Headlines

கல்முனையில் வாகனங்கள் மீது தீ வைப்பு

கல்முனை – சாஹிப் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

போலி அறிக்கையைத் தயாரித்த அதிகாரி கைது

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற பெண் ஒருவருக்கு போலி குடும்பப் பின்னணி அறிக்கையைத் தயாரித்து வழங்கிய அபிவிருத்தி அதிகாரி, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணை பிரிவினரால் குறித்த அதிகாரி  கைது செய்யப்பட்டுள்ளார். ரம்பேவ பிரதேச செயலாளர் காரியாலயத்தில் சேவையாற்றும் அபிவிருத்தி அதிகாரியே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மூன்று வயதுடைய குழந்தை ஒன்றின் தயாருக்கு போலியான குடும்பப் பின்னணி அறிக்கையை தயாரித்து, அவரை கடந்த வருடம் ஜூன்…

Read More

இன்றும் தடம்புரண்டுள்ளது புகையிரதம்

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில், இன்றும் புகையிரதம் தடம்புரண்டுள்ளது. காலியில் இருந்து மருதானை நோக்கி சென்ற புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை,கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில், புகையிரதம் நேற்று (சனிக்கிழமை) காலை தடம்புரண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஹம்மது நபி (ஸல்) குறித்து, எடுத்துக்கூறிய விக்னேஸ்ரன்

அவசர உலகத்தில் திடீர் பணக்காரர்களாக வருவதற்கே விரும்புகின்றார்கள் இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (09) மன்னாரில் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப கட்டிடங்களை திறந்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீரிய வாழ்க்கைமுறை, ஒழுக்கம், வர்த்தகத்தின் உண்மைத்தன்மை, மார்க்கத்தின் வழிமுறை அனைத்தையுந் தொலைத்து விட்டு என்ன இழிதொழில் செய்தாவது திடீர் பணக்காரர்களாக மாறிவிட வேண்டும் என்ற துடிப்பில் பலர் இருக்கின்றார்கள். தமது பிள்ளைகளையே இழந்துவிடக் கூடிய போதைப் பொருள் கடத்தல்,…

Read More

தர்மங்கள் செய்வதில், முஸ்லிம்கள் முதலிடம்

‘அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைத்து, இந்திய நாடு முழுவதும் 350,000 பள்ளிக்கூடங்களை உருவாக்கி சேவையாற்றி வருவதுடன், தான்-தர்ம காரியங்களில் பணத்தை செலவழிப்பதில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாட்டிலேயே முதலிடத்தில் இருந்து வருகிறார், அசீம் ஹாஷிம் பிரேம்ஜி. 2,404 கோடிகளை (இந்திய மதிப்பில்) செலவழித்து, நந்தன் ரோகினி குடும்பம் இரண்டாம் இடத்திலும், 1,322 கோடிகளை வழங்கி நாராயண மூர்த்தி குடும்பத்தினர் 3-ம் இடத்திலும், 1,238 கோடிகளுடன் தினேஷ் குழுமம் 4-ம் இடத்தில் உள்ளது. நாட்டிலேயே…

Read More

பெலவத்தை சீனித் தொழிற்சாலையை மேலும் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும்

பெலவத்தை சீனித் தொழிற்சாலை ஊழியர்களின் பிரதிநிதிகளும் அந்தப் பிரதேசத்தில் கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் நேற்று (௦9) ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிபதுறை அமைச்சருமான றிசாத் பதியுதீனை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்தித்தனர்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், இந்த சந்திப்பின் போது, பெலவத்தை சீனித் தொழிற்சாலை கரும்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு…

Read More

நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்ள புதிய மொபைல் அப்ளிகேசன்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்வதற்காக மொபைல் அப்ளிகேசன் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கை நாடாளுமன்றின் நடவடிக்கைகள் பற்றி இந்த மொபைல் அப்ளிகேசன் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த உத்தியோகபூர்வ அப்ளிகேசனை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (7) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை இலகுவில் மேற்கொள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் இந்த மொபைல் அப்ளிகேசன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Read More

சீன உயர்மட்ட குழு இலங்கை வருகிறது

சீன வர்த்தக அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான தினைக்களத்தின் பணிப்பாளர் யங் வியுகுன் தலைமையிலான சீன அரசாங்கத்தின் உயர் மட்ட குழு இன்று இலங்கை வருகின்றது. இன்று இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்த குழு ஹம்பந்தொட்டை துறைமுகம், கொழும்பு- கண்டி அதிவேக வீதி மற்றும் போர்ட் சிட்டி ஆகிய திட்டங்கள் தொடர்பிலும் ஆராயவுள்ளது. இலங்கையில் கடந்த அரசாங்கத்தினால் சீன நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட பல பாரிய திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் கீழ் ஸ்தம்பிதம் அடைந்துள்ள…

Read More

புறாவைக் காணவில்லை : குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து

மகன் வளர்த்த புறாவைக் காண­வில்லை என தேடிச்­சென்ற தந்தை ஒரு­வர்­மீது பக்­கத்து வீட்­டுக்­காரப் பெண் கத்­தியால் குத்­தி­யுள்ளார். படு­கா­ய­ம­டைந்த அவர் வாழைச்­சேனை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் கடந்த திங்கட்கிழமை இடம்­பெற்­றுள்­ளது. பிறைந்­து­ரைச்­சேனை முகைதீன் பள்­ளி­வீ­தியில் வசிக்கும் 50 வயது நிரம்­பிய குடும்­பஸ்­தரே இவ்­வாறு கத்­திக்­குத்­துக்கு இலக்­காகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நப­ராவார். சம்­பவ தின­மான அன்று குறித்த தந்­தையின் மகன் தான் வளர்த்த புறாவைக் காண­வில்லை என்றும் இறு­தி­யாக பக்­கத்து வீட்டின் கூரையில்…

Read More

நல்லாட்சியை முன்னெடுக்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பின்  ஒரு வருட பூர்த்தியை தேசிய அரசாங்கமானது நாளை மறுதினம் கொண்டாடவுள்ள நிலையில் நாளைய தினம் மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய ஒன்றினைந்த சிவில் அமைப்புக்கள்   நல்லாட்சியை மலரச் செய்வதற்காக மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து  பயணிக்குமாறு வலியுறுத்தி  மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை கொழும்பில் முன்னெடுக்கவுள்ளது. மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படுகின்றமை, ஊழல் வாதிகளுக்கு எதிராக அரசின் மந்தமான விசாரனைகள், தனிப்பட்ட கட்சிகளின்  தேவைகளுக்கு ஜனநாயக தேர்தல்களை…

Read More

இலங்கை பொருளாதார மாநாடு 2016

இலங்கை பொருளாதார மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த பொருளாதார மாநாட்டில் சர்வதேச மட்டத்திலான முதலீட்டாளர்கள், பொருளியல் துறையில் நோபல் பரிசு வென்ற கலாநிதி ஜோசப் ஸ்டீல்கிலிட்ஸ் உள்ளிட்ட புத்திஜீவிகள் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வலய நாடுகளிடையேயான அபிவிருத்தி, போட்டித்தன்மை மற்றும் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள்…

Read More

வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவர் கட்டணம்

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சோதனைகளை (செனலிங்) மேற்கொள்ளும் வைத்திய நிபுணர்களின் கட்டணத்தை ரூபா 2000 ஆக வரையறுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நோயாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தற்கமைய விசேட வைத்திய நிபுணர்களின் சேவையை பெற்றுக் கொள்ளும்  நோயாளர்களிடமிருந்து வைத்தியர்  கட்டணமாக 250 ரூபா தொடக்கம் ரூபா 2000 வரை அறவிடப்படலாம். விசேட வைத்திய நிபுணர் கட்டணம் உட்பட அதற்குரிய வைத்தியசாலை கட்டணமாக ரூபா 100…

Read More