். குறிப்பிட்ட கடல் எல்லைக்கு அப்பால் சென்று தொழில்…

Read More

“முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைக்கான காரணம் என்ன?” ஹிஜ்றாபுரத்தில் அமைச்சர் ரிஷாட்!

பேரினக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் சிலர், தமது கட்சித் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தி, அதிகாரிகளை அச்சுறுத்தி தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியல் இருப்பு மற்றும் எதிர்காலத் தேர்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே, அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவற்றில் மக்கள் நலன் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட மாகாணசபை உறுப்பினர் ஜனோபரின்  நிதியொதுக்கீட்டில் வாழ்வாதாரத்…

Read More

துணுக்காய் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பொலிஸாரின் பாவனைக்கென வாகனம் கோரிய பொதுமக்கள்! மல்லாவி வைத்தியசாலையின் குறைபாடுகளைத் தீர்த்து வைக்குமாறும் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், மல்லாவி பொலிஸாருக்கு வாகனம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் பிரதேச பொதுமக்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வேண்டுகோள் விடுத்தனர். துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் கே.பிரபாகரனின் நெறிப்படுத்தலின் கீழ், இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் தலைமையில் நேற்று மாலை (13) பிரதேச…

Read More

முல்லைத்தீவு, முள்ளியவளையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி அங்குரார்ப்பண நிகழ்வு!

வடமாகாணசபை உறுப்பினர் ஜனோபரின் நிதியொதுக்கீட்டில், முல்லைத்தீவு, முள்ளியவளை, குமாரபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளியின் அங்குரார்ப்பண நிகழ்வில், (12) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிர் உட்பட பலர் கலந்து கொண்டனர். (ன)  

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கேற்ப நாளை பாண்டியன்குளத்தில் உயர்மட்டக் கூட்டம்! பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை!

பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகளுடன் தொடர்புபட்ட போக்குவரத்துப் பிரச்சினையை தீர்க்கும் வகையில், மாந்தை கிழக்கு பிரதேசத்திலுள்ள வீதிகளையும், உள்வீதிகளையும் புனரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இந்த திணைக்களங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உத்தரவிட்டார். முல்லைத்தீவு, மாந்தை கிழக்குப் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம், இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் காதர் மஸ்தான், சாந்தி ஸ்ரீஸ்கந்த ராஜா ஆகியோரின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை (13) இடம்பெற்றது. பிரதேச செயலாளர் நிரஞ்சனாவின்…

Read More

கல்பிட்டி நகர வட்டாரங்களுக்கான நிருவாகக் குழு உறுப்பினர்கள் தெரிவுக் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர வட்டாரத்திலிருந்து மத்திய குழுவிற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம், கல்பிட்டி நகர அமைப்பாளர் முஷம்மிலின் ஏற்பாட்டில், கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் நேற்று (12) இடம் பெற்றது. இதன் போது, கல்பிட்டி நகர வட்டாரங்களுக்கான நிருவாகக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்தக் கூட்டத்தில், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பவுசான், முதலைப்பாளி வட்டார அமைப்பாளர் தௌபீக்…

Read More