“விளையாட்டு மைதானத்தை மும்மன்ன முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கே வழங்கவும்” வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு
தம்பதெனிய மும்மன்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை மாணவர்களுக்கு பயன்படுத்த குளியாப்பிடிய வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதி வழங்கி மைதானத்தை பாடசாலைக்கு கையளித்துள்ளார். மும்மன்ன பாடசாலை மைதானத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை குறித்து நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்று ஆர்.ஆர்.ரி அமைப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பாக குளியாபிடிய வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்தே மைதானத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…
