நான் குற்றவாளி என்றால், தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயார் – றிஷாத்
வில்பத்து பிரதேசத்தில் எமது மக்களோ நானோ காடுகளை அழிக்கவில்லை. யானைகளையோ மிருகங்களையோ கொல்லவில்லை. ராவணா பலய அமைப்பின் செயலாளர் என்னைத் தூக்கிலிட வேண்டுமென கருத்து வெளியிட்டுள்ளமை இனவாதத்தின் வெளிப்பாடாகும் என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வில்பத்து வன பிரதேசத்திலுள்ள காடுகளை அழித்து அங்குள்ள யானைகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளமைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு…
