Headlines

“விளையாட்டு மைதானத்தை மும்மன்ன முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கே வழங்கவும்” வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு

தம்பதெனிய மும்மன்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை மாணவர்களுக்கு பயன்படுத்த குளியாப்பிடிய வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதி வழங்கி மைதானத்தை பாடசாலைக்கு கையளித்துள்ளார். மும்மன்ன பாடசாலை மைதானத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை குறித்து நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்று ஆர்.ஆர்.ரி அமைப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பாக குளியாபிடிய வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்தே மைதானத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…

Read More

முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கான புதிய கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி திறந்து வைப்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள், முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கான புதிய கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவினால் திறந்துவைக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.  

Read More

மீராவோடை அபிவிருத்தி குழு பிரதி அமைச்சர் அமீர் அலி சந்திப்பு

மீராவோடை அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு மீராவோடை முபாரக் மெளலவி அவர்களின் இல்லத்தில் நேற்று 17.01.2017 இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் இராப்போசனமும் இடம்பெற்றது.

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியினால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக மண்டபத்தில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக செயலாளர் கோபாலரட்ணம் தலைமையில் 17.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி , பட்டிபளை ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 194 விவசாயிகளுக்கு உபகரணங்கள்…

Read More

“யுத்தத்தால் பாதிப்புற்ற பிரதேசத்தை இன, மத பேதமின்றி கட்டியெழுப்ப முன் வாருங்கள்” – அமைச்சர் றிஷாத்

யுத்தத்தால் மோசமாகப் பாதிப்புற்ற வட மாகாணத்தைக் கட்டியெழுப்ப அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இன, மத பேதமின்றி கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வவுனியாவில் நேற்றுக் காலை (16) இடம்பெற்ற நவீன பேரூந்து நிலைய அங்குரார்ப்பண விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் அங்கு உரையாற்றினார். அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பிரதம அதிதியாக பங்கேற்ற இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அமைச்சர் ரிஷாட்டுடன் பிரதிப்போக்குவரத்து அமைச்சர்…

Read More

களுவாஞ்சிக்குடி திரு முருகன் கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட களுவாஞ்சிக்குடி திரு முருகன் கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா 17.01.2017 ஆம் திகதி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பா.கண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ் வீதி 1.00 நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டது இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக செயலாளர் கோபாலரட்ணம், பட்டிருப்பு தொகுதி…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில்  சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கிவைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் களுதாவளை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் 17.01.2016ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் சீவல்தொழில் ஈடுபடுவோருக்கு 8.00 பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதபோன்று களுதாவளை மகளிர் சங்கதினருக்கு 3லட்சம் பெறுமதியான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஆலோசகர் கணேசமூர்த்தி, பிரதி அமைச்சரின்…

Read More

புகையிரத கடவை மற்றும் அல் அக்ஸா வீதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 208B/2 பிரிவுக்குட்பட்ட புகையிரத கடவை மற்றும் அல் அக்ஸா வீதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். அல் அக்ஸா வீதி புனரமைப்பதற்கான பிரதி அமைச்சர் தனது அமைச்சின் நிதி 3.00மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதபோன்று நீண்ட காலமாக திருந்தப்படாமல் இருந்த ஹூதாபள்ளிவாயல் புகையிரத கடவை புனரமைப்பதற்காக 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்பட்டது….

Read More

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு

16.12.2017 நேற்று அமைச்சர் ரிஷாத்   மன்னார் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற  பொதுமக்கள் சந்திப்பில் கலந்து  கொண்டதுடன்  அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன், இணைப்புச் செயலாளருமான இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

மன்னார்: வெற்றி பெற்ற அணிக்கு நினைவுச் சின்னம்

-இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் பங்களிப்புடன் இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவினால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு வருகைத்தந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உள்ளிட்ட அதிதிகள் அழைத்துவரப்படுவதையும்,கலந்து கொண்ட அணியினரையும்,வெற்றி பெற்ற அணிக்கான வெற்றிக்…

Read More