Headlines

எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை இன்று

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று (6) மீண்டும் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 8 இராணுவ புலனாய்வு அதிகாரிகள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போயிருந்தார். பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி வழங்கிய முறைபாட்டிற்கு அமையவே குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Read More

இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் கைது!

மீகஹவத்தை – சியம்பலாபேவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நவகமுவ பகுதியில் வைத்து பேலியகொடை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. சியம்பலாபேவத்தை பகுதியில் கடந்த முதலாம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்திகள் நான்கையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்களை இன்று மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

உயர்ஸ்தானிகரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரை தாக்கிய ஐந்து பேரையும் விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (5) கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரையும் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே இவர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சோலாங்கூர் பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றம் 26 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த…

Read More

மொசம்பிக் நாட்டின் நட்சத்திர பாடகர், இஸ்லாத்தில் இணைந்தார்

மொசம்பிக் நாட்டின் பிரபல நட்சதிர பாடகர் அர்சீன் அண்மையில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்தனது பெயரையும் யாசீன் என்று மாற்றி கொண்டார் தற்போது ஹஜ் செய்ய வந்திருக்கும் அவர் தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டது பற்றி குறிப்பிடும் போது, தன்னிடம் ஆரம்பத்தில் இஸ்லாத்தை பற்றி நல்ல எண்ணம் இருக்கவில்லை என்பதையும் ஊடகங்கள் சொல்வது போல் இஸ்லாம் தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சித்தந்தம் என்றே தாம் எண்ணியதாக கூறிய அவர் ஒரு நாள் கஃபாவை தனது கனவில்…

Read More

யால தேசிய பூங்காவால் 6000 இலட்சங்கள் வருமானம்!

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை ருஹுனு யால தேசிய பூங்காவின் வருமானம் மாத்திரம் 6000 இலட்சங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்தில் சுமார் 5 இலட்சத்திற்கு அதிகமான உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால பூங்காவை பார்வையிட வருவதாக வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தின் ஒரு நாளில் மாத்திரம் இதன் வருமானம் 45 இலட்சமாக காணப்பட்டதாகவும்,ஏனைய நாட்கள் வழமைப் போலவே 25 இலட்ச வருமானங்களை பெற்றதாகவும் அவர் மேலும்…

Read More

ஐ.தே.க.வுக்கு 70 ஆண்டுகள் பூர்த்தி!

ஐக்கிய தேசியக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் எழுபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கடந்த 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. இந்த நாட்டின் முதல் பிரதமரான டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையில் ஐக்கிய தேசியக் கட்சியானது மிதவாத கொள்கைகளைப் பின் பற்றி பல தடவைகள் நாட்டின் ஆட்சியை முன்னெடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திலும் பிரதான பங்காளிக்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி திகழ்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு…

Read More

அன்சார் மீது தாக்குதல் நடத்தியோருக்கு உரிய தண்டனை வழங்குங்கள்

-அமைச்சரின் ஊடகப்பிரிவு – மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹீம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் மலேசியாவில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன், மலேசிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இன்று மாலை(06/09/2016) மலேசிய துணைப் பிரதமர் தத்தோ சாஹிர் ஹமீத் அவர்களை, அமைச்சர் றிசாத் சந்தித்து தனது கடுமையான கண்டனத்தையும், விசனத்தையும் வெளிப்படுத்துவார். மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு  அங்கு…

Read More

சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை: ஒபாமா

வலிமையான நாடாக வளர்ந்துவரும் நாடான சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். சீனாவில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முன்னதாக அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது. அந்த பேட்டியில் சீனாவைப் பற்றிய தனது கண்ணோட்டத்தை ஒபாமா பதிவு செய்துள்ளார். சர்வதேச சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் நாம் கட்டுப்படுகிறோம் என்றால், அது நிர்பந்தத்தினால் அல்ல. ஆனால், சர்வதேச ஒழுங்குமுறையை நாம் ஏற்றுக் கொள்கிறோன்…

Read More

நூலகத்தில் புத்தகத்தை திருப்பி தராவிட்டால் ஜெயில் தண்டனை

நூலகத்தில் இருந்து எடுக்கும் புத்தகங்களை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றும் செயல்கள் எல்லா நாடுகளிலும் வழக்கம் போல் இருக்கிறது. அமெரிக்காவில் இப்படி ஏமாற்றும் நபர்களுக்கு ஜெயில் தண்டனை கொடுக்கும் சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். அங்குள்ள அலபாமா நகரில் உள்ள நூலகத்தில் ஏரளமான புத்தகங்கள் திரும்பி வரவில்லை. சுமார் ரூ.1½ கோடி மதிப்புள்ள புத்தகங்கள் இப்படி திரும்பி வராமல் உள்ளது. எனவே புத்தகங்களை திருப்பி தராதவர்களுக்கு கடும் தண்டனை வழங்க அந்த நகர நிர்வாகம் முடிவு செய்தது. அமெரிக்காவை பொறுத்தவரை நாடு…

Read More

சுகாதார அமைச்சர் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு விஜயம்

எல்பிட்டடிய அரச வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை  வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளது . சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சமீபத்தில் இந்த வைத்தியசாலைக்கு விஜயம் செயது இது தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தினார். பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க முன்வைத்தத கோரிக்கை;கு அமைவாக வைத்தியசாலைக்கு அமைச்சர் ராஜித சேனாரத்தின இந்த விஜயத்தை மேற்கொண்டார்.

Read More

தடையை மீறி 3 ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா

சர்வதேச தடையை அத்துமீறிய வகையில் இன்று வடகொரியா அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்தநாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம்…

Read More

அச்சம் இன்றி வாழக்கூடிய சூழுல் உருவாக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி

நாட்டில் இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி நல்லிணக்கமும் சமூக ஒற்றுமையும் சமாதானமும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அனைத்து சமூகங்களும் சுதந்திரமாக எதுவித அச்சமும் இன்றி வாழக்கூடிய சூழுல் இன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். சிரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குருணாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் நேற்று (4) நடைபெற்ற வருடாந்த கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயங்கனை குறிப்பிட்டார். அனைத்து சமூகங்களும் சுதந்திரமாக அச்சம்…

Read More