Headlines

20 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் குயில்வத்த பகுதியில் லொரி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயங்களுக்கானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். ரொசாலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த லொரியின் சுக்கான் திடீரென இயங்காத நிலையில் சாரதி கட்டுபாட்டை இழந்து லொரி பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துகுள்ளானதில் சாரதி உட்பட மேலுமொருவராக இரண்டு பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். மேலும், காயங்களுக்குள்ளான இருவரும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த…

Read More

இரவு நேரங்களில் நரித்தனமான செயற்படும் சிங்களே அமைப்பினர்

சிங்களே என்று சொல்லிக் கொண்டு இரவு நேரங்களில் நரித் தனமாக செயல்படும்  சிலரால் சிங்கள இனத்துக்கே அவமானமாகும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் நேற்று (6) கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், ‘சிங்களே என்ற ஓர் இனம் தெரியாத குழுவொன்று தற்பொது நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது…

Read More

3 மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு, இணைத்தலைவராக றிஷாத்

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் நேற்று மாலை (06/01/2016) நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தொடர்ந்துசெயற்படுகின்றார்.

Read More

பறக்கும் தட்டு குறித்து, உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் – ஹிலாரி

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், பறக்கும் தட்டு குறித்த மர்மத்தின் உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் வரவிருக்கின்ற ஜனபாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் குறித்த பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் இவர், பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இதில் ஒரு வாக்குறுதியாக, நான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால், பறக்கும் தட்டும் குறித்த உண்மையை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் 77 சதவீதம் மக்கள், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு…

Read More

ஒன்றுபடுவதன் மூலமே நமது இலட்சியத்தை அடைய முடியும் -றிஷாத் பதியுதீன்

புத்தளம் வாழ் முஸ்லிம்கள் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமைப்படுவதன் மூலம் புத்தளத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப்பெற்றுக்கொள்ள முடியுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் மொஹிதீன் ஜூம்மா பள்ளிவாசல் ஏற்பாட்டில் பழைய குத்பா பள்ளி கலாசாரமண்டபத்தில் இடம்பெற்ற மீலாத் விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது,சிறு சிறு வேறுபாடுகள் காரணமாக புத்தளம் மக்கள் இன்று பிரிந்து செயல்படுகின்றனர். என்னதான் கட்சிக்கொள்கைகள் இருந்தாலும் சமூகம் என்று வரும்போது நாம் ஒன்றுபடுவதன்…

Read More

ஜனாதிபதிக்கு தெரிவிக்க -1919

இலங்கை நாட்டில் வாழ்கின்ற சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் புதிய சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது. “ஜனாதிபதிக்கு தெரிவிக்க” எனும் பெயரிலான இந்தச் சேவை எதிர்வரும் 8ம் திகதி காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது. இந்த சேவையூடாக பொதுமக்கள் தங்களுடைய குறைகள் தேவைகள் மற்றும் யோசனைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு…

Read More

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சியில் சாதாரண உடையில் பங்கேற்ற ஜனாதிபதி

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நேரடி நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண உடையில் பங்கேற்றுள்ளார். இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு பங்கேற்றுள்ளார். அண்மைய வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேரடியாக வருகை தந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்கத்தின் பலம்பொருந்திய அமைச்சர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள் கூட வானொலி நிகழ்ச்சிகளுக்கு கலையகத்திற்கு சென்றதில்லை எனவும், வீடுகள் அலுவலகங்களிலிருந்தே பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும்…

Read More

ஜனாதிபதியின் அறிவிப்புக்களை ஆலோசனையாகவே எடுக்கவேண்டும்

அர­சி­ய­ல­மைப்பு 19 ஆவது தட­வை­யா­கவும் திருத்தம் செய்­யப்­பட்­டுள்ள நிலையில் ஜனா­தி­ப­தியின் கணி­ச­மான அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அதனால் ஜனா­தி­ப­தியின் கூற்­றுக்­களை ஆலோ­ச­னை­க­ளாக மாத்­தி­ரமே எடுத்­துக்­கொள்ள வேண்டும் என்­ப­தோடு பிர­த­மரின் கருத்­துக்­க­ளையே நடை­மு­றைக்கு சாத்­தி­யப்­படும் விட­யங்­க­ளாக கருத வேண்டும் என நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன தெரி­வித்தார். யுத்­தக்­குற்ற விசா­ரணை நீதி­மன்றம் அமைப்­பது தொடர்பில் அர­சாங்கம் அவ­சரம் காட்­டாது என்ற ஜனா­தி­ப­தியின் கருத்து தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும்…

Read More

இலங்கை கடற்படையினருக்கு தொடர்ந்து பயிற்சியளிப்போம் : நவாஸ்

இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளையும் நாம் தொடர்ந்து வழங்குவோம்.   அத்தோடு இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இது எமது முதலாவது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையாக அமையும்  என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஸ் ஷெரிப்பிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்…

Read More

மூன்று ஆசனங்கள் கொண்ட பேருந்துகளை தடை செய்யக் கோரிக்கை

கடந்த காலங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மூன்று ஆசனங்களைக் கொண்ட பேருந்துகளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இந்த விசாரணைகளுக்காக பிரதி மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் மற்றும் மத்திய போக்குவரத்துச் சபை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தப் பேருந்துகள் தூர பயணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் எனவும் இனிமேல் இவ்வாறான பேருந்துளை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் எனவும்…

Read More

சட்டம் அனுமதித்தால் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளை சுட்டே கொல்வேன்

இந்­தியச் சட்டம் அனு­ம­தி­ய­ளித்தால் பாலியல் துஷ்­பி­ர­யோக குற்­ற­வா­ளி­களை சம்­பவ இடத்­தி­லேயே சுட்­டுக்­கொல்வேன் என்று டில்லி பொலிஸ் ஆணை­யாளர் பி.எஸ்.பஸ்ஸி தெரி­வித்­துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, பெண்கள் பாது­காப்பு குறித்து நாங்கள் எப்­போதும் கவ­லைப்­ப­டு­கிறோம். பாலியல் துஷ்­பி­ர­யோகம் உட்­பட பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களில் ஈடு­ப­டு­வோரை, சட்டம் அனு­ம­தித்தால், சம்­பவ இடத்­தி­லேயே துப்­பாக்­கியால் சுடவோ, தூக்­கி­லி­டவோ விரும்­பு­கிறோம். அத்­த­கைய அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்த டில்லி பொலிஸ் தயங்­காது. பெண்கள் தங்­களைத் தாங்­களே தற்­காத்­துக்­கொள்­வது நல்­லது. அதற்­காக நாங்கள் பொறுப்பை…

Read More

கடற்றொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்களை பாவிக்க தடை

மீன்பிடி நடவடிக்கைகளின்போது பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்களை இன்று (6) முதல் பாவிப்பதற்கு தடை விதிப்பதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. கடற்றெபாழிலின்போது பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்கள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை நாரா நிறுவனம் கடற்றொழில் அமைச்சரிடம் இன்று கையளித்துள்ளது. லைலா வலை மற்றும் சுறுக்கு வலை என்பவற்றைப் பயன்படுத்தி மீனிபிடித் தொழிலில் ஈடுபட தடை விதிப்பதாக அமைச்சர் இதன் போது  அறிவித்துள்ளார். இன்று முதல் இது சட்டமாக்கப்படுவதாக இந்த நிகழ்வின் போது அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை வெடிபொருட்களை…

Read More