Headlines

நீல மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்




இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்கள் என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

இதன் இலங்கை ரூபாய் பெறுமதி படி சுமார் 4,300 கோடி ரூபாவாகும் என உரிமையாளரான இலங்கையர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட குறித்த நீல மாணிக்கக் கல்லின் நிறை 1404.49 கரட் ஆகும்.

முன்னதாக குறித்த மாணிக்கல்லை 175 மில்லியன் டொலர்களுக்கும் அதிக தொகையில் ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என்று மதிப்பிட்டிருந்தது.

இந்நிலையிலேயே அதற்கான விலையை அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

(அத தெரண)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *