Headlines

முல்லைத்தீவு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் உருக்கம்

– ஊடகப்பிரிவு – தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாதெனவும், பெரும்பான்மை இனத்தின் சூழ்ச்சிகளுக்குள் அகப்படக் கூடாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (25) காலை உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் றிஷாத் பதியுதீன், முதலமைச்சர் விக்னேஸ்வரன், மஸ்தான் எம்.பி. ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவில் நடைபெற்றபோது அமைச்சர் றிஷாத் தமது ஆதங்கங்களையும், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தினார். இதன்போது அமைச்சர்…

Read More

புதிய சட்டமூலத்தின் நோக்கம் பௌத்த தேரர்களின் குரலை ஒடுக்குவதே!

பௌத்த தேரர்களின் குரலை ஒடுக்குவதற்காகவே அரசாங்கத்தினால் புதிய ஒழுக்க விதிகளை உள்ளடக்கி, சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எஹெலியகொட பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பௌத்த பிக்குகளின் நடத்தை குறித்து ஒழுக்க விதிகள் உள்ளடக்கிய சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் தயாராக இருகிறது.அது மீளாய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். அவ்வாறு இல்லாவிட்டால், தேரர்களுக்கிடையிலும் பொதுமக்களுக்கிடையிலும் பாரிய எதிர்ப்பு உருவெடுக்குமென அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை,பௌத்த…

Read More

தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடையோர் இம் மாத இறுதிக்குள் கைது

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த மாத இறுதிக்குள் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய உள்ளனர். இதேவேளை,தாஜூதீனை கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, லெப்டினன்…

Read More

அரச மருத்துவரின் வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் – ராஜித

தமக்கெதிராக அரச மருத்துவ சம்மேளனத்தினர் வழக்குத் தாக்கல் செய்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் அமைச்சருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக முன்னதாக அரச மருத்துவர் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறித்த பல்கலைக்கழக மாணவர்களின் உள்ளக பயிற்சிகளுக்கு அரச மருத்துவமனைகளில் அனுமதி வழங்கியமைக்கு எதிராகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை, தமது தரப்பு நியாயத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் சேனாரட்ன, நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு ஏற்பவே மாலபே…

Read More

ஒற்றையாட்சி மாறாது; பிரதமர்

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை 21 ஆம் நூற்­றாண்­டுக்கு ஏற்றால் போல் தயா­ரிக்க உள்ளோம். இதன்­போது மக்­களின் கருத்­துக்­க­ளுக்கே பெரும் முக்­கி­யத்­துவம் அளித்து செயற்­ப­டுவோம். நான் ஒரு இலங்­கை­யன். இந்த நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு ஒரு போதும் இட­ம­ளிக்கமாட்டேன் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். நாட்டில் வாழும் அனைத்து இனத்­த­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வதற்கு எனக்கு இட­ம­ளி­யுங்கள். ஒற்­றை­யாட்­சிக்கு முர­ணான அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கமாட்டோம். மக்­களை குழப் பும் வகையில் வீணான எதிர்ப்­பு­களை உட­ன­டி­யாக கைவி­டு­மா­று­ கோ­ரு­கின்றேன். உலக வர­லாற் றில் முதல்…

Read More

மைத்திரி –மஹிந்தவை இணைக்க முயற்சி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான பேச்­சு­வார்த்­தைகள் மீண்டும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான அடிப்­படை செயற்­பா­டு­களை அமைச்சர் எஸ்.பி.திசா­நா­யக்க முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்றார். எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்­றி­பெ­ற­வேண்டும் என்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­வே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் இணைந்து பணி­யாற்­ற­வேண்டும் என கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ளர்கள் தெரி­வித்­து­வ­ரு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கையில் அமைச்சர் எஸ்.பி. திசா­நா­யக்­கவின் தலை­மையில் விரைவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும்…

Read More

இன்று முதல் யோசனைகளை வழங்கலாம்..!

தேசிய அர­சாங்­கத்­தினால் ஸ்தாபிக்­கப்­ட­வுள்ள புதிய அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்தம் தொடர்பில் பொது மக்­களின் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்கை இன்­றைய தினம் முதல் ஆரம்­பிக்­கப்­படவுள்ளதாக அர­சாங்க தகவல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்க எதிர்­பார்க்கும் இச்­செ­யற்­றிட்­டத்தின் முதல்­கட்ட நட­வ­டிக்­கைகள் கொழும்பு மாவட்­டத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது. அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே இந்த விடயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் இவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது. அர­சியல் அமைப்பு சாச­னத்தில் பல்­வேறு மாற்­றங்­களை உள்­வாங்கும் நோக்­குடன் தேசிய அர­சாங்­கத்­தினால்…

Read More

வகுப்­ப­றை­களில் தொலை­பே­சி பாவ­னைக்குத் தடை

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமது கடமை நேரத்தில் வகுப்பறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிக்கக் கூடாதென்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம், சகல வலையக் கல்விப் பணிப்பாளர்கள் மூலமாக, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஆசிரியர்கள் தமது கடமை நேரங்களில் வகுப்பறைகளில் வைத்து கையடக்கத் தொலைபேசிகளை பாவித்தமை மூலம் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை கவனத்திற் கொண்டு, கண்டிப்பான உத்தரவை கிழக்கு…

Read More

அதி­கார பகிர்­வுக்கு செல்வதற்கு தடை­யில்லை : விஜே­தாச

ஒற்­றை­யாட்சி மற்றும் சமஷ்டி என்று வெறும் வார்த்­தை­களை பற்றிப் பிடித்­துக்­கொண்­டி­ருக்­காமல் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­களை தீர்க்கும் வகை­யிலும் தேசியஒற்­று­மையை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லு­மான அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றுக்கே செல்­ல­வேண்­டி­யுள்­ளது என்று நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார். மேலும் ஒற்­றை­யாட்சி முறை­மையின் ஊடாக முழு­மை­யான அதி­காரப் பகிர்­வுக்கு செல்­வ­தற்கு எவ்­வி­த­மான தடை­களும் இல்லை. ஆனால் எவ்­வா­றான முறை­மைக்கு செல்­ல­வேண்டும் என்­ப­தனை மக்­களே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். ஒற்­றை­யாட்சி முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டாது என்று தேசிய அர­சாங்கம் தெரி­வித்­து­வ­ரு­கின்ற நிலையில் ஐக்­கிய இலங்­கைக்­குள்­ளேயே தீர்வு…

Read More

அரசாங்கத்துடன் விரைவில் இணையவுள்ள கூட்டு எதிரணியின் முக்கிய குழுவினர்

கூட்டு எதி­ரணி என்ற நாமத்தில் நாட்டை கூட்­டாக அழித்­தொ­ழிக்கும் கும்­பலில் இருந்து ஒரு குழு­வினர் விரைவில் அர­சாங்­கத்தில் இணை­ய­வுள்­ளனர். புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்­று­வ­தற்­காக மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை ஏற்­க­னவே எமது கைவசம் உள்­ளது. எனினும் நாட்டின் அபி­வி­ருத்­தியை கருத்திற் கொண்­டே­ எம்­முடன் கூட்டு எதி­ர­ணி­யினர் இணை­ய­வி­ருப்­ப­தாக வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமைச்­சரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டத்தை முழு­மை­யாக எதிர்த்து வரும் கூட்டு எதி­ர­ணி­யினர் எமது ஆட்­சி காலை­வாரும்…

Read More

42 வரு­டங்­க­ளுக்கு பின்பு அழைப்பு விடுத்­துள்ள ஜேர்மன் அரசு

ஜேர்­மன் நாட்­டி­லி­ருந்து இலங்கை தலை­வ­ரொ­ரு­வ­ருக்கு சுமார் 42 வரு­டங்­க­ளுக்கு பிறகு அழைப்பு கிடைக்­க­பெற்­றுள்­ளது. இதன்­படி அந்த நாட்டு அர­சாங்­கத்தின் அழைப்­பினை ஏற்று அடுத்த மாதம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜேர்­ம­னுக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ளார். இலங்கை அர­சாங்­கத்தின் சீரான வெளி­நாட்டுக் கொள்­கையின் கார­ண­மாக ஜேர்­மன் நாட்­டி­லி­ருந்து இந்த அழைப்பு கிடைக்­க­ப்பெற்­றுள்­ளது. ஜன­வரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்­றத்­திற்கு பின்னர் அபி­வி­ருத்தி அடைந்து வரும் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவுக்கு அழைப்­புகள் கிடைக்­க­ப்பெற்ற வண்­ண­முள்­ளமை விசேட அம்­ச­மாகும்….

Read More

சூதாட்ட நிலையம் முற்றுகை; 8 பேர் கைது

கொஸ்­வத்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வீடொன்றில் இயங்கி வந்த சூதாட்ட நிலையம் ஒன்று பொலி­ஸா­ரினால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டுள்­ளது. கொஸ்­வத்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட போத்­த­லே­கம பிர­தேச வீடொன்றில் மிகவும் இர­க­சி­ய­மான முறையில் நடத்திச் செல்­லப்­பட்ட சூதாட்ட நிலை­யமே இவ்­வாறு பொலி­ஸாரின் முற்­று­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­ந­ட­வ­டிக்­கையின் போது அவ்­வீட்டில் சூதாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த எட்டுப் பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இவர்கள் நீண்ட நாட்­க­ளாக இவ்­வாறு இந்த சட்­ட­வி­ரோத செயலில் ஈடு­பட்டு வந்­தி­ருப்­ப­தா­கவும், வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­களும் இங்கு சூதாட்­டத்தில் ஈடு­ப­டு­வ­தா­கவும் அவர்­க­ளிடம் மேற்­கொண்ட…

Read More