Headlines

நினைவு சின்னம் வழங்கி வைப்பு

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வருகைத்தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் பாரியார் திருமதி கன்சுல் நவாஸ் ஷரீப் இன்று கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சின் கிழ் இயங்கும் லக்ஷல காட்சி அறைக்கு விஜயம் செய்தார். இதன் போது லக்ஷல நிறுவனத்தின் தலைவரும்,முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின உபவேந்தருமான எம்.எஸ்.இஸ்மாயில் பிரதமரின் பாரியாருக்க நினைவு சின்னம் ஒன்றினை வசழங்குவதை படத்தில் காணலாம்.

Read More

சாரதி உறக்கம்: விமானத்துடன் மோதிய பஸ்

நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த விமா­ன­மொன்­றுடன் பஸ் ஒன்று மோதிய சம்­பவம் கொல்­கத்­தாவில் நேற்று இடம்­பெற்­றது. கொல்­கத்­தா­வி­லுள்ள நேதாஜி சுபாஸ் சந்­தி­ரபோஸ் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த எயார் இந்­தியா நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான விமானம் ஒன்றின் மீது, விமான நிலை­யத்­திற்குள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த ஜெட் எயார் வேஸ் நிறு­வ­னத்தின் பஸ் ஒன்று மோதி­யது. நேற்று (4) அதி­காலை 5.25 மணி­ய­ளவில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. அஸாம் மாநி­லத்­தி­லுள்ள சில்சார் நக­ருக்குப் புறப்­ப­ட­வி­ருந்த விமா­னமே இவ்­வாறு சேத­ம­டைந்­ததுள்ளது. மேற்­படி பஸ்ஸின் சாரதி அதி­கா­ரி­களால் விசா­ரிக்­கப்­பட்­ட­போது,…

Read More

ஏறாவூர் மருந்தகத்தில் கொள்ளை; இரு இளைஞர்கள் கைது

ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மருந்தகத்தினுள் கூரை வழியாக நுழைந்த மர்ம நபர்கள், 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 21 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை என்பவற்றை திருடிச் சென்றதாக முறையிடப்பட்டது. இக் கொள்ளைச் சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்றிருந்தது. மேற்படி சம்பவம் தொடர்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட புலனாய்வு விசாரணைகளின்…

Read More

அமெரிக்கா: மஸ்ஜிதில் பன்றி இறைச்சியை வைத்துச் சென்ற நபர் கைது

இஸ்லாத்தில் பன்றி இறைச்சியை உண்பதும் விலக்கப்பட பாவச்செயலாகும் (ஹராம்) . இந்நிலையில், அமெரிக்காவில் சமீபகாலமாக மதவெறுப்புணர்வின் உச்சகட்டமாக இஸ்லாமியர்களால் விலக்கப்பட்ட பன்றி இறைச்சியை சிலர் மசூதிகளுக்குள் வீசிவிட்டு செல்வது அரங்கேறி வருகின்றது. இதில் ஒருகட்டமாக அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான புளோரிடாவின் டிட்டுஸ்வில்லி பகுதியில் உள்ள மஸ்ஜித் அல் முனின் என்ற மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை இதே சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மசூதியின் பின்வாசல் வழியாக ஒற்றை ஆடையால் உடலை மறைத்தபடி, மொட்டைத் தலையுடன் நுழைந்த ஒரு மர்ம…

Read More

விசமிகள் போட்ட புதிய பூட்டினால் ஆர்ப்பாட்டம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலத்தில் இன்று முதலாம் ஆண்டிற்கான மாணவர்களை இணைக்கும் நிகழ்வுகள் நடைபெறவிருந்த நிலையில் பாடசாலை பூட்டை உடைத்தெறிந்து விட்டு இனந்தெரியாத விசமிகள் வேறு பூட்டை போட்டுவிட்டுச்சென்றதால் மாணவர்களும் பெற்றோரும் பாடசாலையினுள் செல்லமுடியாது வெளியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிஞ்சு மாணவர்கள் நீண்ட நேரம் வெயிலில் தவித்ததை அவதானிக்க முடிந்தது. நேற்று வழமை போன்று பாடசாலையை மூடிவிட்டுச்சென்று இன்று காலை பாடசாலை திறக்க வந்தபோது…

Read More

நாட்டில் இனவாத சக்திகள் தலைதூக்கியுள்ளன

நாட்டில் இனவாத சக்திகள் தலைதூக்கியுள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கறுப்பு கொடிகளை ஏற்றுவதற்காக முயற்சிக்கும் தரப்பினர் இனவாதத்தை தூண்டும் நோக்கில் அவ்வாறு செய்கின்றனர். அமைச்சுப் பதவிகளை எதிர்நோக்கும் சிலரும் இவ்வாறு இனவாதத்தை தூண்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை வெளியிட விரும்பவில்லை.இனவாத தரப்புக்கள் சிங்களத்தையும், பௌத்தத்தையும் பாதுகாக்கும் முனைப்புக்களில் ஈடுபடவில்லை எனவும், நாட்டை மீளவும் யுத்தம் நோக்கி நகர்த்துவதே அவர்களின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளர். அரசியல்வாதிகளே…

Read More

சுவர்களில் எழுதப்பட்டு வரும் சிங்ஹ லே – பொலிஸார் விசாரணை

கொழும்பின் புறநகரான நுகேகொட பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில வீடுகளின் மதில் சுவர்களின் மீது ‘சிங்ஹ லே’ என்ற சிங்கள வாசகங்களை எழுதியவர்களை கண்டுபிடிப்பதற்காக விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்த விசாரணைகள் நடப்பதாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இனங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவர்களால் முன்னெடுக்கப்படும் விஷமத் தனமான நடவடிக்கை இது என்று அரசியல்வாதிகள் சிலரும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். தென்னிலங்கையில் அண்மைக்காலமாக ‘சிங்ஹ…

Read More

ஈரானை புறக்கணிக்கும் அரபுநாடுகள்

ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை சவூதி அரேபியா நிறுத்துவதாக அறிவித்ததை தொடர்ந்து ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது. இது தவிர பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் சவூதி அரேபிய பாணியில் ஈரானை புறக்கணிக்க தீர்மாணித்துள்ளது. பஹ்ரைனில் இருக்கும் ஈரான் ராஜதந்திர அதிகாரிகளை அந்த நாட்டை விட்டு வெளியேற 48 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Read More

நல்லாட்சிக்கெதிராக ஆர்ப்பாட்டம்!

நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் புதிய அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ள குழுக்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சத்தியாக்கிரகங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. இலங்கையில் அரசு மாற்றம் ஏற்பட்டு ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைய உள்ளது. அன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்த ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளினால் ஏற்பட்ட அதிருப்தி நிலையை வெளிப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 3…

Read More

நீரில் மூழ்கி இரு சிறுமிகள் பலி

வாழைச்சேனை பிரதேசத்தில் நீரில் மூழ்கி, இரு சிறுமிகள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தின் போது 13 மற்றும் 14 வயதான சிறுமிகளே உயிரிழந்துளள்னர். நேற்று (4) மாலை பூங்கா அருகில் இருந்த குளம் ஒன்றில் இறங்க முற்பட்டபோதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பிரேதபரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

4 இந்திய மீனவர்கள் கைது

காரைநகர் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த மீனவர்கள் பயணித்த படகு ஒன்றினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள மரண தண்டனையை நீக்குமாறு பல யோசனைகளை முன்வைத்து கடிதம் ஒன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நேற்று (4) சமர்ப்பித்துள்ளது. மனித உரிமையின் அடிப்படையில் மரணத்தண்டனை கொடூரமானதாகும் மனிதாபிமானமற்றதாகும். ஆகவே மனித சமூதாயத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை செயல்பட வேண்டும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் நீதி…

Read More