சந்தர்ப்பவாத சாஷ்டாங்கம்!
எல்லோரும் எதிர்பார்த்தது போல மாகாண சபைகளின் எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அண்மைய வரலாற்றில் ஒரு வாக்கையாவது ஆதரவாகப் பெறாமல் கட்சி பேதங்களின்றி தோற்கடிக்கப்பட்ட பிரேரணை என்றால், அது இந்த மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கைதான். இதிலுள்ள வியப்பு, அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சரே இதற்கு எதிராக வாக்களித்ததே. எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்து வாக்களித்தாலும் புதிய முறையில் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளதை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகவே கருத…
