Headlines

தவறான சமிக்ஞையை வழங்கிவிடக்கூடாது!

-நவமணி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம் – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொழுகை அறை மூன்றாவது முறையாக தாக்குதலுக்குள்ளான சம்பவம் இரு தினங்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது. இரவு வேளையில் இனம்தெரியாத சிலர் தொழுகை அறையை தாக்கி அதற்குள்ளிலிருந்த மின் விசிறிகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் படிக்கும் சுமார் 650 முஸ்லிம் மாணவர்களுக்கு ஐவேளை தொழுகையை நிறைவேற்றுவதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் ஒதுக்கப்பட்ட பத்து பத்தடியிலான அறையே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் நாட்டுக்கு வழங்கும்…

Read More

கனடாவில் விபத்து – தாயும், மகளும் பலி

கனடா – ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே மற்றும் அவரின் மகளான 4 வயது சாவனி ஆகியோர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர்…

Read More

9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் கைது

9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் ஒருவர் கண்டி பொலிஸ் பிரிவின் பெண்கள்மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வெளிநாடொன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில் அங்கேயே குறித்தகுழந்தையையும் பிரசவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பே இந்தப் பெண் குழந்தையுடன் இலங்கை வந்ததாகவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் ஊடாக 2000 ரூபாவிற்கு குறித்த குழந்தையைவிற்கும் போதே குறித்த பெண்ணும், முச்சக்கர வண்டி சாரதியும் கட்டுகஸ்தொட்டபொலிஸ் பிரிவில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…

Read More

கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு

கொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இதற்கான உத்தரவை நேற்று (6) பிறப்பித்தார். குறித்த வாகனத்துக்குள் மனித இரத்தம் அல்லது மனித உடற்பாகங்கள் இருக்குமானால் அது தொடர்பில் மரபணு பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதவான உத்தரவிட்டுள்ளார். இதேவேளை இந்தக் கொலை சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் கைத்தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக ஐந்து தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து முழுமை…

Read More

மிருகக்காட்சி சாலையில் இரு வங்கபுலிகள்

தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு இரண்டு வங்கப் புலிக்குட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கபுலி இனம் வேகமாக அழிவடைந்து வரும் ஓர் இனம் என்பதுடன், இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பழங்குடி விலங்கு வகையை சேர்ந்தவை. இந்தப் புலிக்குட்டிகளின் நிறை 109 தொடக்கம் 227 கிலோ கிராம் என தெஹிவளை மிருக்காட்சி சாலையின் கடமை நேர பணிப்பாளர் ஜெனரல் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார். காடுகளில் வசிக்கும் போது இவைகளின் ஆயுட்காலம் 15 வருடங்கள் என்பதுடன் மிருகக்காட்சிசாலைகளில் வசிக்கும் போது…

Read More

நாட்டில் நிலவும் நீர் தட்டுப்பாடு!

நாட்டில் நிலவும் வெப்பத்துடனான காலநிலை மாற்றங்களினால் நாட்டின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென்மாகாணத்திலேயே இந்த நிலைமை அதிகம் காணப்படுவதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலைமை புத்தளம், அநுராதபுரம் ஆகிய பகுதிகளிலும் நிலவுவதாகவும் இதனால் தென்மாகாணத்தின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கங்கைகளின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள தேசிய…

Read More

நாடகமாடிய வர்த்தகர் கைது

கடந்த ஞாயிற்றுக் கிழமை திருகோணமலையில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் இன்று காலை ஹல்துமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தகர் ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு பஸ்ஸில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் நஸ்ரின் கடன் தொல்லைகளிலிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாகியிருந்துள்ளார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சந்தேகநபர் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்வதற்காக…

Read More

தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு அழைப்பு

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் நாட்டுக்கு அழைக்கப்பட உள்ளார். அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாடு திரும்பமாறு உயர்ஸ்தானிகர் இப்ராஹிமிற்கு வெளிவிவகார அமைச்சு நேற்று (6) அறிவித்துள்ளது. இலங்கைக்கு மீள அழைக்கப்பட உள்ள உயர்ஸ்தானிகரின் பதவி தொடர்பில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜதந்திரி ஒருவர் மீது தக்குதல் நடத்துவது பாரதூரமான நிலைமை எனவும் மலேசியாவில்…

Read More

முஸ்லிம்களின் அபிலாஷைகளை புறந்தள்ளும் எந்தவொரு மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டோம்

-சுஐப் எம்.காசிம்    – முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் தூக்கி வீசப்பட்டதாலும், ஆயுதக் கலாசாரத்தின் அட்டூழியங்களைத் தாங்க முடியாததாலுமே, சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்காக பெருந்தலைவர் அஷ்ரப் தனிக்கட்சி அமைத்தார். எமக்கென்று ஒரு கட்சி வேண்டும், எமக்கென ஒரு குரல் வேண்டும், எமக்கென்று ஓர் இயக்கம் தேவை என்ற நோக்கிலே மர்ஹூம் அஷ்ரப் இந்தக் கட்சியை ஆரம்பித்து, தைரியமாக முஸ்லிம் சமூகத்தின்  அரசியல் பயணத்தை மிகவும் கச்சிதமாக முன்னெடுத்தார். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் முகவரியை அவர் பெற்றுத்தந்தார். பேரம்…

Read More

அன்சார் விவகாரம்: பிரதமர் கண்டனம்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Read More

கல்குடா சமூகமே உஷார்! ஷீஆக்களின் குர்பான் இறைச்சி!

ஸஹபாக்களை நேசிப்போர் ஒன்றியம் – கல்குடா என்று உரிமை கோறப்பட்டு கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசங்களில் துன்டு பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சமூகப்பணிகளின் பெயரில் கல்குடா முஸ்லிம்களிடம் இடம் பிடிக்க ஷீஆக்கள் பிரயத்தனம் கல்குடா சமூகமே உஷார்! நமது பிரதேசத்தில் ஷீஆ விஷ விதையை நட்டு, ‘தகிய்யா’ எனும் கபட நாடகத்துக்குள் பச்சோந்திகளாய் நடித்து, தமது வழிகெட்ட கொள்கைகளை பரப்பிவந்த ஷீஆக்கள், இன்று அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜீவமரண போராட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றனர். ஜம்மியதுல் உலமாவின்…

Read More