Headlines

முஸ்லிம்களின் தொழுகையில், கலந்துக்கொண்ட கனேடிய பிரதமர்

முஸ்லிம்களின் தொழுகையில் கலந்துக் கொண்ட ‘கனடா பிரதமர்’ ஜஸ்டின்..! A video documenting Canadian Prime Minister Justin Trudeau’s visit to a mosque in Canada has recently emerged, showing him joining Muslim worshipers for evening prayers during Ramadan in 2013, nearly two years before he was elected, the CIJNews website reported on Monday. Trudeau was leader of the Liberal…

Read More

ஞானசாரருக்கு விளக்கமறியல்

பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது. இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ்…

Read More

சவூதி இளவரசர் இலங்கை வருகை

சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவூத் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவ்விஜயத்தின் போது சவூதி இளவரசர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Read More

‘சிங்க லே’அமைப்பைத் தடை செய்யுமாறு கோரிக்கை

‘சிங்க லே’ அமைப்பினை தடை செய்யுமாறு அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் உடனான சந்திப்பின் போதே சமன் ரத்னப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘சிங்க லே’ , ‘தமிழே’ அல்லது ‘முஸ்லிம் லே’ போன்ற எந்தவொரு இனவாத அமைப்புக்களும் அவசியமில்லை. 71ஆம் மற்றும் 81ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு இரத்த ஆறுகள் ஓடியதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக போர் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில் இனியும்…

Read More

காலி முகத்திடலில் அழிக்கப்பட்ட யானை தந்தங்கள்

359 ஆபிரிக்க காட்டு யானைகளின் தந்தங்கள் காலி முகத்திடலில் இன்று (26) அழிக்கப்பட்டன. காலி முகத்திடலில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இந்த யானை தந்தங்கள் அழிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. சர்வதேச சுங்கத் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான லெஸ்லி காமினி குறிப்பிட்டார். வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். குறித்த காட்டு யானை தந்தங்கள் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிய வருகிறது….

Read More

பணிப்­பெண்களுக்கான பயிற்சிக்காலம் நீடிப்பு

மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு தொழி­லுக்கு செல்லும் பணிப்­பெண்­களின் பயிற்சிக் காலம் 40 நாட்கள் வரை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது. வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள வெளி­நாட்­டுக்கு பணிப்­பெண்­க­ளாக செல்லும் பெண்­க­ளுக்கு வழங்­கப்­படும் பயிற்­சியின் ஆரோக்­கி­யத்­தன்மை மற்றும் அதன் கால அளவு தொடர்­பாக ஆராய்ந்து இந்த தீர்­மா­னத்தை எடுத்­த­தாக பணி­ய­கத்தின் ஊட­கப்­பேச்­சாளர் உபுல் தேஷப்­பி­ரிய தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில், இது­வரை காலமும் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக தொழி­லுக்கு செல்­ப­வர்­க­ளுக்­காக…

Read More

கல் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு

திருகோணமலை – சம்பூர் 7 கிராமத்திலுள்ள கிணற்றில் கல்லொன்றுடன் கட்டப்பட்ட நிலையில் மாணவனொருனின் சடலம் இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 6 வயதுடைய மாணவனுடையது என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்  சம்பூர்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஜனாதிபதியைச் சந்திக்கவில்லை : நாமல்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை உத்­தி­யோக பூர்­வ­மா­கவோ அல்­லது உத்­தி­யோ­கப்­பூர்­வ­மற்ற வகை­யிலோ எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சந்­தித்­தி­ருக்­க­வில்­லை­யென முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க் ஷவின் புதல்­வரும் அம்­பாந்­தோட்டை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் நாமல் ராஜ­பக்­ ஷ­வுக்கும் இர­க­சிய சந்­திப்பு ஒன்று கடந்த வாரம் இடம் பெற்­றுள்­ள­தாக ஆங்­கில ஊட­க­மொன்று செய்தி வெளியிட்­டி­ருந்­தது. குறித்த செய்­தியில், தனது குடும்ப உறுப்­பி­னர்கள் பல்­வேறு வகை­யான விசா­ர­ணை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஒருவர் ஐந்­தாறு விசா­ர­ணை­களை எதிர்­கொண்­டு­விட்­ட­தா­கவும் நாமல் ரர­ஜ­பக்ஷ மைத்­தி­ரிக்கு…

Read More

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு : ஐவர் கைது

– க.கிஷாந்தன் – பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்று (25) இரவு வேளையில் ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டிருந்த 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பகுதியில் இவர்கள் பல நாட்களாக இவ்வாறு சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டு…

Read More

மகளுக்கு நீச்சல் கற்றுத் தரும் மார்க் ஜூக்கர்பெர்க்

தன் மகள் மேக்சின் முதல் புகைப்படத்தை பதிவிட்டு அண்மையில் பேஸ்புக்கையே கலக்கிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தற்போது மகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கவும் தொடங்கி விட்டார். இந்த பயிற்சியின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை “மேக்சிற்கு இதுதான் முதல் நீச்சல். இதை அவள் மிகவும் விரும்பினாள்” என்ற குறிப்புடன் பேஸ்புக்கில் பதிவிட்டார். இதை மார்க்கைப் பின் தொடரும் 4.8 கோடி பேரில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். மார்க் படிக்கிறாரோ இல்லையோ புகைப்படத்திற்கு கீழே சோ…

Read More

“எனது கழுத்தை அறுத்து உயிர்துறப்பேன்” – மஹிந்த

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால் “எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. ரோஹித அபே குணவர்தனவின் பாணந்துறையில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதியும், குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 2015 ஜனவரி 09 ஆம் திகதி…

Read More

ஞானசார தேரர் சற்றுமுன்னர் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னளியகொடவின் மனைவிக்கு நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியது, ஏசியது ஆகிய  குற்றச்சாட்டுகளில் ஹோமாகம நீதிமன்றால் நேற்று (25) பிடியாணை உத்தரவு பிடிக்கபட்டு இன்று காலை 10.00 மணியளவில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யபட்டுள்ளதாக போலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. தற்போது கைது செய்யபட்டு போலிஸ் காவலில் இருக்கும்  ஞானசார தேரர் இன்று ஹோமாகம நீதிமன்றில் ஆஜர் படுததபடுவார் எனவும் போலிஸ் ஊடகப்பிரிவு மேலும்…

Read More