Headlines

504 கோடி ரூபா நட்டத்தில் தபால் திணைக்களம்

கடந்த வருடம் தபால் திணைக்களமானது 504 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்திற்கான தபால் திணைக்களத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை 2014ஆம் வருடம் 298 கோடி ரூபா நட்டமும்,கடந்த வருடம் 504 கோடி ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திறமையற்ற நிர்வாகமே இந்த நட்டத்திற்கு காரணம் என்றும், தபால் திணைக்களத்தை கட்டியெழுப்ப நல்லாட்சி உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய திறமையான…

Read More

இந்தியாவிற்குச் சென்று திரும்பிய இருவருக்கு மலேரியா

உலக சுகாதார அமைப்பினால் மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு வாரத்தில் தங்கல்ல-பெலியத்த பிரதேசத்தில் மலேரியா நோயாளிகள் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கு புனித யாத்திரையை மேற்கொண்ட இருவருக்கே இந்த மலேரியா தொற்றியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு யாத்திரை சென்ற ஆண் ஒருவருக்கும், பெண்ணொருவருக்குமே மலேரியா தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வைத்து காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த இருவரினதும் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போதே இவர்களுக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மலேரியாவால் பாதிக்கப்பட்ட குறித்த இருவருடனும்…

Read More

அறபா தினத்தின் முக்கியத்துவம்!

சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு அனுப்பப்பட்ட ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் முதல் முதலாக சந்தித்த இடம் அறபா. இதனால்தான் இந்த இடத்திற்கு அறபா என்று பெயர் சொல்லப்படுகின்றது. வேறு பல கருத்துக்கள் இருந்த போதும் இக்கருத்தே பிரபல்யமாக கூறப்படுகின்றது. அறபா நாள் என்பது சங்கையான நான்கு மாதங்களில் உள்ள துல் ஹிஜ்ஜா மாதமாகிய ஒன்பதாம் நாளைக் குறிக்கும். இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த நாளாகிய இந்நாள்தான் அறபா தினமாகும். அன்றைய நாளில்தான் ஹாஜிகள் அறபா எனும்…

Read More

உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்: பாதாள உலகக்குழு உதவி

பாதாள உலகக்குழுவின் உதவியுடன் இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் வழிநடத்தியதாகவும் அந்நாட்டு பாதாள உலகக்குழுவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பினாங் மாநிலத்தின் முதலமைச்சர் பீ.ராமசாமியின் ஆதரவாளர்களான ஸீரோ தெர்டீன்ஸ் என்னும் பாதாள உலகக்குழுவினரின்…

Read More

மஹிந்தவை மீண்டும் வீழ்த்திய மைத்திரி!

இலங்கையில் அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகள் கடும் போட்டி போடுகின்றனர். இந்நிலையில் இலங்கையில் முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகளுக்கு இடையில் பேஸ்புக்கில் தமது ஆதிக்கத்தை செலுத்துவதில் பாரிய போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்கள் வரை பிரதான சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆதிக்கம் செலுத்திய மஹிந்தவை பின்தள்ளி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பெற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இலங்கையில் அதிகமான மக்கள் விரும்பம் வெளியிட்டுள்ள…

Read More

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் கணவன் பலி ; தாய், மகள் காயம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பு பகுதியில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் கணவன் பலியானதுடன் மனைவி மற்றும் பிள்ளை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பு பகுதியிலிருந்து லிந்துலை நாகசேனை வலஹா கொலனி பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பெயார்வெல் பகுதியில் 21  அடி பள்ளத்தில் இருந்த புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடத்தின் மீது விழுந்து…

Read More

கேலக்சி நோட் 7 போன்களை பயன்படுத்த வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை

பேட்டரி கோளாறால் திடீரென்று வெடித்து சிதறும் ’சாம்சங் கேலக்சி நோட் 7’ ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.

Read More

தேசிய இனப்பிரச்சினைக்கு 70 ஆண்டுகாலமாக தீர்வில்லை – ஐ.தே.க.மேடையில் ஜனாதிபதி

தேசிய இனப்பிரச்சினைக்கு 70 அண்டுகாலமாக தீர்வு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு சம்மேளனம் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று (10) இடம்பெற்ற போது, அதில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கடந்த 70 ஆண்டுகாலமாக கடந்த அரசாங்கங்கள் தோல்வியுற்றுள்ளன. கடந்த காலத்தில் இருந்த…

Read More

ஐ.தே.கவின் ஆண்டு விழாவில், தமிழும் தேசிய கீதம் பாடப்பட்டது

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா, கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவின் ஆரம்பத்தில்  சிங்கள மொழியில் தேசிய கீதமும், இறுதியில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.

Read More

திருமலைக்கு பொலிஸ் மா அதிபர் விஜயம்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இன்று திருகோணமலை பொலிஸ் தலையகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை, வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட அவர், இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ; சாரதிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தெமட்டக்கொட மேம்பாலத்திலிருந்து பொரளை சந்திவரை பாதை மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை ஆண்டு நிறைவு விழா இடம்பெறும்  கெம்பல் பார்க் மைதானத்திற்கு செல்லும் புஞ்சி பொரளை மற்றும் ஓவல் மைதானத்திற்கு அருகிலுள்ள வீதிகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதிகள் ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா நிறைவுபெறும் வரை குறித்த…

Read More

ஐ.தே.க. மேடையில் ஜனாதிபதி மைத்திரி, சந்திரிகா

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டுள்ளார். இவர் சற்றுமுன்னர் கெம்பல் பாரக் மைதானத்திற்கு வருகைத்தந்துள்ளதுடன், அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார். இந்நிலையில் குறித்த ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More