Headlines

நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர் றிஷாத் (இன்று இரவு 10:30 இற்கு)

நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர் றிஷாத் (இன்று இரவு 10:30 இற்கு) தெரண தொலைக்காட்சியின் நேரடி அரசியல் நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்றிரவு பங்கேற்கின்றார். வில்பத்து விவகாரம் இலங்கையின் அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள இன்றைய நிலையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சிங்கள மொழியில் இந்த அரசியல் நிகழ்வில் பங்கேற்பது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்வு மூலம் சிங்கள மக்களிடத்தில் முஸ்லிம்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள தப்பபிப்பிராயங்களை களைவதற்கு ரிசாத் முனைந்துள்ளமைமைய முஸ்லிம் கல்வியலாளர்கள் வரவேற்கின்றனர்.

Read More

ஒரு அகதியின் குரல் அகதிகளுக்காக ஒலித்தது

இப்றாஹிம் மன்சூர் அமைச்சர் ஹக்கீம் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் ஏன் இந்தளவு அசிரத்தையாகவுள்ளார் என்ற சிந்தனை அடிக்கடி மேலெழும்.அதற்கான விடையை நேற்று நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான வெளிச்சம் நிகழ்ச்சியை பார்க்கும் போது பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அமைச்சர் றிஷாத் ஒரு அகதி.அந்த அகதிகளுக்கு ஒரு துன்பம் என்றால் அது அமைச்சர் றிஷாதிற்கும் தான் என்ற விடயத்தை அவர் இன்று நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான வெளிச்சம் நிகழ்ச்சியில் பார்க்கக் கூடியதாக இருந்தது.அவரது பேச்சுக்களில் தன்னை…

Read More

இனவாதம் இன ஒற்றுமையை வலியுறுத்துகிறதா?

-M.M.A.Samad – இந்நாடு எல்லோருக்கும் சொந்தம் என்ற மனப்பாங்கு எல்லோரிடமுமில்லை. இந்நாட்டில்; பெரும்பான்மையாக பௌத்த – சிங்கள மக்களே வாழ்கின்றனர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அதற்காக ஏனையவர் வந்தேறு குடிகளல்ல. அவர்களும் ஆண்டாண்டு காலமாக இம்மண்ணை நேசித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்;. இத்தேசத்தைக் கௌரவப்படுத்தியவர்கள். அவர்களால் இத்தேசம் மாண்பு பெற்றிருக்கிறது. இதனால், இந்நாட்டுப் பிரஜைகள் என எவரெவரெல்லாம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்நாட்டின் சொந்தக்காரர்கள். இந்நாடு அவர்களுக்கும் சொந்தம். அவர்கள் அனைவரும் சகல உரிமைகளும் பெற்று இம்மண்ணில் வாழ்வதற்கு…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியின் அதிரடி; காணமல் போன படகுகள் கண்டுபிடிப்பு

நேற்று [2016/01/05] அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் அம்பாறை மாவட்ட மீனவர் சங்கத்தினர் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களை பிரதி அமைச்சரின் காரியாலயத்தில் சந்தித்தனர். இதன் போது அண்மையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த சகோதர்கள் ஆறு பேர் ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்று படகுடன் காணமல் போன சம்பவம் சம்பந்தமாக பிரதியமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் ஆறு நாட்களின்…

Read More

வில்பத்து பிரச்சினை: முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு (வீடியோ)

வில்பத்து தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடுதொடர்பில் கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது. විල්පත්තු ගැටළුවට මුස්ලිම් දේශපාලන නායකයින් එකතුවෙයි පදිංචියට ගියේ කල්ලතෝනියින් නෙවෙයි හදෙන් වැටුණු මිනිස්සු නෙවෙයි නාමල් රාජපක්ෂ වව්නියාවෙ ගස් කපලා නාමල්ගම හැදුවා.

Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடந்த வில்பத்து தொடர்பான  ஊடகவியலாளர் சந்திப்பு

 – அனஸ் அப்பாஸ் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் “வில்பத்து தொடர்பான எமது நிலைப்பாடு” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று(05) காலை கொழும்பு ரேனுகா ஹோட்டலில் இடம்பெற்றது. அமைச்சர்களாக ஏ.எச்.எம்.பௌசி , ரிஷாட் பதியுத்தீன், பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான், இஷாக் ரஹ்மான், எம்எச்எம் நவவி, மாகாணசபை உறுப்பினர்களான அர்ஷத் நிசாம்தீன், ஜனுபர், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத்சாலி, ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிச்…

Read More

வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணிகளா? அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்களா? முஸ்லிம் எம் பிக்கள் கேள்வி!

-சுஐப் எம் காசிம் வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது ஒட்டுமொத்தமான எதிர்ப்பை வெளியிட்டதோடு கண்டனத்தையும் தெரிவித்தனர். வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்கள் அங்கு சட்ட விரோதமாக குடியேறியுள்ளதாக  இனவாதிகள் மேற்கொண்டு வரும் தீவிரமான, பொய்யான பிரசாரம் தொடர்பிலும், வில்பத்து சரணாலயத்தை விஸ்தரித்து வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தப் போவதான ஜனாதிபதியின் அறிவிப்பினால்…

Read More

உடநிதிகம அல்-இம்ரான் பொது விளையாட்டுமைதானத்தின் அபிவிருத்திப்பணிகளுக்கு 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

அநுராதபுரம், கெகிராவ தேர்தல் தொகுதியின் உடநிதிகம அல்-இம்ரான் பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப்பணிகள் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் 10 இலட்சம் ரூபா சொந்த நிதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

Read More

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம்; அமைச்சர் றிஷாத் சந்திப்பு

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ,ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக வாணிபத்துறை அமைச்சருமான அல் ஹாஜ் றிஷாத் பதியுதீன் மற்றும் அகில இலங்கை இலங்கை மக்கள் காங்ரஸ் தவிசாளரும்,கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகியோருக்கிடையில் நேற்று (2017.01.04) இடம்பெற்ற கலந்துரையடலின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

Read More

கடந்த காலங்களில் கொள்ளைக்காரர்களாக இருந்தவர்கள் தற்போது கொள்கை அரசியலைப்பற்றி பேசுவதற்கு யோக்கியதை அற்றவர்கள் – அமீர் அலி

கடந்த காலங்களில் கொலைகாரர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் இருந்தவர்கள் தற்போது கொள்கை அரசியலைப்பற்றி பேசுவதற்கு யோக்கியதை அற்றவர்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இன்று (4.1.2017) புதன்கிழமை அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  மேற்கண்டவாறு கூறினார்.. அவர் மேலும் தெரிவிக்கையில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் அமீர் அலி ஒரு கொள்கை அரசியல் வாதி அல்ல எனவும் முஸ்லிம் காங்கிரசிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசிலும்…

Read More