Headlines

“குளுகோமாவை தோற்கடிப்போம்”

உலக குளுகோமா வாரத்தை முன்னிட்டு ”குளுகோமாவை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பாதயாத்திரை ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (11) முற்பகல் இடம்பெற்றது.   கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இப்பாதயாத்திரை விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பமாகி தேசிய கண் வைத்தியசாலை வரை இடம்பெற்றது. A walk organized to mark the World Glaucoma Week under the theme “Beat Invisible Glaucoma” held under the patronage of President Maithripala…

Read More

கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிர மோசடி மற்றும் ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(11) காலை முன்னிலையானார். அது , ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். இன்று காலை 8.45 மணியளவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆணையத்திற்கு வந்ததாக அதன் பேச்சாளர் ஒருவர்   தெரிவித்திருந்தார்.

Read More

ஸக்காத் அமைப்புக்களுடனான சந்திப்பும், தகவல் திரட்டலும்

தேசிய ஷூரா சபையின் சமூக பொருளாதார உபகுழு நடாத்திய ஆய்வுகளின் படி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு கூட்டு ஸகாத் நிதிகளின் முறையான விநியோகம் பிரதான பங்கு வகிக்கிறது. அந்தவகையில் இலங்கையில் பிராந்திய, பள்ளிவாசல் (கிராம) மட்டங்களில் ஸகாத் நிதிகளை  சேகரித்து அவற்றின்  மூலம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுவரும் அமைப்புகள், பள்ளிவாசல் ஸக்காத் அமைப்புக்களுடான சந்திப்பொன்றை மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரதும் அனுபவங்களைப் பரிமாறி இத்துறையை மேலும் மேம்படுத்துவதற்ககான வழிமுறைகளைக் கண்டறிய இவ்வுபகுழு உத்தேசித்துள்ளது. இச்சந்திப்பிற்கு நாடாளாவிய…

Read More

ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலணி

கடந்த காலங்களில் துன்புறுத்தல்களுக்கும் கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக கண்டறிந்து நியாயம் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தலுக்கு ஏற்ப விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2005 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2015 ஜனவரி வரையான காலப்பகுதிக்குள் தொழில்சார் ஊடகவியலாளராக பணியாற்றி அநீதிகள், துன்புறுத்தல்கள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகியவற்றை எதிர்கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இவ்விசேட குழுவின் மூலம் நிவாரணம் வழங்கப்படும். அநீதி இழைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் தமது தொழில்சார் அடையாளத்துடன் தனக்கு இழைக்கப்பட்ட…

Read More

ஆங்சான் சூகி மியான்மர் அதிபராக மாட்டார்

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மேல் சபை, கீழ் சபை மற்றும் ராணுவம் மூன்றும் தன்னுடைய தரப்பிற்கு ஒரு அதிபர் வேட்பாளரை மார்ச் 17-ம் தேதிக்கு முன்பாக தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மார்ச் 17-அன்று பாராளுமன்றத்தில் அந்த பெயர்களை தாக்கல் செய்யப்படும். பின்னர் 664…

Read More

மஹிந்தவிற்கு எதிரான வழக்கு…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களுக்காக மக்களை ஏற்றிச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு 142 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்துமாறு கோரி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு இலங்கை போக்குவரத்துச் சபை வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த…

Read More

குற்றத்தை ஒப்புக்கொண்டார் துமிந்த

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான சொத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்று, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், குற்றங்களை ஒப்புக்கொண்டார். அத்துடன், இது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள மூன்று வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கும் அவர் இன்று (11), கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தார்.

Read More

யோஷிதவுக்கு எதிரான ஆதாரங்கள் அழிப்பு

சி.எஸ்.என். தொலைக்காட்சி மூலம் பொதுச்சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் லெப்.யோஷித ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிரான இணைய ஆதாரங்கள் சில வெளிநாட்டில் இருந்து செயற்படும் அடையாளம் தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்டுள்ளன. கனடா, அவுஸ்திரேலியாவில் இருந்தே இவ்வாறு அந்த சான்றுகள் அழிக்கப்பட்டுள்ளமை கணினி அவசர நிலைமைகள் தொடர்பிலான ஆய்வகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நடவடிக்கைக்காக சி.எஸ்.என். நிறுவனத்தின் முன்னாள் தகவல் தொழில் நுட்ப முகாமையாளரின் மின்னஞ்சலே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதிக் குற்றப்…

Read More

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம்!

பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அரசாங்கத்துடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்து 307 மில்லியன் ரூபாக்களை சம்பாதித்தமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கொழும்பு 5ல் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கருதப்படும் என்.ஆர். கண்சல்டன்ஸ் மற்றும் க்வர்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ள அலுவலகங்களில் இருந்து கடுவலை நீதிவானின் உத்தரவுக்கு அமைய 12 ஆவணங்களும் 4 கணினிகளும் புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணைகள்…

Read More

நல்லாட்சி அரசாங்கம் 48 பௌத்த பிக்குகளை கைது செய்துள்ளது!

நல்லாட்சி அரசாங்கம் இதுவரையில் 48 பௌத்த பிக்குகளை கைது செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முற்போக்கு தேசிய ஒன்றியத்தின் தலைவர் அனுருத்த பொல்கம்பொல குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்… சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பௌத்த பிக்குகள் 48 பேரை நல்லாட்சி அரசாங்கம் கைது செய்துள்ளது. யானைக்…

Read More

தம்மாலோக தேரரின் பிணை மனு மீது இன்று விசாரணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் உடுவே தம்மாலோக தேரரை பிணையில் விடுவிக்குமாறு கேட்டு முன்வைக்கப்பட்டுள்ள மனு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சட்ட ரீதியான அத்தாட்சிப் பத்திரம் இன்றி யானையொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலஞ் சென்ற அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகளில் சந்தேகநபரான உடவே தம்மாலோக தேரரை சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கலந்து கொள்ள அனுமதிக்குமாறும் கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான்…

Read More

தங்கொட்டுவயில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிப்பு

சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில் எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். பெரும்பாலும் வேனில் ஏற்பட்ட தீ காரணமாக இவர்கள் அனைவரும் எரியுண்டு இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More