பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாந்துவிடக்கூடாது!
புதிய அரசியலமைப்பினால் இலங்கையில் பௌத்த தர்மத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதலிடமோ ஒற்றையாட்சிக்கோ எதுவிதமான பாதிப்பும் ஏற்படாது. இலங்கை வரலாற்றில சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள முதலாவது புதிய அரசியலமைப்பாக இது அமையும் என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. பிட்டகோட்டேயிலுள்ள ஐ.தே.கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சபை முதல்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; அரசாங்கம் தற்போது புதிய அரசியல…
