Headlines

கடுமையாக போராடிய றிஷாட் பதியுதீனும், ஹிஸ்புல்லாவும் அடிவாங்குவதிலிருந்து தப்பினர்

20ம் திகதி நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகளான றிசாத்தும், ஹிபுல்லாவும் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமான விடயங்களை நீக்குவதற்கு கடுமையாக போராடியுள்ளனர். நேற்று புதன்கிழமை காலை 8 மணிக்கு சபாநாயகருடன் முதற்சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் இரவு 9 மணிவரை பாராளுமன்றத்தில் இருந்து மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாதகங்கள் வந்துவிடலாகாது என்பதற்காக கடுமையாக முயன்றுள்ளனர். நேற்று மாலை 6.30 மணிக்கு இதுதொடர்பிலான…

Read More

அவசர அவசரமான திருத்தத்தால் முஸ்லிம், மலையகத்தவர்  அச்சம். அ.இ.ம.கா, மு.கா, மலையக முற்போக்கு முன்னணி இணைந்து கையளித்த  கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அமீர் அலி வலியுறுத்து.

மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்ட  மூலத்தில் அவசர அவசரமாக மேலும் சில திருத்தங்களை மேற்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடும் என்ற நியாயமான அச்சத்தின் காரணமாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மலையக முற்போக்கு முன்னணி ஆகிய இணைந்து சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையிலான கோரிக்கையொன்றை இன்று  காலை (20) உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளித்துள்ளதாகவும் எமது நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென நாங்கள் அரசிடமும் வலியுறுத்தியுள்ளதாகவும்;…

Read More

அஸ்பெஸ்டஸ்  இறக்குமதி தடையின் விளைவாக  செங்களி தயாரிப்பு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை காட்டி வருவதாகவும், அடுத்த ஆண்டு அஸ்பெஸ்டஸ் பொருட்களை தடைசெய்வதன் விளைவாகவே இந்தத் துறையிலான பொருளாதார நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க நாம் நாட்டம் காட்டிவருகின்றோம் எனவும், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   இலங்கை பீங்கான், மற்றும் கண்ணாடிரக கவுன்ஸ்லின் 14வது வருடாந்த பொதுக் கூட்டம் கொழும்பு கிங்ஸ்பெரி ஹேட்டலில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.   இந்த நிகழ்வில்…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் முயற்சியில் மையவாடி சுற்றுமதில் நிர்மாணிப்பு.

  தம்பலகமம் , சிராஜ் நகர் மையவாடி சுற்றுமதில் 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிப்பு பாராளுமன்ற உறுப்பினருர் அப்துல்லா மஹ்ரூப் முயற்சியில் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களின் உதவியுடன் தம்பலகமம் , சிராஜ் நகர் மையவாடி சுற்றுமதில் 10 இலட்சம் ரூபா நிதி பெற்றுகொடுகபட்டு நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளது. இவ் வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர்…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனர்நிர்மானம்.

கெளரவ அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தம்பலகாமம் சிறாஜ் நகர் பிரதேச வீதியின் புனர்நிர்மான பணிகள் தம்பலகாம பிரதேச முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹலீமுள்ளா அவர்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், முன்னாள் நகரசபை தவிசாளருமாகிய கெளரவ டாக்டர் ஹில்மி மஹ்ரூப் சட்டத்தரனி அவர்கள்,அமைச்சர் அவர்களின் வேண்டு கோளிற்கினங்க சென்று பார்வையிட்டார்.

Read More

பெண்களின் நலன்களைப்பேண பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். மக்கள் காங்கிரஸின் மகளிர் அணி தேசிய ஒருங்கிணைப்பாளர்

பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை  நடைமுறைப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணிக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தரும், உளவள ஆலோசகருமான இல்ஹாம்  மரிக்கார், கொலஜ் ஒப் எல்த் கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர் எம்.எச்.எம். முனாசிக் ஆகியோரும்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் கிண்ணியா மாஞ்சோலை பாலம் புனரமைப்பு

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு MEH மஹரூப் வீதி புனரைபின்போது உடைந்து சேதமடைந்த மாஞ்ச்சோலை பாலம் மாணவர்கள் உட்பட பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்துவந்த நிலையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில்கள் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களின் உதவியுடன் நிதி பெறப்பட்டு வேலைகள் RDA தொழிநுட்ப உதவியுடன், கிண்ணியா…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசுவது ஒரு புற்றுநோயாக காணப்படுகின்றது என அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசுவது ஒரு புற்றுநோயாக காணப்படுகின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு மண்டபத்தடி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசி எதையும் சாதித்து…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி முயற்சியால் அங்குராணை மக்களுக்கு பாலம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்குறாணை, மினுமினுத்தவெளி பிரதேசத்திற்குச் செல்வதற்கான ஆற்றைக் கடப்பதற்கு ஒரு பாலம் இல்லாமல் பல சிரமங்களை எதிர்கொண்ட மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் பாலம் அமைக்கப்படவுள்ளதை முன்னிட்டு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லாமல் அக்குறாணை மற்றும் மினுமினுத்தவெளி ஆகிய கிராமங்களை சேர்ந்த இரண்டு கிராம மக்கள் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துப் பாதைகள் இல்லாததாலும் அக்கிராமங்களுக்குச் செல்லும் பிரதான பாதையூடாகச் செல்லும்…

Read More

மியன்மார் அகதிகளை இலங்கையில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக இனவாதிகள் மோசமான பிரசாரம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசாத் சாலி வலியுறுத்து.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இந்த நாட்டில் வாழும் சூழல் இல்லாத போது, மியன்மார் அகதிகளை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து நாங்கள் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக இனவாதிகள் போலியான வதந்திகளைப் பரப்பி தற்போது இருக்கின்ற அற்ப சொற்ப நிம்மதிகளையும் குலைக்கப்பார்ப்பதாக தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத் சாலி கண்டனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் மரைக்கார், ஆசாத் சாலி, அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோர் ரோஹிங்கியோ அகதிகளை இங்கு கொண்டு வந்து குடியேற்ற…

Read More

வடக்கில் வாழ்ந்தவர்களை மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கை

நீண்டகால உள்ளக இடமபெயர்ந்தவர்களை வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டத்தை மீள்குடியேற்ற செயலணி முன்னெடுத்து வருகின்றது. பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு மீள்குடியேற எதிர்பாரத்துக் கொண்டிருப்பவர்கள் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழான இந்த செயலணிக்கு உடன் விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் பொறியலாளர் யாசீன் தெரிவித்தார். வட மாகாணத்தில் முன்னர் வாழ்ந்து யுத்த நெருக்கடிகளாலும், யத்தப்பீதியினாலும் வெளியேறிய, வெளியேற்றப்பட்டு தென்னிலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் அகதி மக்கள் இந்த செயலணிக்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி மீண்டும்…

Read More

மேல் மாகாணசபையில் 20வது திருத்தச்சட்டம். முஹம்மட் பாயிஸ்(மா.உ)

அன்று 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளின் பெரும்பாலான அதிகாரங்களைகளை கொடுத்துவிட்டு இன்று மீண்டும் எஞ்சியுள்ள மாகாண சபையின் அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு தாரைவார்த்து கொடுத்து மாகாணசபைகளின் தரங்களை மாநகரசபை அல்லது பிரதேசசபையின் தரத்திற்கு தரந்தாழ்த்த எடுக்கும் இந்த 20வது திருத்த சட்ட மூலத்தை நாங்கள் ஆதரிக்க போவதில்லை என மேல் மாகாணசபை உறுப்பினர் முஹம்மட் பாயிஸ்  மேல்மாகாண சபையில் நடைபெற்ற 20வது திருத்தச்சட்ட மூலத்தின் மீதான விவாதின் போது மிகத்தெழிவாகவும் ஆடித்தனமாகவும் எடுத்துரைத்தார். அது மாத்திரமன்றி நாங்கள்…

Read More