அரசியல்சொல்வாக்கு இருப்பதாக கூறி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த இடமளியோம். நியமனம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்
குறுகிய அரசியல் ஆதாயங்களைக் கருத்திற்கெடுக்காது பிரதேச மக்களின் நலனையும் அவர்களின் பொருளாதார நிலையையும் கருத்திற்கொண்டே தகைமை பெற்றவர்களுக்கே புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டை கனிய மணல் நிறுவனத்தில் பணிபுரியும் 18 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் கனிய மணல்…
