Headlines

இந்திய தேசத்துக்கு நாங்கள் துணை நிற்போம் – அஸாதுதீன் ஒவைஸி




பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டுவரும் பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ராணுவத்தினருக்கும், தேசத்துக்கும் துணை நிற்போம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைஸி தெரிவித்தார்.
இதுகுறித்து ஹைதாராபாதில் செய்தியாளர்களிடம் அவர், வியாழக்கிழமை கூறியதாவது:பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை எங்கள் கட்சி எதிர்க்கும். இந்திய ராணுவத்துக்கும், தேசத்துக்கும் நாங்கள் துணை நிற்போம் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *