Headlines

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.




உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம்  மன்னார் மடு பிரதேச செயலகத்திற்குற்பட்ட தட்சனாமருதமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
மடு பிரதேச செயலாளர் எப் பி சத்தியசோதி  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன்  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம் வை தேஷபிரிய, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி எம் கொடகந்த, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  எஸ் டிமெல், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *